“வேண்டாம்மா. நீயும் துளசியும் வேறு வேறு இல்லை. பாசம் வைக்கிறதில் அவளையும் நீ மிஞ்சிட்டே.” கரகரத்த குரலில் சொன்னார் தர்மராஜ்.
சிவனேஸ்வர் தன் மனைவியைக் காதலுடன் பார்த்தான்.
“ஆமாண்ணா! நீங்க சொல்றது ரொம்ப சரி. துளசி அவ புருசன் மேல உயிரையே வைத்திருந்தாள். அந்த விபத்தில் அவ புருசன் மட்டும் மாட்டியிருந்தா கூட அதன் பிறகு அவ உயிரோடு இருந்திருப்பாளோ என்னவோ? அதான் இரண்டு பேரும் இணை பிரியாமல் போயிட்டாங்க.”
அவள் சொல்லுவதை தர்மராஜூம் ஆமோதித்தார்.
“சரி சரி பேசிக்கிட்டிருந்தது எல்லாம் போதும். அண்ணாவையும் அண்ணியையும் தனியா விடுங்க. அவங்களுக்குள்ள பேசிக்கொள்ள எவ்வளவோ இருக்கும்.”
சந்தியா சொல்ல அவளை நன்றியுடன் பார்த்தான் அவளின் பாசக்கார அண்ணன
...
This story is now available on Chillzee KiMo.
...
்சு வச்சிருக்கிறார். நான்தான் முட்டாள்தனமாய் நடந்துகொண்டுவிட்டேன்.’
“என்னை மன்னிச்சிருங்க.”
“மன்னிப்பு கேட்கிற நேரமாடி.” அவள் காதருகில் அவன் ஏதோ முணுமுணுக்க அவள் வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள்.
“ஆமாம். நான் உண்டாகியிருக்கிற விசயம் எப்படி தெரியும்?”