" அப்போ என் மேல கோபம் எல்லாம் இல்லையா ?"
" இப்போ என்னை பார்க்காம ..உன் அத்தை மாமா கூட பேசும்போதுதான் லைட்டா கோபம் வந்திச்சு .. அப்பறம் நீ இப்படி மடியில சோகமா படுத்ததும் கோபம் போச்சு " என்று அவள் சொல்லி முடிக்கவும் இரு கன்னகளிலும் முத்த மழை பொழிந்து " ப்ளான் சக்சஸ் " என்று உற்சாகமாய் கத்தினான் மதியழகன் ..
" டேய் என்னடா ?"
" ராட்சசி , நான் மட்டும் சாரின்னு ஆரம்பிச்சா , இப்படி எல்லாம் என்னை கவனிச்சு இருப்பியா நீ ? அதான் இப்படி ஒரு குட்டி ப்ளான்.. எப்புடி ?" என்று கோளரை தூக்கி கொண்டான் ..
" அய்யே அது தெரியாம தான் இருந்தேன் நினைச்சியா ?" என்று நிலா சமாளிக்க முயலவும்
" ஓஹோ அப்போ தெரிஞ்சேதான் , என் கன்னத்தோடு கன்னம் " என்று பேச தொடங்க அவனை சரமாரியாய் அடித்தாள் தேன்நிலா ..
" திருடன் டா நீ "
" எது உனக்கு இப்போதான் தெரியுமா ?"
" எப்பவுமே எனக்கு தெரியாம ஏதாச்சும் செய்யணும்னு கங்கணம் கட்டிட்டே இருப்பியா மது நீ "?" என்று மனதில் இருக்கும் கோபத்தை கோடிட்டு காட்டினாள் நிலா ..
You might also like - Enna thavam seithu vitten... A family drama
" ஏன் இப்படி ஒரு குற்றச்சாட்டு என் மேல ?"
" அய்யே , நான் உன் மேல கோவமா இருக்கேன்னு தெரியும் .. ஆனா காரணம் உனக்கு தெரியாதா ?"
" அம்மா அப்பா விஷயத்தை சொல்லுறியா ?"
" பின்ன ? நான் எவ்வளவு யோசிச்சு அத்தை மாமா கிட்ட பேசணும்னு பார்த்தா , நீ அவங்களை ஈசியா கூட்டிட்டு வர்ற ?"
" உனக்கு அதுல சந்தோசம் இல்லையா டீ "
" சந்தோசம் எல்லாம் இருக்கு தான் .. ஆனா , நீ சமாதானம் ஆகணும்னு நினைச்சிருந்தா நீயே எப்பவோ ஆகி இருக்கலாம் இல்லையா மது ? இவ்வளவு நாள் அவங்களை விட்டு ஒதுங்கி நின்னவன் இப்போ நான் சேர்க்கணும்னு நினைக்கும்போது தானாகவே பேசுறதுக்கு என்ன அர்த்தம் ?"
" அர்த்தம் என்னன்னா , நீதான் எங்களை சேர்த்து வைச்ச "
" ப்ச்ச் .. தெளிவா சொல்லு "
" மக்கு , நீ இல்லாதப்போ உன் மது எப்படி இருந்தான் ? எப்பவும் வெறப்பா, வேலையை பார்த்துகிட்டு தூங்க கூட நேரம் இல்லாம எதாச்சும் பண்ணிக்கிட்டு இரும்பு மனுஷன் மாதிரி இருந்தேன் .. என்னை கனிய வெச்சது நீதான் .. எனக்கு உறவுகள் வேணும்னு உணர வெச்சது நீதான் .. உன்னை பார்த்ததும் உன் அழகுல அசைந்தது உண்மைதான் . ஆனா , அதைவிட நீ அந்த ஸ்கூல் பொண்ணு மேல காட்டின அக்கறையும் சாந்தனு கிட்ட பேசின விதமும் தான் என்னை வெகுவா கவர்ந்தது .. நீ அத்தை மாமா , அப்பறம் உன் மூலமாய் வந்த என் தங்கச்சிங்க , என் தம்பி இப்படி என் உலகத்தை நீ பெருசா மாத்தின .. நம்ம குடும்பத்தை பூர்த்தி பண்ணனும்னு ஆசைபட்ட .. அதைதான் நான் பண்ணேன் "
".."
" நீ என் லைப் ல வரலன்னா , நான் அப்படியே இருந்துருப்பேன் குட்டிமா .. என் அம்மா அப்பாகிட்ட பேசிருக்க மாட்டேன் நினைக்கிறேன் .. ஆனா உனக்கே சொல்லாமல் போயி பேசுனது தப்புதான் பட் அதுக்கும் காரணம் இருக்கு "
" என்ன ?"
" நீ சொல்லி நான் அவங்ககிட்ட பேசி, அந்த விஷயம் அவங்க மனசுல பதிஞ்சுற கூடாது .. உனக்காக தான் நான் பேசினேன்னு அவங்க நினைச்சிட கூடாது .. என் அப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்லவங்க .. ஆனா எந்த ஒரு சூழ்நிலையின் நான் அவங்களை விட உன்னைத்தான் மதிக்கிறேன்னு அவங்க மனசுல எண்ணமோ காயமோ தோன்ற கூடாது .. மற்றப்படி என் தினசரி மாற்றம் நம்ம காதல் , உன்ன பத்தி எல்லாம் அவங்களுக்கு தெரியும் ... பாட்டி சொல்லிருபாங்க .. மொத்ததுல , உன்னாலதான் நான் மாறினேன்னு அவங்களுக்கு தெரியும் , ஆனா உனக்காக மட்டும்தான் அவங்க கிட்ட பேசுறேன்னு அவங்க நினைக்க கூடாது டா " என்றபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான் மதியழகன் ..அவனையே காதலுடன் பார்த்தாள் நிலா ..
" என்னடா "
" மயக்கற மது "
" பின்ன , மதுன்னு நீதானே பெயர் வெச்ச ?" என்று கண்ணடித்தான் அவன் ..
"லக்ஷ்மி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் " ஒருவழியாய் மித்ராவின் கனவு மதியழகனின் திட்டத்திலும் அன்பெழிலனின் உதவியிலும் நிருவபட்டுவிட்டது ..
" நாளைக்கு நாள் நல்ல இருக்கு மித்ராம்மா " என்று ரகசியம் பேசினார் நாராயணன் ..
" ஓகே மாமா .. ஆனா என்ன சொல்லி மாமாவை கூட்டிட்டு போறது ?"
" அவன் மட்டுமா ? எல்லாரும் தானே போறோம் ?" தனது சந்தேகத்தை முன் வைத்தார் லக்ஷ்மி ..
" ஐயோ அத்தை உங்க பையனை முதலில் சரி கட்டணுமேன்னு தான் அப்படி சொன்னேன் "
" அஹெம் அஹெம் " என்று குரல் கொடுத்தான் ஷக்தி .. இவ்வளவு நேரம் பார்வை தொலைகாட்சியில் இருந்தாலும் அவர்களை மேலோட்டமாய் கண்காணித்து கொண்டுதான் இருந்தான் ஷக்தி ..
" என்ன மாமா ?"
" என்ன டீ ?"
" கூப்பிட்ட மாதிரி இருந்துச்சே " என்று விழித்தாள் மித்ரா .. ஷக்தி இன்னமும் தான் வேலையை விட்ட உண்மையை சொல்லாமல் இருந்தான் .. அவளும்தான் அவனை பார்த்ததுமே இதையெல்லாம் கேட்க மறந்திருந்தாள் அல்லவா ?
" என்ன குசுகுசுன்னு ரகசியம் ?"
" அது ஒன்னும் இல்லையே "
" அப்படியா ?"
" ஆமா "
" என்கிட்டே பொய் சொல்லுறியா "
" இல்லையே "
" அப்போ சொல்லு "
" என்ன சொல்ல ?"
" என்ன பேசுறிங்களோ அதை சொல்லு "
" சரியான விடாகொண்டன் .. இப்போ ஏதும் சொல்லுற பவரை விட மாட்டானே " என்று சலித்து கொண்டு ,
" அது வந்து" என்று அவள் திணறும்போதே
" என்ன நீங்க எல்லாரும் இன்னும் கெளம்பலையா ?" என்று கேட்டபடி அங்கு வந்தான் ஆதிஷ்வர் ..
"வாங்க மாமா " என்று சிரித்தபடி வந்தவள் , அருகில் இருந்த வைஷ்ணவியை கட்டிகொண்டாள் ..
" எப்படி இருக்க அக்கா ?"
" நான் நல்ல இருக்கேன் ... நீ ? கல்யாணம் ஆகின சந்தோஷத்துல வைட் போட்ட போல ?" என்று கண்ணடித்தாள் ..
" அப்படியா ? ஷக்தி , கொஞ்சம் என்னை தூக்கி பார்த்து சொல்லேன் ..நான் குண்டாகிட்டேனா ?" என்று மித்ரா எல்லோர் முன்னலையில் கேட்கவும் , ஐயோ நம்ம ஷக்திக்கும் வெட்கம் வந்துருச்சு போங்க ..
" ஆமா எங்க கெளம்பலையான்னு கேக்குறிங்க ?" என்று ஷக்தி பேச்சை மாற்ற மித்ராவும் கேள்வியாய் பார்க்க ,
" சென்னைக்கு தான் .. ஏன் மித்ரா நீ சொல்லலையா ?" என்று உளறி கொட்ட தொடங்கினான் ஆதிஷ்வர் .. அந்த கண்கொள்ளா காட்சியை அடுத்த எபிசொட்ல பார்ப்போமே :)
தொடரும்
{kunena_discuss:777}