(Reading time: 12 - 24 minutes)

பாடலை கேட்ட ப்ரயு ஆதி சொன்ன மாதிரி கனவில் அவனோடு டூயட் தான் பாடினாள்.

மகிழ்ச்சியோடு கல்யாண ஏற்பாடுகளில் கலந்து கொண்டாள் பிரத்யு.. அதே சமயம் அவள் பொறுப்பையும் மறக்காமல் தன் நாத்தனார் வித்யாவையும் ரெகுலராக செக் up அழைத்து செல்வது, மாமியாரோடு கலந்து அவளுக்கு தேவையானதை பார்த்து செய்வது எல்லாம் செய்தாள்.

திருமணத்திற்கு நாள் நெருங்க, ஆதியிடம் பேசி, ப்ரயு அவள் அப்பாவிற்கு தன்னுடைய சேமிப்பில் இருந்து பணம் எடுத்து கொடுத்தாள். அது அவள் மாமியாருக்கு தெரியும்.. அதை பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.

தன் மச்சினிகளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று தன் அம்மாவை கலந்து பேசுவதற்காக அவன் அம்மாவை அழைத்தான்.

“அம்மா, பிரயுவின் தங்கைகளுக்கு நம் சார்பில் என்னம்மா செய்யலாம்? நீங்கள் எதாவது யோசித்து வைதிருக்கீர்களா?”

“ஏன்.. நாம் தனியாக செய்ய வேண்டுமா ? அதுதான் உன் மனைவி அவள் அப்பாவிற்கு பணம் கொடுதிருக்கிறாளே போதாதா ?”

“அம்மா , அது அவள் பணம்.. அவள் தன் தங்கைகளுக்காக கொடுப்பது.. ஆனால் நம் வீடு சார்பில் நாம் எதாவது செய்ய வேண்டாமா?”

“ஏன் ஆதி? இப்போ பணம் செலவழிக்கிற? நீ கல்யாணத்திற்கு வரணும்..அதோட நம்ம வித்யவோட டெலிவரி டேட் வேற நெருங்கி வருது.. டெலிவரி செலவு, வீட்டில் வைத்து பேர் வைக்கும் செலவு, குழந்தைக்கு எதாவது நகை போடணும் இதெல்லாம் எவ்ளோ செலவு இருக்கு? இப்போதான் ப்ரத்யா செய்யறாளே.. நாம வேற ஏன் செலவு செய்யணும்,,?” என்றார்.

“அம்மா.. என்னம்மா நீங்க ..? எப்போவும் இப்படியே பேசுறீங்க..? வித்யா சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு தனியாக வைத்திருக்கிறேன்.. அதுலேர்ந்து அவளுக்கு மட்டும்தான் செய்வேன்.. இதுவும் என்னோட பொறுப்புதானே.. நான் கூட இருந்து செய்திருக்கணும் .. அதுதான் முடியலே.. அட்லீஸ்ட் நாம ஒரு பொருள் பரிசு ஏத்துகிட்டா அவங்களுக்கு நல்ல இருக்கும் லே.. நீங்க இப்படி பேசுறது பிரத்யவிற்கு தெரிஞ்சா அவ எவ்வளவு வருத்தபடுவா? அவ என் இடத்திலே இருந்து உங்கள பார்த்துக்கும் போது நான் கொஞ்சமாவது செய்யவேண்டாமா? கொஞ்சம் யோசிங்க “ என்று வைத்து விட்டான்..

ஆதிக்கு தன் அன்னையை நினைத்தால் வருத்தமாக இருந்தது.. நல்லவர்தான். ஆனால் பண விஷயம் என்று வந்து விட்டால் சற்று சுயநலமாக சிந்திக்க தொடங்கி விடுகிறார்.. என்ன செய்து மாற்றுவது என்று தெரியவில்லை.

இதற்கிடையில் டிக்கெட் எல்லாம் எடுத்திருந்த ஆதி, சரியாக அவன் கிளம்புவதற்கு முன் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் அங்கே மிக பெரிய பனிப் புயல் ஏற்பட்டு, அங்கே அத்தனை போக்குவரத்தும் பாதிக்க பட்டது. அதே சமயம் இங்கே கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன், வித்யாவிற்கு தீடிர் என்று பிரசவ வலி ஏற்பட்டு hospital அட்மிட் ஆனாள்.

பிரயுவும், ஆதியும் கல்யாணத்திற்கு வருவார்களா ?

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.