"வா செல்லம்!டைம் ஆகுது!"-மகேஷ் கேக் வெட்ட அவளைஅழைத்தான்.புன்னகையோடு அவனோடு நடந்தவளின் கண்கள் மெல்ல திவாகரையும் உரசிவிட்டு சென்றன..
அவளது பார்வை அவனை பலமாக வீழ்த்தியது என்பதற்கு அவன் வெளிவிட்ட பெருமூச்சே சாட்சியாக அமைந்தது.
மெல்லிய கீதம் இசைத்துக் கொண்டிருக்க,அனைவருக்கும் மத்தியில் நின்றாள் சிவன்யா.
கத்தியை எடுத்து கேக்கை வெட்டினாள்.
"ஹேப்பி பர்த்டே டூ யூ!"-அனைவரும் பாட தொடங்க வெட்டிய கேக்கை தன் தமையனுக்கு ஊட்ட தொடங்கினாள் சிவன்யா.அவன் அதையே திருப்பி அவளுக்கு ஊட்டினான்.
"டியர் ஃப்ரண்ட்ஸ்!இந்த நல்ல நாள்ல நல்ல விஷயம் ஒண்ணு சொல்றேன்!சிவன்யா சீக்கிரமே நம்ம கம்பெனியோட சி.இ.ஓ.வா நம்ம கூட ஜாயின் பண்ண போறா!"-அவன் கூறியதற்கு பல கைதட்டல்கள் எழுந்தன...
"அண்ணா நான் எப்படி?"
"எதுவும் பேச கூடாது!லெட்ஸ் செலிப்ரேட்!"-மகேஷ் தனது சக நண்பர்களோடு விழாவை கொண்டாட சென்றான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
சில நிமிடங்கள் ஓடிவிட,தனிமையை விரும்பியவள்,மாடிக்கு சென்றாள்.
மனம் பெருமை கொண்டது!!இவ்வளவு அன்பான மனிதன் தமையனாக பெற என்ன பாக்கியம் செய்தேன் என்று சிந்தித்தாள் சிவன்யா.
"ம்கூம்..!!"
"நீங்களா?இங்கே என்ன பண்றீங்க?"
"ம்..நிலாவை பார்க்க வந்தேன்!"
"ஆனா!இன்னிக்கு நிலாவே காணுமே!"
"தெரியும்..அதான் இந்த நிலாவை ரசிக்க வந்தேன்!"-திவாகர் சிவன்யாவை பிடித்து இழுத்தான்.
"என்ன பண்றீங்க?அண்ணா வந்துடப்போறார்!"
"ம்..வரட்டும்!"
"வி...டு..ங்க!"-ஈன ஸ்வரத்தில் ஒலித்தது அவளது குரல்.
"ரொம்ப அழகா இருக்க நீ!"
".............."-திவாகர் அவளது செவிகளில் தனது மூக்கை உரசினான்.
"மகேஷுக்கு மட்டும் ஊட்டிவிட்ட எனக்கு?"
"நான் போய் எடுத்துட்டு வரேன்!"
"இரு...நீ சரியான மக்கு!"
"நானா?"
"ம்...ஒண்ணுமே தெரியலை!"
-என்று அவளது இதழை நோக்கி நெறுங்கினான் திவாகர்.
சரியாக அந்நேரம் அவனது கைப்பேசி அலற ஆரம்பித்தது.
"ச்சே..எந்த கழுதைன்னு தெரியலையே!காரியத்தையே கெடுத்துட்டான்!"-என்றப்படி தன் கைப்பேசியை எடுத்தான்.
தலைக்குனிந்தப்படி நின்றிருந்தவளின் பார்வையில் வினா எழுந்தது.
"உன் அண்ணன்தான்மா!"-என்றான் பாவமாய்!
அவள் என் அண்ணனையா கழுதை என்றாய் என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.அவளிடம் பார்வையாலே கெஞ்சிவிட்டு கைப்பேசியை காதில் வைத்தான்.
"என்னடா?"
"திவா எங்கே இருக்க?"
"காத்து வாங்க மாடிக்கு வந்தேன்!"
"கீழே வாடா!"
"என்ன விஷயம்?"
"வாடா..!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது.
"எதுக்கு கூப்பிடுறான்னு தெரியலையே!"-என்று ஏக்கமாக சிவன்யாவை பார்த்தான்.அவள் புன்னகைத்தப்படி அங்கிருந்து ஓடிவிட்டாள்.
ஒரு பெருமூச்சைவிட்டு கீழே இறங்கி சென்றான்.
"எதுக்குடா கூப்பிட்ட?"-என்றான் மகேஷை பார்த்து..
"நான் எப்போ உன்னை கூப்பிட்டேன்?"
"என்ன?நீதானே போன் பண்ணி கீழே வர சொன்ன?"
"போனா?ஆமா என் போன் எங்கே?"-என்று சிந்தித்தவன்,
"அது சிவா ரூம்ல தானே இருக்கு!"என்றான்.
"அப்போ நீ போன் பண்ணலையா?"
"இல்லைடா..டிரிங்க்ஸ் சாப்பிடுறீயா?"
"இல்லை வேணாம்..!"-என்று குழம்பி போய் அங்கிருந்து நகர்ந்தான்.
ஏதோ ஒரு எண்ணத்தோடு மறைமுகமாக சூழலை நோட்டமிட்டு கொண்டிருந்தது அந்த உருவம்!!!
தொடரும்
{kunena_discuss:991}