22. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
முன்தினமே தன் கழுத்தில் தாலி கட்டிய கணவன் தன்னை அறைந்ததை நம்ப முடியாமல் திகைத்து விழித்தாள் சுஜயா. இருந்தும் அவள் கண்களில் கண்ணீர் வரவில்லை. அவனை வெறித்துப் பார்த்தாள்.
சுஜயாவின் கன்னத்தில் பதிந்திருந்த தன் கைத்தடத்தை பார்த்த பின்புதான் தான் எந்த அளவுக்கு மோசமாக நடந்துகொண்டோம் என்று பகலவனுக்கு புரிந்தது.
தான் அறைந்த வேகத்தில் கீழே விழுந்துவிட்ட மனைவியைப் பார்த்தான். அவள் விழுந்து கிடந்ததை பார்க்கும்போதே தான் அறைந்த வேகம் அவனுக்குப் புரிந்தது. இருந்தும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல் தன்னை வெறித்துப் பார்த்த மனைவியின் பார்வை அவனை என்னவோ செய்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ுளிரும்போது அவளுக்கு வேறு என்ன வேண்டும்?
அதுதான் அவள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க காரணமானது. ஆனால் தாலி கட்டும் நேரத்தில் எவனுக்கோ பயந்து தன் லட்சியப் படிப்பைக்கூட படிக்க முடியாமல் இக்கட்டில் மாட்டிவிட்டேனே என்ற சுயவிரக்கம் அவளுள் எழுந்தது. அவளறியாமலே அவள் கண்கள் கண்ணீர் சுரந்தன.