அதை தடுக்கும் செயலாய் அன்னிச்சையாய் அவளை தரையில் உருட்டி..…அவள் மீது கவசமாய் இவன்….யவ்வன்….
நிலவினியோ இவனை உணரும் நிலையிலேயே இல்லை….. கீழே விழுந்த பயம்…மேல் விழுந்து கடிக்க வரும் நாய் பயம்…..கண்களை இழுத்துப் பிடித்து இறுக மூடி இருந்தாள்….
“தூரப் போ ரோவர்….போடா….” வாயால் தன் நாயை அதட்டியவன் கண்களோ தன் கைகளுக்குள்……தனக்குள்… கண்கள் இறுக மூடியபடி….பயத்தில் நடு நடுங்கியபடி படுத்திருக்கும் அந்த பால் வடியும் நிலா முகம் மீது…..
முதலாளி இத்தனையாய் பாதுகாக்க முயற்சி செய்யும் போது….. வந்திருக்கும் ஜந்து நட்பு ஜந்தா இருக்கும் போலயே…என்ற நினைப்போடு அந்த க்ரேடன் இப்போது திருக்க திருக்க முழித்தபடி நின்று கொள்ள…..
கலைந்திருந்த அவள் முன் நெற்றி முடி மீது ஒட்டி இருந்த தூசி சறுகை மெல்ல எடுத்துவிட்டவன்…. “பயப்பட ஒன்னுமில்ல வினிமா” என்றான். அன்ன சிறகாய் வருடியது அவன் குரல்.
நாயின் குரைப்பு நின்றிருக்க…..அத்தனை மென்மையாய் அவன் குரலும் அருகில் கேட்க மெல்ல கண் திறந்து பார்த்தாள் அவள்.
அவள் முகத்துக்கு எதிரில் அவன் முகம்…. அவள் கண்களில் படுகிறது அத்தனை காதலும் அக்கறையுமாய் பார்த்திருக்கும் அவன் கண்கள்…… இடம் பொருள் சூழல் மறந்து ….. இயல்பாய் பதறும் பெண்மை நிலை துறந்து…. அவன் கண்ணிலிருக்கும் காதலை மட்டுமாய் உணர்ந்து….. அசைவற்று நின்று போனாள் அவள் முற்றிலும் தன்னை மறந்து…. ஒரு நொடி சொர்க்கம்……
‘ஓ இது ரொம்பவே முக்கிய ஜந்து போல……நாம வேற இதோட ட்ரஸை பிடுங்கிட்டமே……’ கவ்வி இழுத்துப் போட்டிருந்த வேஷ்டியை எடுத்து வந்து அவர்கள் பக்கத்தில் வைத்து, செல்ல குழைச்சலாய் ஒரு வள் சொன்னது திருவாளர் ரோவர் இப்போது. ‘நான் நல்ல பையனாக்கும்…..’
அதில் தன் நிலை உணர்ந்து....இப்பொழுது இவள் பக்கம் வெட்கம் வெட்கம்…… அவனோ அதற்குள் எழுந்து கொள்ள….. அவன் முகம் பார்க்க முடியாமல் அவனுக்கு எதிர்புறமாய் திரும்பி நின்று கொள்கிறாள் இவள் இப்போது….. எப்படி பார்ப்பதாம்? என்னன்னு சொல்ல இங்க வந்த காரணத்தை?
“ரோவர் ஒன்னும் செய்யாது வினிமா…. நீ வேணா அந்த ரூம்ல போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்துக்கோ….” இவள் பின்னிருந்து இவளுக்கு முன்னாக நீளும் அவன் கை காட்டும் திசையைப் பார்த்தவள் மெல்ல அதை நோக்கி நடக்க தொடங்குகிறாள்….
பத்தரை உடையிலிருந்து ஒழுங்காய் ஒற்றை சல்வாருக்கு மாறி……..விரிந்து கிடந்த கூந்தலை சடையாய் பின்னிவிட்டு…. வெளிய போய் அவனைப் பார்க்கனுமே என நகம் கடித்து நேரம் கடத்திவிட்டு மெல்ல இவள் வேளியே வரும் போது……
சின்னதாய் தலையை அசைத்த அவன் கண்ணில் தெரிவது பாராட்டு….. அழகாய் இருக்கிறாளாம்….
நகை என்று எதுவும் அணிந்திருக்கவில்லை அவள். ஆண் வேடமிட்டு வந்தவளல்லவா? ஆனாலும் அவன் அழகாய் இருக்கிறாய் என சொல்லாமல் சொல்வது சந்தோஷத்தைதான் தருகிறது…..அவன் போலியாய் புகழ்கிறான் என்றெல்லாம் நினைக்க முடியவில்லை இவளால்…. அவன் கண்களில் தெரியும் உண்மை காரணம்….
“காஃபியா டீயா என்ன சாப்டுற வினி? “ அவன் கேள்வியில் தான் மெல்ல மற்றவைகளையும் சிந்திக்கவே துவங்குகிறாள் அவள்.
இங்க என்ன கிடைக்கும்? ஆமா இங்க என்ன ஒரு மாடையும் காணோம்…? மாடு துரத்த தானே வந்தா? ஐயோ கூட வந்த கோஷ்டிய எங்க? இவள நம்பி வந்தாங்களே…..? இவ மட்டும் இங்க ஜாலியா??? ஆமா ஜாலியா என்ன செய்துட்டு இருக்க??? அட இவளே நீ வந்தது இவன் கூட சண்டை போடடி நிலவினி…..ஆனா வந்து டூயட் பாடததுதான் மிச்சம்….மனசாட்சி பிட்டு பிட்டு வைக்க…..
எச்சில் விழுங்கியபடி அவனை ஒருவிதமாக நிமிர்ந்து பார்த்தாள்….
இவள் முகத்தைப் பார்த்தவன் இவள் மனம் உணர்ந்தான் போலும்….. “உன் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சேஃபா இருக்காங்க…..இப்பதான் அபை ….அதான் என் தம்பி கூப்ட்டு சொன்னான்.... “
யவ்வனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக தலையை அசைத்து வைத்தாள்தான் நிலவினி…. மனதிற்குள்ளோ இவள் இங்க வந்த விஷயம் இன்னும் எங்கெல்லாம் போயிருக்குமோ? என பக் பக் பாம் வெடிக்கிறது…..
“அப்டில்லாம் யார்ட்டயும் சொல்லிட மாட்டோம்….. இங்க எதை சொல்லனும் எதை சொல்ல கூடாதுன்னு அபைக்கும் தெரியும்…” இவள் விழி பார்த்தே புரிந்தானோ?? ஆறுதலாய் அவன் சொல்ல….
ஒவ்வொரு முறை இவனைப் பார்க்கும் போதும் முந்தைய தடவையைவிட அதிகாமாக பிடிக்கிறதோ???? இப்படியாய் ஓடியது நிலவினியின் மனம்.
பவிஷ்யா தன் எதிரில் நின்றவனை இமைக்க மறந்து பார்த்தாள்…. அவனோ அவள் திணறலை ரசித்தானோ? அல்லது தான் ரசிக்கப் படுதலை சுகித்தானோ? முகமெங்கும் விரவி இருந்த அந்த மென் புன்னகையுடன் தன் பார்வையை அவள் கண்ணிலிருந்து உருவி அவள் மீதெங்கும் ஓட்டினான்….
“பாருங்க உங்களுக்கு கைல அடிபட்ருக்கு…..” அவன் சொன்ன பின் தான் மெல்ல குனிந்து தன் கையைப் பார்த்தாள். தோல் சிராய்த்து அதன் மீது சகதி போல் மண்ணோ எதுவோ?.....
“முதல்ல கழுவிட்டு ஒரு டிடி போடனும்….. “ அவன் தான்…..