“ஆனால் பொன்னி விசயத்தை மட்டும் ஏத்துக்க மாட்டே. அப்படித்தானே?”
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்மா. என் மனசுக்கு அவ செஞ்சது சரின்னு தோணட்டும். அப்ப பார்க்கலாம்.” முடிவாக சொல்லிவிட்டான்.
இப்போதைக்கு அவனை விட்டுப்பிடிக்கலாம் என்று அவளும் அமைதியாகிவிட்டாள்.
அன்று அலுவலகத்திற்கு சிந்தனா வரவில்லை என்றதும் ருத்ரதேவன் தவித்துப்போனான்.
‘இந்த தனா ஏன் இப்படி நடந்துக்கிறா?’
அவளது செல்லுக்கு அழைத்தான்.
மறுமுனையில அவனது அழைப்பைக் கண்ட சிந்தனா தயங்கினாள்.
ஆனால் எதிர்காலத்தில் சுஜாவும் அவனும் இணைய நேர்ந்தால் எப்படியும் உறவுக்காரன் என்ற நிலையில் அவனிடம் இருந்து ஒதுங்க முடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கிறேன்.”
“எனக்கு என்னவோ இதுக்கு சுஜயா சம்மதிப்பாங்கன்னு தோணலை. என்னிக்குமே அவங்களுக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இருந்த மாதிரி தெரியலை.” தீவிரமான குரலில் சொன்னான்.
‘ஆனால் இப்ப அவங்க விருப்பம் வேற மாதிரி இருக்கே.’ மனதிற்குள்ளேயே பேசியவன் பகலவனிடம் விடைபெற்று கிளம்பினான்.