சரநிதா விடைபெற்று கிளம்பியபின், பெரியவர்கள் அவரவர் அறைக்குச் சென்ற பின், ஹயாவை புஷ்பம் தங்களுடன் கொண்டு சென்றுவிட்டதால் தங்கள் அறைகளைப் பார்த்து திரும்பிய இளையவர் கூட்டம் முதலில் எதிர்பட்ட அரண் அறையில் மையம் கொண்டது.
இப்பொழுது அரணும் ஜோனத்துமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க, அரண் கையை பற்றியபடி அவன் தோளில் சாய்ந்து அவர்கள் அரட்டையைக் கேட்டுக் கொண்டிருந்த சுகாவை கவனித்த ஜோனத் தன் ஷோல்டர் பர்டனை பார்வையால் தேட சற்று தொலைவில் தன் தம்பியிடம் அவள் பேசியபடி நிற்பது கண்ணில் பட்டது. ப்ரவிர் வழக்கம் போல் வாயாடிக் கொண்டிருந்தாலும் அவன் கண்களில் சற்று சோர்வோ?
“வா மாப்ள பாவம் பையன் கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்கட்டும்னு பார்த்தா இந்த ப்ரவிக்கும் நம்ம போல ஷோல்டர் பெய்ன் தேவை படுது போல…” அரணிடம் சொல்லியபடி ஜோனத் தன் தம்பி புறம் திரும்ப
“ஷோல்டர் பெய்னா…ஹயாவ சொல்றியா….? “ என ஆரம்பித்த சுகா…..”ஏய் பால்பாக்கெட் எனக்கு நீ விஷயத்த சொல்லவே இல்லை…இந்த கண்டிஷன்ல லியாவ ஏன் ட்ரவல் செய்ய விட்ட….?” என கோபமாய் ஆரம்பித்து…
” ஐயோ…இந்த நிலமையிலா அவள இப்படி கிட்நாப்லாம் செய்து….”என பதற தொடங்கினாள். ஹயவைப் போல் ப்ரபாத்தின் தோளைக் கடிக்க குழந்தை வரப் போகிறது போலும் என புரிந்துவிட்டாள் அவள்.
You might also like - Vasantha bairavi... A neat family story...
“அப்படில்லாம் எதுவும் இல்ல…அதுக்குல்லாம் டைம் இருக்குது…..இது நான் ரெஸ்பான்ஸிபிலிட்டிய சொன்னேன் “ சுகா புரிந்த விதம் உணர்ந்து விளக்கம் சொல்லிய ப்ரபாத்திற்கு இப்பொழுதுதான் மனைவியின் ஹயா ட்யூஷன் ஞாபகம் வர, அவனது ஷோல்டர் பெய்ன்னுக்கு இன்னொரு அர்த்தம் கிடைக்க..
அப்பொழுதுதான் இவர்கள் கலந்துரையாடலை கவனிக்க தொடங்கி இருந்த சங்கல்யாவுக்கு கணவனின் மனம் போகும் திசை புரிய…. முகம் சிவப்பதை தடுக்க அவசரமாக அருகில் வந்து அவன் கையையே அழுத்திப் பிடித்துக் கொண்டாள் அவள். “ப்ளீஸ் எதுவும் வெளிய சொல்லி வச்சுறாதீங்க…” தன்னவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒரு கெஞ்சல்
“டேய் அண்ணா….கண்டிப்பா நான் உன்ட்டதான் டியூஷன் எடுத்தே ஆகனும்” என்றபடி வந்தான் அதைப் பார்த்திருந்த ப்ரவிர். மனம் திறந்து பேசிவிடுவது என முடிவுக்கு வந்திருந்தான் அவனும்.
“நான் காலேஜ் டைம்ல ஒரு கேம்ப்காக ஊட்டி போனப்பதான் அண்ணிய முதல் தடவை பார்த்தேன்…அப்ப அவங்களும் அவங்க ஃப்ரெண்ட் சரநியும் ஒருத்தனைப் போட்டு அடி பின்னிட்டு இருந்தாங்க..ஏதோ பொண்ணுட்ட வம்பு செய்தானாம்…அப்ப இருந்து அடுத்து எப்ப பார்க்கிறப்பவும்….முந்தின இன்சிடென்டே பிரவாயில்லைனு தான் தோணும்….அந்த அளவுக்கு இருக்கும் அண்ணி சரநி கூட்டணி…..அதோட ரெண்டு பேரும் ஜென்ட்ஸைப் பத்தி பேசிப்பாங்க பாரு….நான் என்ன லூசா….எப்படி இந்த சரநிய லவ் பண்றேன்…. சரநி என்னைக்கு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி நமக்கு எப்ப கல்யாணம் நடக்க…அப்படியே நடந்தாலும் டெய்லி ஹாஸ்பிட்டல்லதான் குடும்பம் நடத்த வேண்டி இருக்கும்னு தோணிகிட்டே இருக்கும்.... அப்பதான் திடீர்னு ஒருநாள் ஹாஸ்பிட்டல்ல வச்சு உனக்கு கல்யாணம்னு நியூஸ்..ஓடி வந்தா எனக்கு மயக்கமே வந்துட்டு பொண்ணு இந்த கேங் லீடர்….அப்படி இருந்த பொண்ண….இப்படி ஆட்டு குட்டி மாதிரி ஆட்டிவைக்கியே …நானும் பாவமில்லையா…..எனக்கும் இந்த டெக்னிக்க சொல்லித் தாயேன்…. மிஷன் சரநி சக்சஸ் ஆக டிப்ஸ் ப்ளீஸ்”
சொல்லிய ப்ரவிரை முறைக்க முயன்றாள் சங்கல்யா. ஊட்டி கேம்ப் என்றால் இரண்டு வருஷங்களாவது சரநிதாவை ப்ரவிர் ஃபாலோப் பண்ணி இருக்கனும்…. மனதின் அறைகளில் வரும் புரிதலும் கூடவே பிறக்கும் சிரிப்பும்…கன்ட்ரோல் செய்து கொண்டாள். ப்ரவிர் சரநிதாவுக்கு பெர்ஃபெக்ட் பேர் என்றுதான் இவளுக்கு தோன்றுகிறது.
“அண்ணி நான் அப்பவே உங்கட்ட சரண்டர்…ரிமம்பர்…உங்க கால்ல விழுந்து என்ன ப்ளெசிங் வாங்கினேன்….உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கும் எனக்குன்னு சொன்னீங்க…இப்ப பேச்சு மாறக் கூடாது…சரநி விஷயத்துல நீங்க எனக்கு சப்போர்ட் செய்யனும்….நோ முறச்சிங் பிஸினஸ்”
“அதான் உங்க அண்ணாட்ட ஆட்டுகுட்டியா ஆட்டி வைக்க வழி கேட்டீங்களே…பின்ன என் சப்போர்ட் எதுக்கு….?”
“கோபமா அண்ணி..? நோ…நோ….நீங்க தான் மிஷன் சரநில மோஸ்ட் இம்பார்ட்டன்ட் பவர்..அப்றம்தான் அத்தனை பேரும்…இன்க்லூடிங் அண்ணா…விஷயத்தை சொல்றேன் உங்களுக்கே புரியும்….” சொல்ல தொடங்கினான் அவன்…
ரெட்க்ராஸ் கேம்ப்பிற்காக ஊட்டி வந்த போதுதான் அவன் முதலில் சரிநிதாவைப் பார்த்தது. மனதில் ஒரு ஈடுபாடு முதல் பார்வையிலேயே வந்தாலும் காலேஜ் லைஃப் ஃபேன்டசி என அவன் அதை கண்டுகொள்ளாமல் இருக்கத்தான் முயன்றான்.
ஆனால் அதன் பின் ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் சங்கல்யாவும் சரநிதாவும் அவன் பார்வையில் பட….ஐபிஎஸ் ஆஃபீஸராக அவன் வேலை செய்ய தமிழகத்தை தேர்ந்தெடுத்தான்.
அப்பொழுது அவன் ட்ரெயினிங்கில் இருந்தான்.
அன்று சன்டே. தன் பைக்கில் ப்ரபாத்தின் வீட்டிற்குத்தான் வந்து கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவன் அந்த காட்சியைப் பார்த்தான். ப்ரபாத் வீட்டிற்கு பக்கத்து வீட்டு ட்ரைவர் தெருவில் நின்றபடி அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் கையிலிருந்த பேக்கை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அந்த வேலைக்கார பெண் அந்த பேக்கை விடாமல் பிடித்து இழுக்க அந்தப் பெண்ணுக்கு உதவியாக ஒரு ஒல்லி குட்டை இளைஞன் அவள் கூட்டாளியாக இருக்கும்… அந்த ட்ரவைரை அடி வெளுத்துக் கொண்டு இருந்தான்.
ப்ரவிருக்கு அந்த ட்ரைவர் பற்றி நன்றாக தெரியும். மிகவும் நேர்மையான பொறுப்பான மனிதர். அந்த வேலைக்காரப் பெண் இரு முறை இவன் கண்ணில் இதற்கு முன் பட்டிருக்கிறாள். இவனுக்கு அவள் மீது நல்ல ஒபினியன் இல்லை. அவளிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று தோன்றும்.
ஆக இப்பொழுது வேகமாக சென்று அந்த ட்ரைவரை அடித்துக் கொண்டிருந்த இளைஞனை பின்னிருந்து பிடித்து இழுத்து ஓர் அறை வைத்த பின்தான் முகத்தைப் பார்த்தான் அது அவனது சரநிதா.
ஜர்னலிஸ்டான அவள் அலையும் தன் ப்ரஃபெஷனுக்கு சூட்டாகும் என நினைத்து அப்பொழுதுதான் வெட்டியிருந்த பாய் கட்டும், செக்ட் ஷர்ட்டும், ஜீனும் கேன்வாஷும்….பின்னிருந்து இவன் பார்த்திருந்த சூழ்நிலையும்…இதற்கு காரணமாகி இருக்க
பாறை என இறுகி இருந்த இவனது கை அவள் பட்டு கன்னத்தில் இறங்கி இருந்த அடையாளம்…அன்னிச்சையாய் அவள் கண்ணில் துளிர்த்திருந்த நீர்….வலியால் மட்டுமல்ல அடி வாங்கிவிட்ட அவமனத்தில்….அவள் தவிப்பது என எல்லாம் இவனுக்கு இன்ஸ்டென்டாய் புரிந்தாலும்…. தப்பி ஓடத் தொடங்கி இருந்த கல்ப்ரிட்டினை பிடிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் எதுவும் விளக்கம் சொல்ல முடியவில்லை.
அதற்குள் அந்த வேலைக்காரப் பெண் அந்த பேக்கைவிட்டுவிட்டு ஓடத் தொடங்கி இருந்தாள். அவளுக்கு ப்ரவிர் யாரென தெரியுமே… அவளைப் பிடித்து…..ஸ்டேஷனுக்கு அவள் தான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டிலிருந்து திருடிக்கொண்டு வந்த தகவலை சொல்லிவிட்டு சரநிதாவைத் தேடினால் அவள் அங்கு இல்லை…
இவனுக்கு சரநிதாவின் செயல் புரிகிறதுதான். பொது இடத்தில் ஒரு பெண்ணின் உடமையை ஒரு ஆண் கட்டாயமாய் பிடித்து இழுக்கும் பட்சத்தில் அவள் அந்த பெண்ணுக்கு உதவிக்கு சென்றிருப்பாளாய் இருக்கும்…