(Reading time: 16 - 32 minutes)

மானா?? யாரு?? மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்??

நம்ம லாயரம்மா உமா!

அவ எதுக்கு?? 

கேஸ் ஃபைல் பண்ண...

என்ன கேஸ்?? அதுவும் உமாகிட்ட?? அவ வில்லங்கம் பிடிச்சவளாச்சே! நல்லா இருக்க குடும்பத்தில கும்மியடிப்பாளே அவ..நீ வேற ஏற்கனவே உச்சியில ஏறி நிக்கற!

....

என்னடீ??? ஏய் ஏடாகூடமா ஏதாவது ஓசிக்காத குழல்..' என்றாள் டீனா சற்றே கடுமையாக

நான் கரக்டாதான் யோசிக்கறேன்! யாராவது ஒருத்தராவது நல்லா... நிம்மதியா இருக்கனும் டீனா... எனக்குதான் நிம்மதினு எதுவும் என்னைக்குமே இல்லனு ஆயிடுச்சே...

நீ நிம்மதியா இல்லையா?? இப்போ யாரு நிம்மதியா இருக்கனும்னு நினைக்கற?? - அதுவரை அமைதியா இருந்த பிரபு பேசினான்.

அமைதியாய் இருந்தாள் குழலீ. 'நான் பேசினால் மட்டும் புரிஞ்சிக்க போறானாமா??' என்றது அவள் மனம்.

யாரு... நீங்க தான் நிம்மதியா இருக்கனுமா இந்த மேடமுக்கு! - என்றது டீனா.

என் நிம்மதிக்கு என்ன?? நான் நல்லா நிம்மதியா தானே இருக்கேன்! இன்னும் நிம்மதி வேணும்னா உங்க ஆருயிர் தோழிய உடனே எழுந்து கிளம்பி என்கூட இந்தியா வர சொல்லுங்க... போதும் அவ இங்க இருந்து கிழிச்சது!

பிரபு... நீங்க வேற.. நேரம் காலம் தெரியாம... ஏதாவது ஏடாகூடமா பேசி வைக்காதீங்க...அவ டைவர்ஸ் அப்ளை செய்ய போறாளாம்...

என்னது???' என்று யாழினியும் வெற்றியும்  திகைக்க பிரபுவின் முகத்தில் கள்ளச்சிரிப்பு ஒன்று உதித்தது!

அவனது கள்ளச்சிரிப்பை பார்த்து குழலீ முறைக்க இப்போது பிரபுவின் சிரிப்பு அரையேங்கும் பரவியது!

சிரிக்காதீங்க பிரபு... அவ சும்மாவே ஜிங்க் ஜிங்க்னு ஆடுவா... இதுல நீங்க வேற கிளப்பிவிடாதீங்க... அவ உங்களைதான் டைவர்ஸ் செய்ய போறதா சொல்லறா!

அவ காதல் மழை பொழிஞ்சாலும் டைவர்ஸ் செய்தாலும் என்னை மட்டும் தான் செய்ய முடியும் டீனா! அவ டைவர்ஸ் கேட்டா நான் கொடுத்திடுவேனா?? அவளால அதை செய்ய முடியாது... செய்யவும் மாட்டா!

சொன்னா அதை கண்டிப்பா செய்வா பிரபு அவ... அவ்வளவு பிடிவாதம்! உங்களுக்கு தெரியாது அவளைப்பத்தி!

நீங்க பயப்படாதீங்க டீனா! என் குழலீ என்னைவிட்டு போக மாட்டா... நிச்சயமாய்!' என்று தீர்கமாய் வந்தது அவன் குரல்.

நான் இருக்கறதனால உங்க நிம்மதி கெடும்... அதனால நான் உங்க வாழ்க்கைய விட்டு போறேன்.. நீ..ங்க... உ...ங்க... மனசுக்கு பிடிச்சவங்களோட நிம்மதியா.. வாழ்ந்தா போதும்... ' என்றாள் குழலீ அவனிடம் நேரடியாய்.

ஏன் டைவர்ஸ் செய்திட்டு... நீயும் உன் மனசுக்கு பிடிச்சவங்களோட நிம்...மதி...யா.... வாழப்போறியா??' என்றான் பதிலுக்கு.

ஹலோ பிரபு... மைண்ட் யுவர் வர்ட்ஸ்!!

எதுக்கு இவ்வளவு கோபம்??? நான் என்ன தவறா சொல்லிட்டேன்?? எனக்கு ஒரு நியாயம்... உனக்கு ஒரு நியாயமா??? போராடீ ஜெயிக்கனும் குழலீ... அதை விட்டுடூ இப்படி ஓடிப்போனா என்ன நியாயம் சொல்லு??

போராடி எதை ஜெயிக்கனும்?? யாரை எதுக்காக ஜெயிக்கனும்???

போராடி என்னை ஜெயிக்கனும்! எனகாக என்னை ஜெயிக்கனும்!

அதற்குள் குழலீ சற்றே சோர்ந்துவிட...'சரி சரி... நாம அப்புறமா சண்டை போடலாம்... நீ இப்போ கொஞ்சம் ரேஸ்ட் எடு' என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

என்ன பிரபு?? இப்படி பேசற?? அவ மனசு எவ்வளவு வருத்தப்படும்.. ' என்றான் வெற்றி.

டேய் அவ மனசு வருத்தப்படும்னு நினைக்கறியே வெற்றி... எனக்கும் மனசுனு ஒன்னு இருக்கு... அதிலேயும் அவ தான் இருக்கானு ஏன் புரிஞ்சிக்க மாட்ற??

டேய் பிரபு??!!

அவ தான் என்னை புரிஞ்சிக்க மாட்றா... ஆனா எல்லோருமே என்னை கொலை குற்றவாளியை போல தானே பார்க்கறீங்க? அவ காலில் விழனும் னு எதிர்பார்க்கறாளா?? இது உன் ஆளு வேற ஏடாகூடமா ஏதாவது செய்து வைக்கறா...' என்று யாழினியின் தலையில் ஒரு கொட்டு வைத்தான் பிரபு.

நான் என்ன செய்யட்டும் பிரபு?? குழலீ கிட்ட நேரா சொல்லவும் முடியாது... நீங்களும் உங்க வெஸ்டா போன ஈகோவை விட்டு வெளியே வர மாட்டீங்க... நானும் வெற்றியும் நல்லா இருக்கனும்னு நினைக்கற நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்னு நான் நினைக்ககூடாதா? சொல்லுங்க? அதனால தான் மலர் அண்ட் கீதா சிஸ் கூட கூட்டணி போட்டு உங்க ரெண்டு பேரையும் சேர்க்கனும்னு பிளான் எல்லாம் போட்டு... கடைசி அடியில தோற்று போயாச்சு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.