‘தர்மா இன்டஸ்ட்ரீசின்’ முடிசூடா மன்னனாக வலம் வந்துவிட்டு இதை எல்லாம் இழந்து தன்னால் வாழ முடியுமா? வயது காலத்திலேயே இதை இழப்பதற்கு பயந்துதான் பிடிக்காதவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் நடத்தி பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டாயிற்று. இந்த வயதான காலத்தில் தன்னால் வெளியில் செல்ல முடியுமா?’ நினைக்கவே தலையை வலித்தது.
இந்த சிக்கலில் தன்னை மாட்டிவிட்டு சென்ற தந்தையை நினைத்து கோபம் வந்தது.
‘இதற்காகத்தான்டா மகனே நான் அன்றே சொன்னேன்.’ தந்தை எதிரே நின்று கேலி செய்வது போன்ற மாயை அவரை மருட்டியது.
தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து டிரஸ்ஸிங் டேபிளின் அருகே இருந்த ஜக்கை எடுக்க சென்றவர் அங்கே இருந்த காகிதத்தைப் பார்த்து எரிச்சலடைந்தார்.
அன்பரசி கணவனிடம
...
This story is now available on Chillzee KiMo.
...
பையன் அவளைக் கண்டு மயங்கியிருக்கிறான் என்று இங்கே வந்து போனதில் அவள் தெரிந்து வைத்திருக்கிறாள்.
எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடித்துவிட்டால் அப்புறம் எதையும் நினைத்துக் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம் என்ற கனவில் இருக்கிறாள்.
சுரேகா தங்கியிருந்த வீட்டின் முன் கார் நின்றது.