'எது?' என்று கேட்டான்
அவளோ' உங்க சில்லற ஜோக்' என்றாள்
'ஓ அப்படியா! ஸோ, உங்க சிரிப்பு நல்லா இல்லைன்னு நீங்களே சொல்றீங்க,சரி நீங்க என்ன சொல்றீங்களோ ஒத்துக்கறேங்க... இல்லையின்னா, இப்பதான் முதல் தடவை பேசறோம்... அப்புறம், நீங்க கோச்சிண்டு போய்ட்டீங்கன்னா…...' என்று நீளமாய் சொல்லி முடித்தான்,
அவளுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்
‘சரி இங்கே, என்ன வேலையா வந்தே சித்ரா,'என்று கேட்டான்
‘அது.... வந்து.... வந்து என் சிநேகிதி தெரிந்தவர்களிடம் எனக்கு ஒரு வேலைக்கு, சொல்லியிருக்கிறாள்,’
‘அப்படியா, என்ன வேலைக்காக?” என்று கேட்டான்
பிறகு அவள் படித்தது,எக்ஸ்பிரியன்ஸ், எல்லாவற்றையும் சொன்னாள், 'உனக்கு நாளைக்கே ஒரு வேலை ஏற்பாடு செய்கிறேன் நீ எங்கும் ஒத்துக்கொள்ள வேண்டாம்,சரியா?'
தன்னிடம் கார்டு இருந்தாலும் அதைக் கொடுக்காமல், ஒரு பேப்பரை, எடுத்து, எழுதிக் கொடுத்தான், நீங்க நாளைக்கு போய் இவரைப் பார்த்து உடனே சேர்ந்து விடலாம்,' என்றான்
‘சரி, வந்து ......,சம்பளம் எவ்வளவு இருக்கும்?'என்று கேட்டாள்
‘நீ இதுக்கு முன்னாடி எவ்வளவு வாங்கினே?’
'ஏழாயிரம், என்றாள்'
எவ்வளவு எதிர்ப் பார்க்கிறே?' என்று கேட்டான்
“அதே சம்பளம் கிடைத்தாலும் போதுங்க,இப்போ இருக்கிற நிலைமைக்கு” என்றாள்
அவனுக்கு நெஞ்சை பிசைந்தது ...
'சரி, நான் அவர்களிடம் சொல்கிறேன்,’ என்றான்
‘சரி தேங்க்ஸ், அப்புறம் .......'
அவன் 'என்ன தயக்கம் சொல்லு?' என்றான்
'உங்கள் பேர் சொல்லவில்லையே?'
' ஓ, என் பேர்....ருத்ரா,' என்றான்
'ரொம்ப அருமையான பேர்' என்றாள்
'உனக்கு என் பேர் பிடிச்சது இல்ல, அது யாம் பெற்ற பாக்கியம்' என்று தலையைக் குனிந்து அவளுக்கு ஒரு சலாம் போட்டான்
அவள் வெட்கிச் சிரித்தாள்,’ நான் உள்ளே போகிறேன், வேலையில் சேர்ந்தவுடன் உங்களுக்கு போன் பண்ணுகிறேன், உங்கள் போன் நம்பர் கொடுங்களேன்' என்றாள்
அவன் கொடுத்தான், ' தேங்க்ஸ்' என்றாள் அவள்,
இரண்டு பேரும் கிளம்பிவிட்டார்கள்
இவன் உள்ளே சென்று, குமாரைப் பார்த்தான், அவனிடம் ‘நாம் ஏன் ஒரு ஹோட்டலுக்குப் போகக் கூடாது, பீச்சென்றால் பேசுவது கஷ்டம்,” ஹோட்டலின் பேரை சொல்லி”அங்கே மீட் பண்ணலாம், நாலரை மணிக்குப் பார்க்கலாம்,’ என்று கூறி அங்கிருந்து போய்விட்டான், அங்கிருந்த சித்ராவை திரும்பிக் கூட பார்க்கவில்லை
தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு மணியைப் பார்த்தான், மணி மூன்று, கிளம்பி ஸ்கூலுக்குப் போனான், அவள் வேறு ஒரு ட்ரஸில் ரெடியாக இருந்தாள், நல்ல வேகம்தான் என்று நினைத்தான், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே...
'வா, ஏறிக்கொள்' என்றான்
வனிதா ஏறிக்கொண்டவுடன் பைக்கை கிளப்பினான் , இருவரும் ஹோட்டலுக்கு சென்றார்கள், அவள் வரும்போதே ஸ்கூல் பாத்ரூமில் தன்னை ரெடி செய்துக் கொண்டு வந்ததால், நன்றாகவே இருந்தாள், ஹோட்டலை நெருங்கி விட்டனர் ,வனிதாவை இறங்கச் சொன்னான், பிறகு பைக்கை பார்க்கிங்கில் விட்டு விட்டு உள்ளே சென்று பார்த்தான், குமாரும், ருத்ராவைப் பார்த்து விட்டு எழுந்து வந்து , ருத்ராவிடம் கை குலுக்கி பேசினான்,, பிறகு மூன்று பேரும் அங்கிருந்த டேபிளில் உட்கார்ந்தார்கள், இருவரையும் அறிமுகப் படுத்தினான் ருத்ரா, பிறகு என்ன வேண்டும் என்று இருவரிடமும் கேட்டு ஆர்டர் கொடுத்தான்,ஒரு ஐந்து நிமிஷம் அவர்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு, “நான் இதோ வருகிறேன் நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்,” என்று கூறிவிட்டு தான் போன் பேச வேண்டிய வேலைகளைச் செய்தான்.
தொடரும்