திரும்பி நேராக பார்க்கா விட்டாலும் உதயின் பார்வை தன் மீது இருப்பது புரிந்ததால் (அவர் இதை தவிர வேற என்ன தான் செய்றார் :-) ) சின்ன வெட்க புன்னகையுடன் புடவைகளை பார்க்க தொடங்கினாள் நந்திதா.
சேலைகளை தேர்வு செய்வது தான் அத்தனை சுலபமாக இருக்கவில்லை...!
ஜவுளிக் கடல் என்பது போல குவிந்துக் கிடந்த பல்லாயிரம் புடவைகளும் போதாது என்பது போல கடையையே புரட்டி போட்ட அந்த ஐந்து பெண்களும், ஒருவழியாக நிச்சயதார்த்த புடவை, கூரை புடவை, வரவேற்ப்பு புடவை என்று ஒவ்வொன்றாக தேர்வு செய்தார்கள்....
அதன் பின் இறுதியாக திருமண சடங்கு தொடங்கும் நேரத்தில் கட்டும் பட்டு புடவையை தேட தொடங்கினார்கள்.
கிரான்டான சேலை வேண்டும் என்று அவர்கள் தேடி தேடி... தேடிக் கொண்டே இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாமல் போனது....!
அவள் தனக்குள் குமைந்துக் கொண்டிருக்க, உதய்,
“பெரியம்மா நான் இங்கே இருந்து ஆபிஸ் போகலாம்னு நினைக்கிறேன்... நீங்க உங்க காரிலேயே அம்மாவையும் ப்ரியாவையும் டிராப் செய்திடுறீங்களா?....” என்றான்.
“அதுக்கென்ன உதய், டிராப் செய்தால் போச்சு...” என்றாள் காமாட்சி.