“நீதான்”
“அப்படி சொன்னதா எனக்கு ஞாபகமே இல்லை. ஒன்னு சொல்லவா? உன்னை எனக்கு எப்போதுமே பிடிக்காது.”
அழுத்தம்திருத்தமாய் சொன்னவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்கிறே? நான் உண்மையைதான் சொல்றேன். பிறகு ஏன் உன் வீட்டுக்கு வந்தேன்னு கேட்கறியா? அப்படி என்னை விட நீ எந்த விதத்தில் உசத்தின்னு பார்க்க வந்தேன்.”
“எனக்கு அப்படியில்லை சுருதி. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த அக்கறையில்தான் சொல்றேன். தயவுசெய்து கேளு.”
ஒரு நிமிடம் அவளது பேச்சில் திகைத்து நின்றாள் சுருதி. பிறகு தலையை சிலுப்பிக்கொண்டாள்.
“நீ பழகுறாயே. அவன் நல்லவன் இல்லையாம்.”
“அப்படின்னு யார் சொன்னா?”
“வணங்காமுடி தாத்தாதான் சொன்னார்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கொண்டதை நினைத்து வருந்தினாள்.
அன்னையின் மடியில் இருந்து எழுந்தவள் அவளைப் பார்த்து
“சாரிம்மா!” என்றாள்.
“எதற்கு?”
“நீங்க எவ்வளவோ தன்னம்பிக்கையோட என்னை வளர்த்திருக்கீங்க. சில நேரங்களில் நான் சின்ன விசயத்தை பெரிது படுத்தி என்னை நானே வருத்திக்கிறேளே அதுக்காகதான்.”