மறுபடியும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது,கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் பளபளக்க அழகாய் தலையசைத்தாள்..படத்தை முடித்துவிட்டு அங்கேயே எதாவது சாப்பிடலாம் என்று அமர்ந்தனர்.மகி.நாளைக்கு வீட்ல சொல்லலாம்நு இருக்கேன் நம்மல பத்தி…
மகிக்கு பயமாய் இருந்தாலும் தான் கூறியதை மதித்து உடனே வீட்டில் பேச போகிறானே என்ற சந்தோஷமும்..தேங்ஸ் ராம்..
ஓய்..தேங்ஸ் லா சொல்ல வேணாம் வேணும்னா ஐ லவ் யு சொல்லு..என்று கண்ணடித்தான்..
ம்ம்ம் சொல்ல வேண்டிய நேரத்துல கண்டிப்பா சொல்லுவேன்..
அது வர வெய்ட் பண்றேன் வேற வழி என பொய்யாக அலுத்துக் கொண்டான்..நாளைக்கு மார்னிங் பேசலாம்நு இருக்கேன்டா சோ என்ட இருந்து கால் வரலநா டென்ஷன் ஆயிடாத,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
ஓ.கே ராம்..பட் எனக்கு அப்போ அப்போ அப்டேட் பண்ணுங்க,
கண்டிப்பாடா..
மறுநாள் விடியும் போதே ஒருவித பதட்டத்தோடு இருந்தாள் மகி..கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு அறைக்கு வந்தவள் ராமின் அழைப்பிற்காக காத்திருந்தாள்..
ராம் வீட்டில்,….
ராம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்தான்..அவனது தந்தை உள் அறையில் போன் பேசிக் கொண்டிருந்தார்,ஆனாலும் ஜன்னலின் வழியே இவனை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..ராம் சமையலறையை எட்டி பார்த்தான்..தாயோ மும்மரமாக சமைத்துக் கொண்டு இருந்தார்…
அம்மா…
ம்ம்ம்ம்..
அம்ம்ம்மாமாமாமா…
ஏன்டா இப்படி கத்துற..பக்கத்துல தான இருக்கேன்..
முக்கியமா கொஞ்சம் பேசனும் வாம்மா…
அவரை பதில் பேச விடாமல் தரதரவென தனது அறைக்கு அழைத்து சென்றான்..
டேய் அப்படி என்னடா தலை போற விஷயம் இப்படி இழுத்துட்டு வர்ற.
அம்மா இத பாறேன் என்று தன் மொபைலில் இருந்த மகியின் புகைப்படத்தை காட்டினான்..
கருப்பு நிற காட்டன் புடவையில் ஒப்பனையற்ற முகத்துடன் தலை நிறைய மல்லிகையுடன் நின்றவளை பார்த்தவுடன் பிடித்துவிட்டது ராஜீக்கு..டேய் யாருடா இந்த பொண்ணு லட்சணமா இருக்காடா..உன் கூட வேலை பாக்குறாளா?ஆமா அந்த பொண்ணு போட்டோவ நீ ஏன் வச்சுருக்க?
ம்ம்ம்ம் உன் மருமக போட்டோ என்கிட்ட இல்லாம வேற யார்ட்ட இருக்கும்..?
ராம்ம்ம்ம்ம்ம்.
ஏன்மா கத்துற இங்கதான இருக்கேன்…
சூப்பர் செலக்ஷன்டா..கங்கிராட்ஸ்..நீயெல்லாம் கல்யாணம் பண்ணிப்பியானே டவுட்டா இருந்தது.இப்போ என்னடானா பொண்ணு பாக்குற வேலையவே குறைச்சுட்ட..எனக்கு டபுள் ஓ.கேடா…
ராமோ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்..பொறுப்பான அம்மா மாறியாம்மா பேசுற,நீ ஒத்துப்பனு தெரியும் ஆனா இப்படி ஒரு ரியாக்ஷன சத்தியமா எதிர்பாக்கல..
அவனது காதை பிடித்து திருகியவாறே டேய் ரொம்ப பேசின அப்புறம் உன் சாய்ஸ் ரிஜெக்ட் பண்ணிருவேன் பாத்துக்கோ,
தலைக்கு மேல் கைகூப்பி தெய்வமே தெரியாம பேசிட்டேன்,அப்பாகிட்ட நீ தான் மா பேசனும்.,
என்னடா அவ்ளோ அவசரம் உனக்கு?
எனக்கு இல்லமா மகி தான் அவசரபட்டா என்று அவளை பற்றி விளக்கினான்..
பாவம்டா கஷ்டபட்டு வளர்ந்த பொண்ணுல அதான் பயப்படுறா..இதுலயே அவளோட நல்ல குணம் தெரியுது..உன்னையே ஒருத்தி மாத்திருக்காநா சும்மாவா…சரி சரி நா அப்பாட்ட பேசிட்டு சொல்றேன் என்று தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்..சற்று நிம்மதியாக உணர்ந்தான் ராம்..மகிக்கு மெசெஜ் அனுப்பினான்,”குட்டிமா இன்பார்ம்ட் அம்மா அண்ட் ஷீ ஸ் சோ ஹாப்பி..அப்பாட்ட பேசிட்டு நா உனக்கு கால் பண்றேன்..”
அதற்குள் அவர் காதுக்கு விஷயம் சென்றுவிட ராமை அழைத்தார்..வந்து அமர்ந்தவன்,சாரிப்பா உங்கள்ட்ட எப்படி சொல்றதுநு தெரில அதான் அம்மாவ சொல்ல சொன்னேன்..
தட்ஸ் ஓ.கே ராம்..
அந்த வயதிலும் போலீஸின் மிடுக்கு அவரிடம் குறையவில்லை..ராமே அவரை பார்த்து பல நேரங்களில் பெருமை பட்டுள்ளான்..
சோ அந்த பொண்ணுதான் உன் லைஃவ் பார்ட்னர்னு உறுதியா இருக்க அப்படிதான?
எஸ் ப்பா…
ம்ம்ம் அப்போ உன்னபத்தின எல்லா விஷயங்களும் அந்த பொண்ணுக்கு தெரியும் அப்படிதான?
இதை ராம் சற்றும் எதிர்பார்க்கவில்லை..தடுமாறித்தான் போனான்..அது வந்துப்பா…
யெஸ் ஆர் நோ சொல்லு போதும் ராம்.,கண்டிப்பு இருந்தது அந்த குரலில்..
நோ ப்பா..