“சரி சரி நெற்றிக்கண்ணை திறக்காத. மாசத்துக்கு ஒரு வாட்டி ரோஜாப்பூ வாங்கிட்டு வந்து லவ் யூ சொல்லிக் கொடுக்கறது தொந்தரவுல வராது தேவி. டெய்லி பண்ணினாதான் வரும்”, என்று படு மொக்கையான காரணம் கூறி தன் தெய்வீகக் காதல் கதையைத் தொடர்ந்தான் மதி.
“சரி எல்லாம் முடிஞ்சுது. இந்த ஒரு வருஷமா வேலையும் பார்க்க ஆரம்பிச்சுட்ட. இப்போவும் என் காதலை ஏத்துக்காம சுத்தல்ல விட்டா என்ன அர்த்தம்”
“ஆங் உங்களைப் பிடிக்கலைன்னு அர்த்தம் போதுமா. நீங்க பேசி முடிச்சுட்டீங்கன்னா வழி விடறீங்களா. நான் போகணும்”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...
படிக்க தவறாதீர்கள்...
“பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டு எழுந்து போனா என்ன அர்த்தம் தேவி. உனக்கு என்னைப் பிடிக்கும்ன்னு நல்லாத் தெரியும். அதனால பொய் சொல்லாம உண்மைய சொல்லு”
“என்னது பிடிக்குமா, சும்மா நீங்களா ஏதானும் ஒண்ணைக் கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க ACP சார். எனக்கு உங்களைப் பிடிக்காது.... பிடிக்காது.... பிடிக்காது போதுமா. இனிமேயானும் வழியை விடுங்க. நான் உங்களை இத்தனை நாளா தவிர்த்துட்டு வந்தேனே. அதுல இருந்தே உங்களைப் பிடிக்கலைன்னு புரிய வேண்டாமா. வரதன் சார் சொந்தம் ஆச்சேன்னுதான் நீங்க பண்ற கலாட்டாக்கெல்லாம் சும்மா இருந்தேன்”
“நீ வக்கீல்தான் ஒத்துக்கறேன். அதுக்குன்னு டவாலி மாதிரி மூணு வாட்டி கத்தணுமா”
“நான் கத்தலை. உங்களுக்கு மண்டைல ஏறரா மாதிரி அழுத்தம் திருத்தமா சொல்றேன். இன்னொரு முறை இந்த மாதிரி லூசுத்தனமா உளறக்கூடாது பாருங்க”
“யாரு நான் லூசா. எனக்குத் தேவைதான். என்னைப் பிடிச்சுட்டே பிடிக்காதுன்னு சொல்றியே நீதான் லூசு”
“ஆண்டவா முடியல. எதை வச்சு உங்களை எனக்குப் பிடிக்கும்ன்னு சொல்றீங்க?”
“உனக்கு நான் மட்டும் முறைப்பையன் இல்லை. எனக்கு ரெண்டு அண்ணன்ங்க இருக்காங்க. அதைத் தவிர மாமா சொந்தம், அத்தை சொந்தம்ன்னு இன்னும் நிறைய முறைப் பசங்க இருக்காங்க. அவங்கள்லாம் வந்தா.... அவங்க வாசல் கேட்டை திறக்கும்போதே உன்னோட ரூம்குள்ள போய் பூட்டிப்ப இல்லை அப்படியே வெளிய எங்கனா எஸ்ஸ் ஆகிடுவ. இன்னைக்கு வரை என்னைத் தவிர யார்கிட்டயானும் நீ பேசி இருக்கியா. இத்தனை நாள் நான் லவ் சொல்லும்போதெல்லாம் அழுதாலும், முறைச்சாலும் என்னைப் பத்தி யார்கிட்டயும் சொன்னதில்லை. உனக்குப் பிடிக்கலைன்னா, முதல் முறையே மாமாக்கிட்ட கம்ப்ளெயின் பண்ணி இருக்கலாமே. ஏன் பண்ணலை”, அவன் மாற்றி மாற்றி கேள்வி கேட்க, அவன் சொல்வது உண்மை என்பதால் பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாள் தேவி.
“என்ன பதில் சொல்ல முடியலையா, சரி விளையாட்டு எல்லாம் வேண்டாம். உனக்கு என்னைப் பிடிக்கும். அதை மறைக்காத. உன்னை எது என் காதலை அச்செப்ட் பண்ண விடாம தடுக்குது. நீயோ நானோ சின்னப்பசங்க கிடையாது. எனக்கு முப்பது வயசாகுது. அம்மா ரெண்டு வருஷமா கல்யாணம் பண்ண சொல்லி துளைச்சுட்டு இருக்காங்க. நானும் எத்தனை நாள்தான் அவங்களை சமாளிக்கறது சொல்லு”
“உங்களை யார் அவங்களை சமாளிக்க சொன்னது. உங்க அம்மாவையே நல்ல பொண்ணா பார்க்க சொல்லலாம் இல்லை”
“லூசு மாதிரி உளறாத தேவி. உன்னை லவ் பண்ணிட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்றதா. கேக்கவே கண்றாவியா இருக்கு. உனக்கும் பிடிச்சிருக்கு, எனக்கும் பிடிச்சிருக்கு அப்பறம் என்ன தேவி”
“ACP சார்.....”
“ஐயோ முடியலையே, மொதல்ல இப்படி கூப்பிடறதை நிறுத்து. அழகா அன்பா மாமான்னு கூப்பிட்டு பழகு. அப்போவே காதல் தானா வரும்”
“ப்ச் என்னைப் பேச விடுங்க. நடுல டைவெர்ட் பண்ணாதீங்க. நான் பொய் சொல்ல விரும்பல. எனக்கு உங்களைப் பிடிக்கும். அதுவும் எல்லாரும் என்னை பார்த்து பார்த்து நடத்தும்போது, நீங்க மட்டும்தான் எனக்கு ஈக்குவலா சண்டை போட்டு, திட்டும்போது திட்டி, பாராட்டும்போது பாராட்டி அப்படின்னு நார்மலா நடத்தினது, அதுனாலேயே உங்களைப் பிடிச்சுது. லவ்ன்னா அடுத்தது என்ன கல்யாணம்தானே. எனக்கு உங்களை கல்யாணம் பண்ண என்னத் தகுதி இருக்கு”
“உனக்கு என்ன தகுதி இல்லை. நல்லா படிச்சு இருக்க. யாருக்கும் கெட்டது நினைக்காத நல்ல மனசு. எல்லாத்தையும் விட எனக்கு பிடிச்சு இருக்கு, இதை விட வேற என்ன வேணும்”
“இதெல்லாத்தையும் விட பெரிய தகுதி இருக்கு, உங்க வசதிக்காக அதை சொல்லாம விட்டுட்டீங்க. கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணோட கன்னித்தன்மை. அது என்கிட்டே இருக்கா”, என்று கேட்டு கண்கலங்க மதி உச்சக்கட்ட கோவத்துடன் தேவியைப் பார்த்தான்.
“எதானும் அறிவுகெட்டத் தனமா பேசாத தேவி. வர்ற கோவத்துக்கு பளார்ன்னு அடிச்சுடப்போறேன். நீ சொல்றதைப் பார்த்தா இப்போ நிறைய விதவைகள் கல்யாணம் நடக்குது. அவங்கல்லாம் கல்யாணம் பண்ணவே தகுதி இல்லாதவங்க மாதிரிதானே ஆகுது”
“அவங்களும் நானும் ஒண்ணு கிடையாது”