‘அருண்பிரசாத் ஏன் அப்படி நடந்துகொண்டான்?’
அவளுக்குப் புரியவில்லை.
முதலில் அவனை நெருங்க முயல்வதாக குற்றம் சாட்டினான்.
பிறகு அவனே வந்து அவளைக் காதலிப்பதாக சொன்னான்.
அவனது போக்கே புரியவில்லை.
அவன் தன்னை வைத்து சீண்டி விளையாடுகிறான் என்று அவளுக்குத் தோன்றியது.
பிரச்சினையே வேண்டாம் என்றுதான் அவள் ஒதுங்கிப் போகிறாள். இருந்தும் விடாமல் துரத்துவது ஏன்?
இவளுக்கு வணங்காமுடியை தெரியும் என்பதால் அவர்களது முதல் அறிமுகத்தில் நடந்த அந்த சந்தேகம் மறைந்திருக்கும் என்று நினைத்தாள்.
ஆனால் அவனுக்கு இன்னும் தன் மீது நம்பிக்கை வரவில்லையோ? அதுதான் இப்படி விளையாடி பார்க்கிறானோ?
“ஏய்! சிந்து. உனக்கு சிந்தனான்னு பேர்
...
This story is now available on Chillzee KiMo.
...
போட்ட எழுத்துக்கள் இருக்குமே அதை வாசிக்க சொன்னார்.
“எனக்கு படிக்க தெரியும். நான் நம்பரையே சொல்றேன்.” என்று அந்தப் பெண் மறுத்ததையும் அவர் பொருட்படுத்தவில்லை.
அப்போது அந்தப் பெண்ணின் முகம் போன போக்கை பார்க்கனுமே.
நிர்மலாவுக்கும் என்ன நடந்தது என்று புரிய சிரிப்பு வந்தது.