ஒரு கைத்தொழிலைக் கத்துக்கொள்ளும் போது ஒருவனுக்கு இன்னொரு ஆளின் பலமும் கிடைப்பது போல என்பது அவளது எண்ணம். நாமே நமக்கு முதலாளியாக இருக்கும் போது வேலை தேடி அலைய வேண்டியதில்லை.
அப்படி போற இடத்தில் என்ன பிரச்சினை?
“என்னாச்சு நிம்மி? நீ ஏன் இத்தனை நாள் இதைப் பத்தி என்கிட்ட பேசலை.” பதட்டமானாள்.
உடனே சோக உருவான நிர்மலா
“நானும் உன்கிட்ட சொல்லனும்னு நிறைய தடவை யோசித்தேன் சிந்து. ஆனால் எப்படி சொல்றதுன்னு தெரியாம விட்டுட்டேன்.”
அவளது குரல் மேலும் சிந்தனாவை பதட்டமடையச் செய்தது.
“இப்ப மட்டும் எப்படி சொல்வே?” இன்னொரு தோழி கேட்க
பவ்யமான குரலில்
“வாயால்தான்” என்று சிரிக்காமல் சொன்னவளை விசித்திரமாக பார்த்த சிந்தனா என
...
This story is now available on Chillzee KiMo.
...
்று ஏங்கி ஏங்கியே உயிரை விடறாங்க.”
வருத்தமுடன் சொன்னாள்.
தேரில் அம்மன் அலங்கார பூஜிதையாய் வலம் வந்தாள்.
அப்போது சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் ஆடு வெட்டி பலி பூஜை செய்து அதன் பிறகு தேரை எடுத்தனர்.
“அது ஏன் நிம்மி அங்கே எந்த சாமியும் இல்லை அங்கே பூஜை செய்யறாங்க?”