அவளுக்கு இன்னொரு தந்தை போலல்லவா நடந்துகொண்டார். தன்னுடைய தந்தைக்காவது இரத்த பாசம். ஆனால் மாமனாருக்கு என்ன வந்தது? தனது மகனையும் பகைத்துக்கொண்டு சொத்து முழுவதையும் அவள் வசத்தில் அல்லவா ஒப்படைத்துவிட்டார்.
இரண்டு ஆண்களும் அவளை கொண்டாடியது போதும் என்று ஆண்டவன் நினைத்துவிட்டான் போல. அதனால்தானோ என்னவோ கணவன் அவளுக்கு இப்படி கிடைத்துவிட்டான். மனைவியை ஒரு மனுசியாய் கூட மதிக்காதவன். அவளுக்கும் மனம் என்ற ஒன்று இருக்கும் என்று புரியாதவன்.
தனக்கு வாய்த்த இந்த நிலை தன் மகளுக்கு வரவே கூடாது என்று தினம் தினம் ஆண்டவனிடம் வேண்டுகிறாள். தனக்கு கணவன் இழைத்த கொடுமைக்கு அவள் ஆண்டவனையே மறந்திருக்க வேண்டும்.
ஆனால் முத்தாய் இரு குழந்தைகளை கொடுத்து தனது வாழ்வுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இவரு பெரிய மகாராஜா! தன்னோட கோபத்தை ரொம்ப கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தறாரோ? இப்ப எதுக்கு இவன் இங்கே வந்தான்?’
கேள்வி முளைக்க மீண்டும் படிக்க முயன்றாள். அவனோ அந்த இடத்தை விட்டு எழுந்து போக விரும்பாதவனாக அருகில் கிடந்த நாளிதழ்களைப் பார்த்தான். பிறகு பொறுமை இல்லாமல் சில இதழ்களைப் பார்த்தான்.