அவள் மேலும் திகைத்து நின்றாள்.
“உங்களுக்கு என்ன தெரியும்பா?”
“எனக்கு எல்லாமே தெரியும்மா. சிவா தம்பி என்னைப் பார்க்க வந்தப்ப என்ன சொன்னார் தெரியுமா?” அவர் சொல்ல ஆரம்பித்தார்.
தன்னை விரும்பாதவனை துரத்திக்கொண்டு இந்தளவுக்கு வந்திருக்கிறோமே என்று தன்னையே வெறுத்தாள் மோகனா. தொழிலில் ஈடுபட்டு அதன் நெளிவு சுளிவுகள் தெரிந்தபிறகு ஜெயிக்காது என்று தெரிந்தும் அதற்காக அவள் முட்டிக்கொள்ளத் தயாராக இல்லை. இந்த எண்ணம் அவளுக்கு வரவேண்டும் என்றுதானோ என்னவோ அவளை தொழிலில் ஈடுபடுத்துமாறு சிவனேஸ்வர் தனிக்கொடியிடம் சொன்னது.
அந்த இடத்தில் தான் வேண்டாதவள் என்ற உண்மை மனதில் உறைத்தது. அவள் சிவனேஸ்வரின் அருகில் வந்தாள்.
“சிவா! நான் உங்களைக் காயப்படுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோகும்போது அச்சு அசலாய் துளசி மாதிரியே ஒரு பொண்ணைக் கண்டேன். அப்போதே அவள்தான் துளசியின் மகள் என்று எனக்கு யாரும் சொல்லாமலே புரிந்தது. துளசியின் அதே கருணை மனம் அவளிடமும் குடிகொண்டிருந்தது. அப்போதே நான் முடிவு பண்ணிவிட்டேன். அவள்தான் என் மருமகள் என்று.” சொல்லிவிட்டு அவர் மற்றவர்களைப் பார்த்தார்.