“எனக்கு விட்டுக் கொடுக்குறது பழகி போனது... பிறந்தது முதலே என் வாழ்க்கையில எதுவுமே என் இஷ்டம் போல நடந்தது இல்லை.... சின்ன பொண்ணா இருந்த போதே அம்மா அப்பா இறந்துட்டாங்க... நான் வளர்ந்த பாட்டி வீட்டுல எல்லாத்துக்குமே கட்டுப்பாடு உண்டு.... அப்புறம் என் கல்யாணம் கூட அவங்க இஷ்டம் போல நடந்தது தான்... ஆனால் என் வாழ்க்கையில நான் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தது அவரோட இருந்த அந்த எட்டு வருஷங்கள் தான்.... அவர் இருந்தப்போ என்னை ராணி போல பார்த்துக்கிட்டார்... அப்புறம்.... ம்ம்... இப்போ எனக்குன்னு இருக்குறது உதய் மட்டும் தான்... எனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ அவனுக்கு பிடிச்சது போலவே எல்லாம் செய்து எனக்கு பழகி போச்சு... நீயும் அது போல விட்டுக் கொடுக்க உன்னையே தயார் செய்துக்கோ....”
...
This story is now available on Chillzee KiMo.
...
ி முடிச்சாச்சா முடிச்சாச்சான்னு கேட்டே நாலு தடவை போன் செய்துட்டான்....” என்று நந்திதாவிடம் சொல்லி, அவள் முகம் மாறுவதை ரசித்த படி, உதயின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பேசினாள்.
“என்னப்பா உதய், என்ன வேணும் உனக்கு???”
“அப்புறம் என்ன ஆச்சு அண்ணி??? இரண்டு பேரும் பேசி முடிச்சிட்டாங்களா?”