" அப்பா , மித்ரா எங்க ?"
" அது "
" மிது " என்றபடி அவர்கள் அறைக்கு சென்றவன் அவளை காணமல் ஏமாந்தது அவன் முகத்திலேயே தெரிந்தது ..
" அது வந்து அண்ணா , காவியாவுக்கு உடம்பு சரி இல்லையாம் .. அதான் அண்ணி அங்க இருக்காங்க " என்று திக்கி திணறி சொன்னாள் முகில்மதி ..
" அப்போ , மித்ரா வீட்டுக்கு வரவே இல்லையா ?"
" அது "
" உண்மைய மட்டும் சொல்லு மதி " என்றான் ஷக்தி .. அவன் முகத்தை பார்த்து கொண்டு பொய் சொல்ல இயலாமல் முகிலா " இல்லை " என தலையசைத்தாள் ..
" டேய் அன்பு , எழுந்திரி ... கழுதை எழுந்திரி டா "
" ஆஅ ... ஏன் டீ அஞ்சலி படம் க்ளைமாக்ஸ் மாதிரி எழுப்பற ? இப்போதானே தூங்கவே போனேன் ?"
You might also like - Kanaamoochi re re... A romantic comedy...
" ஷக்தி வரான் "
"என்னடி புலி வருது மாதிரி சொல்லுற ? கொஞ்சம் தெளிவா சொல்லேன் "
" டேய் லூசு , ஷக்தி சர்ப்ரைஸ் தரேன்னு இன்னைக்கே வந்துட்டாங்க டா ... நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சதும் கோபமாய் காரை கெளப்பிகிட்டு வந்துகிட்டு இருக்காராம் "
" உன் மரியாதையில தீய வெச்சு கொளுத்தணும் டீ .. சரி இப்போ என்ன பண்ணுறது ?"
" பக்கி நானும் அதேதான் யோசிக்கிறேன் " என்றவள் வீட்டு வாசலிலேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள் ..
" விடு மித்ரா , ஷக்தி சாருக்கு நாம சர்ப்ரைஸ் கொடுத்தா சரியா போச்சு " என்றாள் காவியா
" அதில்லை காவியா .. அவன் கோபத்துல டிரைவ் பண்ணுறான் ... பத்திரமா வந்து சேரனும் .. வந்ததும் முதல் வேலையா இப்படி கோபத்துல வண்டி ஓட்டாதே ன்னு சொல்லணும் "
" காவியா , உங்க வீட்டுல எந்த தூண் ரொம்ப ஸ்ட்ரோங்ன்னு சொல்லேன் ..எனக்கு முட்டிக்கணும் போல இருக்கு "
" டேய், வா நானே ஹெல்ப் பண்றேன் " என்று உறுமினாள் மித்ரா .. சிறிது நேரம் இங்கும் அங்குமாய் நடந்தவள் வாசலிலேயே அமர்ந்துவிட்டாள் .. ஷக்திக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது ..அப்படி அவன் கோபம் அடைந்தால் , அவனை சமாதனம் செய்வதற்குள் பெரும்பாடு ஆகிவிடும் ..
" மாமா , என் மேல ரொம்ப கோப படாதே ப்ளீஸ் .. மிது பாவம்ல ? பத்திரமா என்கிட்ட வந்திடுவியாம் " என்றவள் கண்மூடி அப்படியே அமர்ந்தாள் .. நேரங்கள் வேகமாய் கரைய , காவியாவும் எழிலும் அமர்ந்தபடியே உறங்கினர் .. சங்கமித்ரா மட்டும் அவனை நினைத்து கொண்டே அமர்ந்திருந்தாள் ...
சட்டென அவளுக்குள்ளேயே அசரீரி கேட்டது .. " ஹே மித்ரா, என்ன இதெல்லாம் ஓவரா இருக்கே ? உன் மாமாவின் கோபத்துக்கு பயந்து இருக்குற ஆளா நீயி ? இந்நேரத்துக்கு ஷக்தி வரான்னு சந்தோஷத்துல துள்ளி குதிச்சிருக்க வேணாமோ ? மித்ராவாலேயே ஷக்தியை சமாளிக்க முடியலைன்னா , வேற யாரு சமாளிப்பாங்க " என்று தனக்கே கூறி கொண்டாள் .. முகத்தில் குறும்பாய் புன்னகை அரும்ப , அவன் பசியை வருவான் என்று அவனுக்காக சமைக்க தொடங்கினாள் .. "முருகா , இந்த மக்கு மாமா , பத்திரமா வந்து சேரனும் " என்று அவள் வேண்டுதலை பிறப்பித்த உடனேயே கார் ஹாரன் கேட்டது ... அவள் வாசலுக்கு விரைவதற்கும் , ஷக்தி காரில் இருந்து இறங்கவும் சரியாய் இருந்தது .. மலையளவு கோபம் இருந்தாலும் அவள் முகத்தை பார்த்ததும் " பாய் ஷக்தி " என்றபடி அவனது கோபம் எங்கோ மறைந்தே விட்டது .. ஏதோ வீடு வந்து சேர்ந்த உணர்வை போல , பெருமூச்சு விட்டவன் , அழுத்தமான காலடிகளோடு அவளருகில் வர
" ஷக்தீதீ தீ தீ ஈஈஈஈஈ மாமா " என்றபடி அவனை தாவி அணைத்து கொண்டாள் சங்கமித்ரா ..
"ஹேய் " என்றவனும் அவளை மெல்ல அணைத்தப்படி நின்றான் ..
" என்னை மன்னிச்சிரூ மாமா "
" .."
" ப்ளீஸ் நான் பாவம்ல ?"
"..."
" நீ என்னை மிஸ் பண்ணி , என்னைபார்க்கத்தானே வந்த ? "
".."
" நியாயப்படி நான் உனக்காக காத்துட்டு இருந்திருக்கணும் "
" .."
" பட் நீ வருவன்னு தெரிஞ்சு நான் உன்னை அவாய்ட் பண்ணலையே "
"...."
" ம்ம்ம் , உன்கிட்ட சொல்லாமல் இங்கயே தங்கினது தப்புதான் "
" ..."
" நீ ஏற்கனவே சொல்லி இருந்த , காவியாவுக்கு இங்க தொந்தரவு தர கூடாதுன்னு "
" .;.."
" இனிமே இப்படி நடக்காது மாமா ... ப்ளீஸ் "
" ஹும்கும் லாயரம்மான்னு ப்ரூவ் பண்ணிட்ட .. என்னை கொஞ்சமும் பேச விடாம "
" நீ பேசுறதே கொஞ்சமாய் தானே மாமா ?" என்று சொல்ல துடித்த இதழ்களை மூடிக் கொண்டு விழிகளையும் மூடி கொண்டாள் மித்ரா ..
" சரி வா உள்ள போலாம் "
" ம்ம்ம்ம்ஹ்ம்ம் மாட்டேன் .. நீ மன்னிச்சிட்டேன்னு சொல்லு அப்போதான் விடுவேன் " என்று அவன்மீது நன்றாய் சாய்ந்து கொண்டாள் அவள் .. இதழில் மலர துடித்த புன்னகையை மறைக்க பெரும்பாடு பட்டான் ஷக்தி ...
" சொன்னா கேளு டீ .. யாராச்சும் பார்ப்பாங்க "
" ம்ம்ம்ஹ்ம்ம் மாட்டேன் .. நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு "
" சரி மன்னிச்சுட்டேன் "
" இல்ல நீ வேண்டா வெறுப்பாய் சொல்லுற "
" இப்போ நீ அடி வாங்க போற "
" ப்ளீஸ் .... மாமா " என்று தலை நிமிர்த்தி அவனை அண்ணார்ந்து பார்த்து பாவமாய் முகத்தை வைத்து கொண்டாள் மித்ரா .. அவனது வார்த்தைக்காக காத்திருந்தாள் மித்ரா .. நாமும் ஷக்தி சார் என்னதான் பண்ணுறார்ன்னு காத்திருந்து பாப்போம் ..
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ? " வாசகர்களுக்கு முதல்ல என் மன்னிப்பை சொல்லிடுறேன் .. ரொம்ப பெரிய இடைவெளி வந்துவிட்டது இந்த அத்தியாயம் அனுப்புவதற்கு .. காத்திருந்து படிக்கும் எல்லோருக்குமே நன்றி .. அடுத்த அத்தியாயம் விரைவிலேயே தந்துவிடுகிறேன் ..நன்றி :)
தொடரும்
{kunena_discuss:777}