" ஹே பொண்ணு ..யாரு நீ "
"..."
"உன்னதான் மா .. என்ன வேணும் ?"
".."
"தமிழ் தெரியாதா ? வாட் யூ வாண்ட் ?"
"..."
அப்போதும் பதில் வராமல் போக ஒருவேளை ஊமையோ என்று நினைத்து வேறு வழி இல்லாமல்காரை விட்டு இறங்கினான் தமிழ் ..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
" ஹே வாட் இஸ் யுவர் ப்ராப்ளம் ?வூ ஆர் யூ ?இட்ஸ் கெட்டிங் லேட் "என்று அவன் பேச ஆரம்பிக்க
"எனக்கு தமிழ் தெரியும் "என்றாள் யாழினி ..
"சோ ? இதை சொல்லுறதுக்கு தான் என் காரை ஸ்டாப் பண்ணியா ?"
" எதுக்கு நிதானமே இல்லாம காரை ஓட்டுறிங்க ?"
" நீங்க ட்ராபிக் போலீசா ?" யாழினியின் தோற்றத்தை ஆராய்ந்தபடி கேட்டான் ..
"இல்ல சக வழிப்போக்கன் சொன்னா கேட்க மாட்டிங்களா ? அவங்களில் ஒருத்தி " என்றாள் யாழினி ..மீண்டும் அவனுக்கு கோபம் வந்தது ..
"ஹே என்ன தண்ணி போட்டு இருக்கியா ?இல்ல காரை நிறுத்தி வம்பு பண்ணுறது உன் ஹாபியா (hobby) ?" என்றான் ..
"மிஸ்டர் நல்ல கருத்து சொன்ன கேட்க மாட்டிங்களா ? "
பாக்கெட்டில் இருந்த விசிட்டிங் கார்டை அவள் கையில்திணித்தான் தமிழ் .தினமும் 5-7 இவினிங் நான் வெட்டியா தான் இருப்பேன் அப்போ போன் பண்ணி கிளாஸ் எடு ..இப்போ ஆளை விடு " என்று பொரிந்தவன் , கோபமாய் முறைத்தவளை சட்டை செய்யாமல் சென்று விட்டான் ..
"சரியான திமிர் பிடிச்சவன் .. இருடா உன்னை கவனிச்சுக்குறேன் " என்றவள் அவனின் விசிடிங் கார்டை பத்திரமாய் வைத்து கொண்டாள் ..
தமிழின் அருகாமையால் நன்கு உறங்கி இருந்தாள் யாழினி .. அவள் நெற்றியில் முத்தமிட்டவனும் சிறிது நேரம் அப்படியே கண் மூடினான் ..அவன் விழிகள் மூடி இருந்தாலும் சிந்தனை ஓயவில்லை ..எப்படியாவது புகழும் அவளும் பேச வேண்டும் ...என்ன செய்யலாம் என்று யோசித்தவனின் கண்களில் அந்த பூ ஜாடி பட்டது ,..அதை வெச்சு என்ன பண்ண போறான் ? அடுத்த எபிசொட் ல சொல்றேன் ...
தொடரும்
{kunena_discuss:994}