அனைவரின் முகமும் வியப்பில் ஆழந்தது வடிவைத் தவிர.
அப்ப உமா வடிவு அத்தையோட பொண்ணு இல்லையாப்பா?”
சிவனேஸ்வர் கேட்க வடிவின் முகத்தில் வலி தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்த தர்மராஜ் மகனிடம் மறுத்துப் பேசினார்.
“பெற்றால்தான் அவள் பொண்ணா. அவள் ஐந்து வயதிலிருந்து உமாவை தன் மனதில் தாங்கி வளர்த்திருக்கிறாள். அவளும் எனக்கு சகோதரிதான். உமாவைப் பெண் கேட்கப் போகும் போது வடிவு பெரிய பணக்கார இடத்தில் மகளைக் கொடுத்தால் அவள் வாழ்வு என்னவாகுமோ என்று பயந்தாள். அப்போதுதான் சிறுவயதில் நாங்கள் குடும்பத்தோடு துளசியோடு எடுத்துக்கொண்ட போட்டோவை காண்பித்தேன். அதன் பிறகுதான் அவள் ஒத்துக்கொண்டதே. பின்ன உங்க பணத்தை பார்த்துத்தான் அவள் ஒத்துக்கொண்டாள் என்று நினைத்தீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ி அவளுக்குப் புரிந்தது.
“இல்லை மாமா. என்னைப் பொறுத்த வரைக்கும் இவங்கதான் என் அம்மா. நீங்க சொன்னீங்களே துளசியம்மா. அவங்க இருந்திருந்தா கூட இப்படி வளத்திருப்பாங்களான்னு தோணுது. அவங்க ஆத்மா இப்ப இங்க இருந்தா கூட நான் சொல்றதுதான் சரின்னு சொல்லும். நான் எந்த போடடோவையும் பார்க்க விரும்பலை.”