இப்போ ஒண்ணா உக்காந்து சாப்பிடுற வேளை இல்லை ராசாத்தி ..இது நான் உழைக்குற வேளை நீ படிக்குற வேளை உங்க வாத்தியாரம்மா அன்னிக்கு உன் பள்ளி கூடத்துல அத்தன பேரு முன்னாடி மனோகரி படிப்புல ரொம்ப கெட்டிகாரி பாட்டிமா அவ தான் முதல் மார்க்ன்னு சொன்னாவுளே எம்புட்டு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா ...அதுக்கே இன்னும் எம்புட்டு வேணாலும் உழைக்கலாம் டீ...நீ அத இத நினச்சி விசன படாம படிப்புல சிரத்தையை வை ……. அம்மாயி வார்த்தைகள்.
தானாய் சொட்டியது கண்களில் இருந்து இரு துளி கண்ணீர் அதன் பின் உண்ண அவளுக்கு மனம் வரவில்லை வாயில் போட்ட ஒரு கவள சோறு உள்ளே போக அவளுக்கு தண்ணீர் தேவை பட்டது.. அதோடு கை கழுவினாள் மீதி உணவை துப்புரவு தொழிலாளருக்கு கொடுத்து விட்டாள் ...
...
This story is now available on Chillzee KiMo.
...
யமா இருக்க ட்ரை பண்றேன் .அழுது நான் பலவீனமாக விரும்பல ...ஒரு தடவ என் நிலைமைய நினைச்சி பலவீனமானதால ..தற்கொலை முயற்சி செஞ்சுட்டேன் ...இனி அந்த முடிவுக்கு வந்திட கூடாது.. சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன் ...முகம் வாடி அவள் விழிகளை மூடிவிட அவள் முகம் பார்த்த இவன் மனம் அவனறியாமல் துடித்தது ...!