“நந்தினி. நீ தப்பா நினைக்காதே. நான் ரூபி பேர்ல மட்டும் பணம் போடலை. சிந்து பேர்ல, சக்தி பேர்லயும் போட்டிருக்கேன். அதனால் அது உன்னோட சம்பளம்னு நினைச்சுக்காதே.”
“அப்புறம் குமார் நீங்க இங்கேயே தங்கிறதா இருந்தா தங்கலாம். கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்கே தங்குவதானாலும் தங்கலாம்.” சொன்னவள் உள்ளே சென்றுவிட்டாள்.
சிந்தனாவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினாள்.
“நந்து என்னை மன்னிச்சிடு.” அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.
அவளிடம் அசைவில்லை.
“நம்ம பொண்ணு எங்கே?”
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.”
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வேறு பேசினாள்.
“என்ன சொல்லு?”
“சக்தி ரூபி ரெண்டு பேருமே இப்ப ஒத்துமையா இருக்காங
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லலாம்ல. அதுதான்மா எனக்கு உறுத்துது. என் மேல் பிரியம் இருந்திருந்தா என்னை அப்படியே ஏத்துக்கிடனும். அதன் பிறகு பக்குவமா என்கிட்ட சொல்லி என்னை மாத்தப் பார்த்திருக்கனும். அதை எல்லாம் அவ செய்யலையே.”
“நான் சொன்னா செய்யறேன்னு சொன்னியே?”
“நீங்க எதை சொன்னாலும் செய்யறேன்மா. ஆனால் …”