(Reading time: 17 - 34 minutes)

" வாலு வாலு.. கிளம்பு சீக்கிரம் .. " என்றான் .. இங்கு சுபாஷ் எப்படி அவசரபடுத்திநானொ அதைவிட பன்மடங்கு அவசரமாய் செயல்பட்டு கொண்டிருந்தான் சிவா ..

" அம்மா , சமையல் ஆச்சா ? சீக்கிரம் அம்மா சத்யா வீட்டுல எல்லாரும் பசியோடு இருப்பாங்கல " என்றான் அவன் .. கடந்த ஒருவாரமாய் நித்யா- கார்த்திக் மற்றும் சிவா மூவரும்தான் சத்யா , அருளின் குடும்பத்திற்கு உதவியாய் இருந்தனர் ..

துன்பம் ..!

துன்பத்தை போன்ற கொடிய எதிரியும் இல்லை !

துன்பத்தை போல நல்ல நண்பனும் இல்லை !

துன்பம் எவன் சிறந்த நண்பன் என்பதை அடிக்கடி நமக்கு உணர்த்தி கொண்டுதான் இருக்கிறது .. !

இங்கோ ,

வானதிக்கு சந்தோஷ் நண்பன் ஆனான் !

அர்ஜுன் தம்பதியருக்கும் ரவியின் தம்பதியருக்கும் கார்த்திக்- நித்யா நட்புடன் உதவினர்..

சிவாவோ , இரவுபகல் இல்லாமல் அனைவருக்குமே உதவியாய் இருந்தான் ..

 கவிமதுரா , வீட்டில் பெரியவர்களை கவனித்து கொள்ள உதவினான் ..

கிரிதரன் சுபாஷ் உட்பட அனைவரின் வேலைகளையும் கவனித்து கொண்டான் .

கண்ணபிரான் -மீராவதியும் சத்யா அருளுக்காக வேண்டிக்கொண்டு கோவிலில் இருந்தனர் .. இப்படி அனைவரும் பம்பரமாய் சுழன்ற நேரம் , சத்யா அருளை தட்டி எழுப்பும் சக்தியை தான் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துமனைக்கு வந்து கொண்டிருந்தான்.. சற்றுமுன்பு வானதி கேட்கும்போது கூட அவன் பதில் சொல்லாமல் ஓடியது, இவர்களை அழைத்துவரத்தான் .. (பயங்கர பில்டப்பா இருக்கு புவீ யாருன்னு கேட்குறிங்களா ? நான்தான் இந்த கதையில் கெஸ்ட் ஆ வரல ..சோ நானே வந்திடவா ? சரி வேணாம் .. மொத்த குடும்பமும் ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது ரெண்டு பேரு மட்டும் லண்டனில் என்ன பண்ண போறாங்க ? அதான் கூட்டிட்டு வந்துட்டேன் .. வாங்க சித்து உங்க வேலையை காட்டுங்க ..ஹா ஹா )

சித்தார்த் -ஹரிணி , இருவரும் அங்கு வந்த அதே நேரம் சைந்தவியை அழைத்து கொண்டு சென்றான் சுபாஷ் ..

மொத்த குடும்பமும் சத்யா, அருளின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர் ..

" ப்ளீஸ் எல்லாரும் உள்ளே போகாதிங்க .. வேணும்னா ரெண்டு பேரா போங்க " என்று அப்போதுதான் டாக்டர் மயூரி கூறிவிட்டு செல்ல, சைந்தவி தான் போக வேண்டும் என்று அடம் பிடித்தாள் .. சித்தார்த்தோ யார் பேச்சுக்கும் கட்டுப்படாமல் உள்ளே சென்றிருந்தான் .. அதனால் சைந்தவியை மட்டும் அந்த அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு வெளியில் நின்றான் சுபாஷ் ..

சித்தார்த் அருளிடமும் , சைந்தவி சத்யாவிடமும் பேச தொடங்கினார்கள் ..

" டேய் அருள் .. "

".."

" அண்ணா வந்திருக்கேன் டா .."

" ..."

" இதுதான் உன் மாஸ்டர் ப்ளான் ஆ ?"

".."

" அண்ணா, உங்களை இங்க வர வைக்கிறேன்னு சொல்லிட்டே இருப்பியே .. நானும் ஹனியும் வந்துருக்கோம் .. ரெண்டு குரங்குங்களுக்கும் என்ன தூக்கம் .. இப்போ கண்ணு முழிக்க போறிங்களா இல்லையா ?" என்று அதட்டல் போட்டான் ..

" டேய், அருள் உனக்கு எதுவும் இல்லை .. நீ தூங்கிட்டு இருக்க .. சீக்கிரமா எழுந்திரி டா .. என் பேச்சு உனக்கு கேட்கும் .. பைட் பண்ணு டா .. நாங்க வேணாமா உனக்கு ?" என்றான் சிறுபிள்ளைக்கு சொல்வது போல ..

" சத்யா ... அக்கா வந்திருக்கேன் டீ .. என்ன பண்ணுற நீ ? ஹாஸ்பிட்டல் பெட்ல , உன்னை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு .. எழுந்திரி சத்யா "

" .."

" என் உயிரை காப்பத்தினதே நீதான் .. இந்த குழந்தை ... இந்த குழந்தை உன்னால தான் உயிரோடு இருக்கு .. அதுக்கு சித்தி வேணும் சத்யா .. என் பாப்பா வெளில வரும்போது , நீ சித்தியாய் பக்கத்துல இருக்கணும் "

" .."

" அடியே , நான் பேசுறது உனக்கு கேட்குதா இல்லையா ? எனக்கு ஒரு மாதிரியா வலிக்கிறது டீ .. நீ வேற ஏன் இப்படி பயமுறுத்துற ? சத்யா, கண்ணு முழிச்சிக்க சத்யா " என்றவள் அதன்பின் ஏதும் பேசாமல் சத்யாவையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் .. சித்தார்த் அருளிடம் பேசினாலும் அவ்வப்போது சைந்தவியின் முகத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தான் .. சைந்தவி லேசாய் திணறுவது போல அவனுக்கு தோன்றியது .. இவளை அவனது கணவனுடன் அனுப்பி இருக்க வேண்டுமோ ? அவசரபட்டு உள்ளே வந்துவிட்டோமே ?" என்று நினைத்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.