அதனால் இறக்க மறந்து போனேன் நீ அரிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீரலாம் எது தான் ஆகாது…
மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தனிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றி
ஏழு புவனம் வென்று வந்தேன் -ஹோ
-நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன்
அருகினில் அன்று உனை கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகில் இருந்தேன்
காதல் உலகில் மேர்கோடு வெளிச்சம் போவும் எல்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிவதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம் -ஹோ
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்.
—
உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன் நீ அரிவாயோ
உன்னை பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்து போனேன் நீ அரிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீரலாம் எது தான் ஆகாது…
மொட்டைமாடியில் கனவு கண்டு கொண்டிருந்தவன் மழை துளி விழுந்ததும் பதறியடித்து போய் அவன் ரூமில் தூங்கினான் ..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்
படிக்க தவறாதீர்கள்...
அடுத்த நாள் விக்ரமை எதிர் பார்த்து இருந்தவள் அவன் வராமல் போகவே என்னவோ ஏதோ என அவனுக்கு அழைக்க அவன் தொலைபேசியை எடுக்கவில்லை ..
அவன் இங்கே தனியாய் ஒரு வீட்டில் இருக்கிறான் சமையலுக்கு ஒரு ஆளும் நைட் வாட்ச்மேன் மட்டும் உண்டு ... அவன் அம்மாவோ தங்கையோ ஷாப்பிங் வந்தால் மட்டும் இங்கு தங்குவார்கள் என்பதுவரை இவள் அறிந்தது ..
அம்மா வந்திருப்பாங்களோ அதுதான் அவன் போன் எடுக்களையோ என்று இவள் யோசித்துகொண்டுஇருக்க ...
நேரம் ஆக ஆக இவளுக்கு பயம் வந்துவிட்டது சரி நேரில் போய் பார்த்துவிடுவோம் அப்படி யாராவது இருந்தாலும் விக்ரம் சமாளிப்பான் என்று நினைத்து நேரில் சென்றால் ..
வாட்ச்மேன் இன்னும் வரவில்லை உள்ளே சென்று காலிங் பெல் அடிக்க ஆள் வரும் அரவமே தெரியவில்லை ..
விக்ரமின் ஸு மற்றும் செருப்பு வெளியில் தான் இருந்தது அதனால் அவன் வீட்டில் தான் இருக்கவேண்டும் என .. இவள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவுடன் சரி பொறுத்ததுபோதும் பொங்கி எழு மனோகரி என கல்லை எடுத்து ஜன்னலை உடைக்கபோகும்போது கதவு திறந்தது ...
விக்ரம் கண்கள் கோவப்பழமாய் சிவந்திருக்க நிற்கவும் சக்தியற்று நின்றிருந்த அவனை பார்க்கும்போது பெண்ணுள்ளம் தவித்து துடித்துப்போனது ...
அவனிடம் எதுவும் கேட்காதோன்றாமல் ... அவசரமாக அவனை கைத்தாங்களாக அழைத்துக்கொண்டுபோய் சோபாவில் உட்காரவைத்து ..பின் தலையில் அடித்துக்கொண்டவளாய் அவனை படுக்கவைத்தாள் .. அவனை பார்க்கும் போதே அவன் நாள் முழுக்க ஒன்றும் உண்ணவில்லை என புரிந்தவள் ..
அவசரமாக கிச்சன் சென்று தேடி தேடி மடமடவென அம்மா சொல்லிக்கொடுத்த கஞ்சி காய்ச்சினால் ..அதை பதமாக ஆற்றி அவனுக்கு குடிக்கக்கொடுக்க அவனோ எடுத்துகுடிக்கவும் சக்தி அற்றவனாய் இருந்தான் .. அவனை குழந்தை போல் பாவித்து தான் தோல் மீது சாய்த்து அவனுக்கு கஞ்சியை புகட்டினால் ..
பயங்கர பசியில் இருந்தாலும் அவனால் மெதுவாகத்தான் சாப்பிட முடிந்தது ... அவனுக்கு புகட்டி முடிந்ததும் வெளியே போய் மாத்திரை வாங்கி வர போனவளை தடுத்தவன் அருகில் இருந்த டேபிள் காட்ட அதில் இருந்த டப்பாவில் அழகாக மாத்திரைகள் தனி தனி கவரில் போட்டு எதற்கு எந்த மாத்திரை என குறிப்புடன் இருக்க
தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வெது வெதுப்பான நீருடன் அவனுக்கு கொடுத்தால் ...
அவனை மெதுவாக படுக்கை அறைக்கு கொண்டு செல்ல ..