“இத்தனை நாள் பிடித்த வேலை இப்ப மட்டும் எப்படி பிடிக்காம போயிடுச்சு.”
“என் அக்காவை பத்திதான் உங்ககிட்ட பேச வந்தேன். ஆனால் இப்ப அது தப்புன்னு தெரியுது. இவ்வளவு சுயநலமா நீங்க நடந்துப்பீங்கன்னு நினைக்கலை. நான் மட்டும் எங்க அக்காவை நம்பி இல்லை. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவளை நம்பி இருக்கு. உங்களால் அவளை நல்லா வச்சுக்க முடியும்னு நினைச்சு வந்தேன் பாருங்க. என்னை சொல்லனும். இனி நமக்குள்ள எந்த உறவும் வேண்டாம். என் அக்காவோட மனசை காயப்படுத்திட்டு என்னால் நிம்மதியா வாழ முடியாது. அவ தங்கையாவெ காலம் பூரா வாழ்ந்திடுவேன்.”
வருந்திய குரலில் சொன்னவளை உறுத்துப்பார்த்தான்.
“என்னடி மிரட்டறியா? உன்னை விட்டா எனக்கு வேற பொண்ணே கிடைக்க மாட்டாளா?” கோபமுடன் கேட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்னு உங்களுக்கே தெரிஞ்சிருந்திருக்கும்.”
“என்ன நடந்தாலும் ஐ டோன்ட் கேர்.” கதவைத் திறந்து வெளியேறிவன் அதிர்ந்து நின்றான்.
அங்கே விழிகளில் செவ்வரி ஓட அவனை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சிந்தனா.
“தனா.. நான்..” தடுமாறினான்.
அவள் கை உயர்த்தி அவனை தடுத்தாள்.