(Reading time: 18 - 36 minutes)

.கே டா நா எங்கநு டிஸைட் பண்ணி நைட் சொல்றேன்..கிளம்பலாமா..

மகியை ஆபீஸில் இறக்கிவிட்டு விட்டு கிளம்பினான் ராம்..

மறுநாள் ராமிற்கு சென்ட்ஆஃப் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்..ஒவ்வொருவரும் அவனுடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்..கொஞ்ச நாள் தான் ஆகுதுனாலும்,நீங்க ஒரு நல்ல டீம் மெம்பர் ராம்,,உங்கள மாறி க்ளைண்ட்ஸ்கிட்ட பொறுமையா யாராலயும் இருக்க முடியாது என்று டீயு கெட் மீரா கூறினார்..அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்தாலும் ராமின் பார்வை அவ்வப்போது மகியிடமே சென்று மீண்டது..அவளோ எந்த கவலையுமின்றி திவ்யாவோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்..

வெளியில் வந்தவுடன் அவளுக்கு மெசெஜ் அனுப்பினான்,ஓய்..நா கம்பனிய விட்டு போறேனேனு கவலயே இல்லயா உனக்கு?

அதைப் பார்த்து சிரித்தவள் பதில் அனுப்பினாள்,கண்டிப்பா இல்ல ங்க..இது உங்க வாழ்க்கையின் அடுத்த முன்னேற்றம் அத நெனச்சு சந்தோஷமா தான் இருக்கு ஒரு வேளை நம்ம லவ்வ சொல்லாமலேயே இருந்துருந்தா ஃபீல் பண்ணிருப்பேன்னு நெனைக்குறேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

நல்லா பேசுற..ஆமா லவ்னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது,நாம ஏன் எல்லாரையும் மாறி ப்ரபோஸ் பண்ணிக்கவே இல்ல?

ம்ம்ம் ஆமா இல்ல..அது ஒண்ணும் கட்டாயம் இல்லயே ங்க..

அது கரெக்ட் தான் பட் நீ சொல்லி கேக்கனும் போல இருக்கு நைட் பேசுற அப்போ சொல்ற..

அதெல்லாம் முடியாது பா..எனக்கா எப்போ தோனுதோ அப்ப சொல்றேன்..

இப்போவே ஆர்டர் போடுறியா ம்ம்ம் நடத்து…

இரவு மகிக்கு அழைத்தான் ராம்,மகி மூவி புக் பண்ணட்டா இந்த வீக்கெண்ட்க்கு?

உங்க இஷ்டம் ராம்..எதுநாலும் எனக்கு ஓ.கே..

சரிடா நா பண்ணிறேன்..அண்ட் நானே வந்து உன்ன பிக்கப் பண்ணிக்றேன்..

ம்ம்ம் ஓ.கே ங்க,அண்ட் நாளைக்கு நீங்க புது கம்பனி ஜாய்ன் பண்றதுக்கு முன்னாடி என்ன பாத்துட்டு போறீங்களா ப்ளீஸ்..

கண்டிப்பா வரேன்டா இதுக்கு எதுக்கு ப்ளீஸ்லா சொல்றற..

ஓ.கே ங்க மார்னிங் பாப்போம் நீங்க போய் தூங்குங்க..

காலையில் அசதியினால் தூங்கிவிட்டாள் மகி..ராமின் போன் வந்தவுடன் எழுந்தவள் மணியை பார்த்து தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்..சரி சீக்கிரம் கிளம்பிவிடலாம் என்று எண்ணிக் கொண்டே அழைப்பை ஏற்றாள்..எங்க இருக்கீங்க ங்க..

என்னது எங்க இருக்கேனா வெளிலதான் இருக்கேன்..அல்ரெடி லேட் மகி சீக்கிரம் வா…

சாரி சாரி ராம்…இதோ வந்துட்டேன்..ஐயோ இப்படியே வா போய் நிக்குறது இன்னைக்குநு பாத்து இப்படி தூங்கிட்டேனே என்று தன்னையே நொந்து கொண்டு வேகமாக வெளியே சென்றாள்..

லாங் ஸ்கர்ட் அண்ட் டாப்பில் துக்கிப் போட்ட போனிடெயிலோடு வந்தஅவளை கண்ட ராமோ சிரித்துக் கொண்டே ஹே என்ன ஸ்கூல் பொண்ணு இப்படி வந்து நிக்குற..(எத்தனை தடவை தாங்க அழகுல மயங்குவாறு நம்ம ஹீரோ,பார் அ சேன்ஞ் கலாய்கட்டும்)

தூங்கிட்டேன் ங்க,சாரி,

ஹே பரவால்ல டா..சரி அப்படி எதுக்குதான் வர சொன்ன?

ஹா.,மறந்தே போய்ட்டேன் பாருங்க..என்று கையிலிருந்த சிறு பொட்டலத்தை திறந்து விபூதியை எடுத்து அவன் நெற்றியில் இட்டுவிட்டாள்..ஆல் த பெஸ்ட் ங்க..என்றாள் புன்னகையோடு..ராமிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..என்ன மாதிரியான அன்பு இது அதற்கு தான் தகுதியுடையவனா என்று ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தான்..சரி கூடிய விரைவில் எல்லாம் சரி ஆகிவிடும் என மனதை தேற்றிக் கொண்டு,தேங்ஸ்டா குட்டிமா என்று புன்னகையோடு விடைபெற்றான்..

அன்றைய பொழுது நல்லவிதமாக கழிய இரவு தங்கள் பணிகளைப் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டனர்..மகி நாளைக்கு ஒரு மணிக்கு மூவி..நீ 12க்கு ரெடியா இரு வந்து பிக் பண்ணிக்கிறேன்..

ஓ.கே ங்க..

ஹே குட்டிமா அது என்ன இப்போல்லாம் ஏங்க வாங்கநு எங்க அம்மா மாறி ஓல்ட் ஸ்டைல்ல கூப்டுற?நல்லாவே இல்ல..ராம்னே கூப்பிடுடா..

அது என்னவோ தெரில அவ்ளோ ஈஸியா கூப்பிட வரமாட்டேங்குது..

எல்லாம் வரும்…எனக்காக பப்ளீஸ்..

ராம் அதுக்கு எதுக்கு ப்ளீஸ் சொல்றீங்க இனி அப்படியே கூப்டுறேன்..

ம்ம்ம் குட்.,

மறுநாள் கூறியபடியே ராம் மகியை அழைத்துக் கொண்டு அந்த பெரிய மாலில் இருக்கும் தியேட்டர்க்கு சென்றான்..படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகி தந்தையை இழக்கும் காட்சியை உணர்வுபூர்வமாக காட்டியிருந்தனர்..மகியின் கண்கள் அவள் அறியாமலே குளமாகியிருந்தன..அதை கவனித்தவனோ எதுவும் யோசிக்காமல் அவளைத் தன் தோளோடு சாய்த்துக் கொண்டான்..அவளுக்குமே அந்த ஆறுதல் தேவையாய் இருந்தது..சிறிது நேரத்தில் தன்னிலையை உணர்ந்தவள் வேகமாக தள்ளி அமர்ந்தாள்..ராம் மெல்லிய சிரிப்போடு விலகி அமர்ந்தான்..மகிக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது..ச்ச இப்படியா எமோஷ்னல் ஆவ மகி..அவரு என்ன நினைச்சுருப்பாரு..என தன்னையே திட்டிக் கொண்டு இருந்தாள்…

அவளின் மனநிலை புரிந்தவனோ அவள் கையை இறுக்கமாக பற்றி இன்னொரு கையால் தன் மார்பினை சுட்டிக்காட்டி இந்தஇடம் எப்பவுமே உனக்கு மட்டும் தான் அதனால நீ பண்ணது ஒன்னும் தப்பு இல்ல..வீணா மனசை போட்டு குழப்பிக்காத குட்டிமா..என்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.