இருவரும் தங்களது அறைக்குள் நுழைந்துகொண்டனர். இன்று விடுமுறைநாள் என்பதால் பிள்ளைகளுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்திருந்தாள் அன்பு. இன்றுதானே ரசித்து ருசித்து உண்ண நேரம் கிடைக்கிறது. இருவரும் குளித்து தயாராகி உணவு மேசைக்கு வந்தனர்.
வழக்கம் போல் புகழேந்தி சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றுவிட்டதால் பிள்ளைகளுக்கு அருகில் இருந்து பரிமாற தயாரானாள்.
“அம்மா! நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்கம்மா.”
சிந்தனா சொன்னாள்.
“இல்லே சிந்து. நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிடறேன்.”
தொடர்புடையவை: <
...
This story is now available on Chillzee KiMo.
...் என்று நினைக்கும்போது இப்போதும் தந்தையின் நினைப்பு அவளுக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவரை மாதிரி தந்தை கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். அம்மா அடிக்கடி சொன்னது சரிதான் என்று அவளது மறைவுக்குப் பின்னர் அவள் தினம் தினம் எண்ணிப்பார்க்கிற ஒன்று.
தந்தை மட்டுமா? அவளது மாமனார்?