மகளை மட்டும் தனியே விட தயங்கிய மாலினி அவளது தோழிகள் மூவரை கூட தங்க வைத்திருக்கிறாள்.
அவர்களிடம் இருந்து செலவுக்காக பணம் எதையும் வாங்கவில்லை. அதனால் அவர்கள் மாலினி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள்.
அவளுக்கென்ன? அவள் சிரமப்பட்டு சம்பாதித்த பணமா? எல்லாமே புகழேந்தி கொடுப்பதுதானே.
எந்த செலவும் இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வீட்டுக்கு கொடுக்க முடிந்ததில் சுரேகாவின் தோழிகள் அவளை மகாராணி போல் நடத்தினர்.
அதுதானே மாலினிக்கு வேண்டும். இதை எல்லாம் பார்த்தால்தானே மாப்பிள்ளை வீட்டாருக்கு சுரேகா உயர்வாக தெரிவாள்.
சுரேகாவின் தோழிகள் மாலினி சென்ற கார் வாசலில் நிற்கும் சத்தம் கேட்டதுமே ஓடிவந்தனர்.
பின்னேயே மெதுவாக ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாள்.
“சரி! சரி! இப்பதான் நான் இங்கே படிக்கிறேன்னு தெரிஞ்சுப் போச்சுல்ல. தொணதொணக்காம போ. அப்புறம் பேசலாம். இனியும் இங்கே நின்னுக்கிட்டிருந்தா அவனுங்க என்னைக் கிண்டல் பண்ணியே கொன்னுடுவானுங்க. நீ போ.”
சொன்னவன் நிற்காமல் சென்றுவிட்டான்.
சுருதியின் முகம் விழுந்துவிட்டது.