(Reading time: 17 - 34 minutes)

வள் முகம் வாடியதை பார்த்த பிருத்வி என்ன என்று கேட்டதற்கு விவரத்தை கூறினாள் யுக்தா... அவன் வெறொரு பொம்மையை எடுத்துக் கொள்ள சொன்னான்... ஆனால் அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டாள்,

அதனால் இப்போது அவன் தேடிச் சென்று அதை விட் அழகான பொம்மையை தேடி வாங்கி வந்திருந்தான்... அது யுக்தாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது, அதை அவளிடம் கொடுத்து...

"யுகி... நானோ கவியோ... உன்னோட இல்லைனு நீ ஃபீல் பண்ண கூடாது... இங்கப் பாரு இந்த பொம்மையை நான்னு நினைச்சிக்க...

இதுகிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணு... கொஞ்ச நாளுக்கு அப்புறம் பாரேன்... உனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைச்சிடுவாங்க... நீயே என்னை மறந்திடுவ பாரேன்... என்றான்.

"இல்லை பிருத்வி உன்னையும் கவியையும் என்றுமே மறக்கமாட்டேன்..." என்று கூறி அழுகையுடனே விடைப் பெற்றாள்.

யுக்தா நியூயார்க் சென்ற பின்பு வளர்ந்து வந்த விஞ்ஞான முன்னேற்றங்களால் யுக்தா கவியின் நட்பு தொடர்ந்தது... ஆனால் பிருத்வியுடன் கொஞ்ச நாட்கள் தான் அவள் தொடர்பில் இருந்தாள்...

பிருத்வி பத்தாம் வகுப்பு சென்றபின் அவன் கவனம் படிப்பில் சென்றுவிட்டது...  அவர்கள் பேசுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலும் நின்று போயிற்று... ஆனால் யுக்தா பிருத்வியை மறந்ததில்லை... ஏன் கவி பிருத்வி அளவுக்கு யாருடனும் நெருக்கமான நட்பும் வைத்துக் கொண்டதில்லை.

You might also like - Oru kootu kiligal... A family drama... 

சுஜாதாவும் மதியும் மட்டும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்... அந்த உரையாடலில் இவர்கள் திருமணம் பற்றியும் இருக்கும்... இந்த உரையாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்த யுக்தாவிற்கு பிருத்வியின் மேல் இருந்த நட்பு காதலாக மாறியது,

ஒருகட்டத்திற்கு மேல் செந்தில் கூறியதால் இந்த திருமணப் பேச்சை நிறுத்தி கொண்டாள் சுஜாதா... நம் ஆசை நம்மோடு இருக்கட்டும் அதை வீணாக நம் மகள் மனதில் விதைக்க வேண்டாம்... அதற்கு நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாள்... ஆனால் அதற்கு முன்னரே தன் மகளின் மனதில் அந்த காதல் விதை முளைக்க ஆரம்பித்து விட்டதை அவள் அறியவில்லை.

தன் தாய் தந்தை மதுரையில் இருந்தாலும் பத்தாம் வகுப்பு வரை தாத்தா வீட்டில் இருந்து தான் படித்தான் தேவா... சங்கவியும் யுக்தாவும் மாமன் மகள்களாக இருந்தாலும் தேவாவிற்கும் அவர்களுக்கும் கொஞ்சம் எட்டா தூரம் தான்.... இந்த சகோதரிகள் இருவரின் உலகமே தனி தான் அதில் யாருக்குமே இடம் இல்லை...

சிறுவயதில் எப்படியோ... ஆனால் அவனுக்கு கருத்து தெரிந்ததிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் போது அவர்களுடன் எதோ பேசுவதோடு சரி... அவனுடன் தாத்தா வீட்டில் இருந்த அவன் தங்கையாவது இவர்களுடன் விளையாட செல்வாள்... தேவாவிற்கு அப்படி எதுவும் தொன்றாது...

யுக்தா சென்னை போன பின்பு கூட சங்கவி தன் தந்தை கூட தான் பொழுதை கழிப்பாள்... அவளுக்கும் யுக்தாவை விட நெருங்கிய நண்பர்கள் கிடையாது,

ஆனால் தந்தையும் உயிரோடு இல்லாமல் யுக்தாவும் கூட இல்லாமல் தனியாக இருக்கும் சங்கவியை பார்க்க தேவாவிற்கே கஷ்டமாக இருந்தது... அதிலும் மாதவன் மாமா தன் பெற்றோரிடம் இவர்களை பார்த்து கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு போன போது இவனும் அருகில் தான் இருந்தான்... தன் தாய் அதை இந்த காதில் அந்த காதில் போட்டுவிட்டு அமைதியாக இருந்தாள்,

அவன் தந்தையுடன் சேர்ந்து இவன் தான் அவர்களுக்கு தேவையானதை செய்தான்... அப்படித்தான் சங்கவியும் தேவாவும் நண்பர்களாக ஆனார்கள்.

ஏன் இன்றுவரையும் அவன் சங்கவிக்கு நல்ல நண்பனாக தான் இருக்கிறான், சங்கவி காம்பஸ் இண்டர்வியுவில் செலக்ட் ஆகி சென்னைக்கு வர பயந்த போது கூட இவன் தான் பயத்தை தெளிய வைத்தான்... சென்னையில் இருந்த அவர்கள் வீட்டில் அவர்களை தங்க ஏற்பாடுகளை செய்து இதுவரையும் அவர்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருக்கிறான்.

ஆனால் ஆரம்பத்திலேயே அவர்களின் நட்பை லஷ்மி விரும்பவில்லை, ஊரில் உள்ளவர்கள் இவர்கள் அத்தை மகன் மாமன் மகள் என்பதால் அவர்களை ஒன்றாக பார்க்கும் போது லஷ்மியிடம் நல்ல ஜோடி என்று சொல்லிவிட்டு செல்வார்கள்.

லஷ்மி அதை விரும்பவில்லை... அவளுக்கு சாவித்திரியை பிடிக்காது... சாவித்திரிக்கு திருமணம் ஆன உடனேயே அவளிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்கள், லஷ்மிக்கு தேவையென்று ஏதாவது கேட்க தாய்வீட்டிற்கு சென்றால் அண்ணியிடம் கேள் என்று அவள் அண்ணனும் அன்னையும் சொல்லி சொல்லியே அவளுக்கு சாவித்திரி மேல் பொறாமை ஏற்பட்டுவிட்டது. ஆனால் சாவித்திரி அதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.