(Reading time: 13 - 25 minutes)

பார்த்தியாடா? இப்பக்கூட உள்ளே வர்றேன்னு சொல்லலை. இவளை என்ன செய்யச்சொல்றே?”

“அம்மா அவளே சின்னப்பொண்ணு புரியாம பேசிக்கிட்டிருக்கா. நீயும் அவளோடு சரிக்குசமமா மல்லுக்கட்டறே. போம்மா!”

“ஆமாடா! நேத்திக்கு வந்தவகிட்ட உன் பருப்பு வேகலை. என்கிட்டதான் எகிறுவே.” நொடித்தவாறே உள்ளே சென்றாள்.

“சுஜா. உள்ளே வா.” அழுத்தமான குரலில் சொன்னான்.

“என்னால் அடிவாங்கிக்கிட்டு இங்கே கிடக்க முடியாது. என்னை பெத்தவங்க கூட என்னை அடிக்க யோசிப்பாங்க. ஆனால் கண்டவங்ககிட்டயும் அடிவாங்க முடியாது.”

தன்னை கணவனாக ஏற்றுக்கொள்ளாமல் கண்டவனாக நினைத்து பேசும் இவளை என்ன செய்வது?

“சரி கிளம்பு போகலாம்.”

“சும்மா போறதாயிருந்தா என்னை வெளியே விரட்டினப்பவே போ

...
This story is now available on Chillzee KiMo.
...

அதைகாட்டிதான் அவங்க பொண்ணு வளர்த்த லட்சணத்தை சொல்லனும்.”

“சொல்லிக்காட்டி என்ன நடக்கப்போகுது. சும்மா இரும்மா.”

“நீ என்னை அடக்கிறதிலேயே இரு. ஏய் குடுடி.” அதட்டியவாறே வந்தாள்.

அந்த கடிதத்தை எடுத்த சுஜயா ஒருகணம் யோசித்தாள். நாளை அதை தன் தந்தை பார்க்க நேர்ந்தால் என்னவாகும்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.