“ யாருடா மங்குனி ?? யார்மங்குனி ? என் மாமாவை நான் என்ன வேணும்னாலும் திட்டுவேன்… கொஞ்சுவேன் … ஆனா,நீ எப்படி அவனை திட்டலாம் ? கேட்க ஆளு இல்லைன்னு நினைச்சியா ? துவைச்சி காயப்போட்டிருவேன்” என்று காளி அவதாரம் எடுத்தாள் மித்ரா…
“ ஓம் ஷக்தி.. பராஷக்தி…சங்கமித்ரா ஷக்தீ…ஆளை விடு தாயே” என்று அலறினான் அவன்..சிறிது நேரம் அவனை ஆசைத்தீர அடித்தவள் சோர்வாய் அமர்ந்தாள்..
“ ஆறே நாளில் எல்லாத்தையும் ரெடி பண்ண முடியுமா அன்பு ? நிறைய வேலை இருக்கு..இத்தனை நாளாய் போனில் பேசினோம்..அதனால் ஓரளவுக்கு மாமாவுக்கு எதையும் சொல்லாமல் மறைச்சேன்..ஆனா, அவன் பக்கத்துல நின்னுகிட்டு என்னால எதையும் மறைக்கவே முடியாது டா…” என்றாள் மித்ரா சோகமாய்…
“அடடே…யேய் அழுமூஞ்சி, அதெல்லாம் நாம ஷக்தி கிட்ட மறைக்கிற மாதிரி சூழ்னிலை வரவே வராது…நாந்தான் இருக்கேன்ல? எல்லா வேலையும் நான் பார்த்துக்குறேன்…”
“ இந்த நேரத்துல மதி அண்ணா,இங்க இருந்தா நல்லா இருக்கும்ல ?”
You might also like - Unnal magudam soodinen... A romantic story...
“அடிப்பாவி,ஆளாளுக்கு அந்த மனுஷனை தேடினா, அவரும்தான் என்ன செய்வாரு ? நாமலே பார்த்துப்போம்…சரி நீ அவங்களுக்கு கால் பண்ணியா ? சிங்கப்பூர் என்ன சொல்லுது ?” என்று பேச்சை மாற்றினான் எழில்…
“ம்ம்ம் ,தேனு ஸ்கைப்ல கூப்பிடுறேன்னு சொன்னா…” என்றவாரு மடிகணினியை உயிர்ப்பித்தாள் மித்ரா…
“சங்கு கூட பேசப்போறேன் வர்றியா ?” என்று புவனாவை தன்னுடன் அமர்த்தி கொண்டு மடிகணினியை திறந்தாள் நிலா… ஏற்கனவே ஷக்தி,மித்ரா அனைவரை பற்றியும் நிலாவின் மூலமாய் தெரிந்து வைத்திருந்தாள் புவனா… மித்ராவுடன் பேச கொஞ்சம் ஆர்வமாய் இருந்தாலும் அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் ஆப்பிள் ஜூஸ் அருந்தி கொண்டிருந்தாள் அவள்..
“ ஹேய் தேனு…”
“ஹாய் சங்கு “
“என்னடீ சிங்கப்பூர் என்ன சொல்லுது ?”
“ ஜில்லுன்னு இருக்கு …அடுத்த தடவை நாம எல்லாரும் சேர்ந்து இங்க வரனும்”
“ ஒகே ஒகே… ஆமா,அண்ணா எங்க ? “
“ ஹேலோ மேடம் ஒரே நேரத்தில் எத்தனை பேரு கிட்ட பேசுவிங்க நீங்க ? முதலில் என்கிட்டபேசு…. அதுக்கு பிறகு அண்ணாகிட்ட பேசலாம் “ என்றாள் அதுவரை அமைதியாய் இருந்த புவனா.. ஒரே கணம்,அவளை புருவம் உயர்த்தி பார்த்தாள் மித்ரா… பிறகு பொறுமையாய்
“ஓஹோ நீதான் புவனாவோ “ என்றாள்
“ ஆஹான், நீதான் மித்ராதேவியோ” என்றாள் புவனாவும் இடக்காய்..
“ ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருந்துகிட்டு, நீயெல்லாம் கட்டபொம்மன் படம் டைலாக் பேசலாமா ?”
“ பாருடா, கல்யாணம் முடிஞ்சு உன் மக்கு மாம்ஸ் கூட ஹனிமூன் போகாம,இங்க என் ஹனிமூன் கூட உனகென்ன பேச்சு ?” என்று புவனாவிடம் இருந்து பதில் வந்தது… கொஞ்சமும் இடைவெளி விடாமல் இருவரும் சரமாரியாய் பேசிக்கொண்டே போக, நிலாவும் மதியும் கொஞ்சம் பதட்டமாய் ஆகினர்… அதை கவனித்த புவனா
“போதும் மிது பேபி, ரெண்டு பேரும் ரொம்ப டென்ஷன் ஆகுறாங்க… சோ நாம நாடகத்தை முடிச்சுக்கலாம் “என்றாள் புவனா
“ என்னடீ சங்கு இதெல்லாம்??”
“ அடியே தேனு, எல்லாம் நீ பண்ணின வேளைதான் ! “
“ எனக்கொன்னும் புரியல” என்றான் மதியும்….
“ அண்ணா, நான் எப்போ நிலாவுக்கு ப்ரண்ட் ஆகி, அந்த விஷயம் புவனாவுக்கு தெரிஞ்சதோ அப்போவே அவ என்னை பேஸ்பூக் ப்ரண்டா சேர்த்துகிட்டா…நான்,மாமா, புவனா எல்லாரும் இப்போ திக் ப்ரண்ட்ஸ் ஆச்சே… இந்த குட்டிச்சாத்தான் தான் உங்களுக்கு இது இப்போ தெரிய வேணாம் ..சர்ப்ரைஸ்ன்னு சொன்னா”
என்று மொத்தத்தையும் போட்டு உடைத்தாள் மித்ரா ..
" ஹா ஹா " என்று புவனா சிரிக்க தொடங்கும் முன்னரே, மதியும் நிலாவும் இடது வலது என அவளை சுற்றி இருபக்கம் உட்கார்ந்து அவளது செவியை திருகினர் ..
" வாலு ... வாலு .... ஏன் டீ உன் வாலை சுருட்டிகிட்டு இருக்க மாட்டியா டீ ? "
" ஹே ஹனிமூன் .. எல்லாம் என் எதிர்காலத்திட்டம் தான் ! " என்றால் புவனா பீடிகையுடன் ..
" என்னம்மா திட்டம் ?"
" அது வந்து அண்ணா , எப்படியும் நான் உங்க ரெண்டு பேரின் கல்யாணத்துகாகத்தான் இந்தியா வருவேன் ... நீங்க ஹனிமூனை பார்த்து சைட் அடிக்க , அவள் உங்களை பார்த்து சைட் அடிக்க , எனக்கு அங்க வந்தா போர் அடிக்க கூடாதுல ? அதான் இப்போவே கூட்டணி அமைச்சு வெச்சுக்குறேன் "
" ஹும்கும் ... அதுக்கு உனக்கு சங்குதான் கிடைச்சாளா ? அவ அவளுடைய மாமாவை பார்த்தா உலகத்தையே மறந்துடுவா "
" அது எனக்கு தெரியாதா ஹனிமூன் ? அதனாலத்தான் , ஷக்தியை என் நண்பன் லிஸ்ட் ல சேர்த்துட்டேன் .. அவன் என்னதான் காதல் கொண்ட ஹீரோவா இருந்தாலும் , ப்ரண்ட்ஷிப் க்கு தான் முதலிடம் தரணும்னு அவனை ட்ரைன் பண்ணி வெச்சு இருக்கேன் "
" அடியே என் மாமாவை நீ ட்ரைன் பண்ணுறியா ?"
" அச்சச்சோ , குரங்கை ட்ரைன் தானே பண்ணுவாங்க லாயரம்மா ? அதுக்கு வேறேதும் வார்த்தை இருக்கா என்ன ?"
" நீ இந்தியா வா டீ , உன் மேல பொய் கேசு போட்டு உள்ளே அனுப்புறேன் "
" ஆஹான் , நான் அதுக்கு முன்னாடியே உன் மாமாவை கிட்னாப் பண்ணிடுவேன் .. அவனை காப்பாத்தனும்னு நீ என்னை ரிலீஸ் பண்ணிற மாட்டியா பேபி ?"
" குட்டிமா , எனக்கு மித்ரா வை டபல் ஆக்ஷன்ல பார்க்குற மாதிரி இருக்கு " என்றான் மதி அவர்களின் உரையாடலை கண்டு ..
நிலாவோ " எனக்கு ரெண்டு குட்டிசாத்தனை பார்குற மாதிரி இருக்கு மது .. எதுக்கும் நம்ம கல்யாண டைம்ல , இதுங்க ரெண்டையும் மீட் பண்ணவிடக்கூடாது நினைக்கிறேன் "
" அடிங்க , எங்கண்ணா கல்யாணம் நாங்க இல்லாமல் நடக்குமா ? நடக்க விட்டுருவோமா ? என்ன மிது ?" என்று மித்ராவை தன்னோடு இணைத்து கொண்டாள் புவனா ..
" அப்படி சொல்லு டி என் செல்லகுட்டி " என்று ஸ்கைப் மூலமே ஹை 5 கொடுத்தாள் சங்கமித்ரா .. கொஞ்ச நேரம் இப்படியே பேசிக்கொண்டு இருந்தவள் , இறுதியாய் ஷக்தி அங்கு வருவதை பற்றி கூறினாள் ..
" ஹே உன் மக்கு மாம்ஸ் கு உன்னை பிரிஞ்சு இருக்க முடியலையா ? ரொம்ப தான் சீன் காட்டுறான் மணிரத்தினம் ஹீரோ " என்றாள் புவனா சீண்டலாய் ..
" ஹே என் மாமா என்னை பார்க்க வரார் உனக்கென்னடி " என்று போர்க்கொடி தூக்கினாள் மித்ரா..
" அம்மா தாயே தெய்வங்களா , காதுல இருந்து ரத்தம் வருது " என்று இடைபுகுந்தான் எழில் ..
" ஹே வெங்காயம் .. நீயும் இங்கதான் இருக்கியா டா .. ஹொவ் ஆர் யூ மேன் " என்றாள் புவனா ..
" அடிப்பாவி , எழிலும் உனக்கு ப்ரண்டா ?" விழிகளை விரித்தாள் தேன்நிலா ..