தன் சகோதரி கணவரை இழந்ததால் மட்டுமே வாழ்க்கையை இழந்துவிட்டதாக நினைத்திருந்த அவனுக்கு அவள் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அறிய நேர்ந்தபோது இரத்தம் கொதித்தது.
“நான் அவங்களோட அந்தரத்தைப் பற்றி உன்னிடம் சொல்லியிருக்க கூடாது. ஆனால் அதைப் பற்றி தெரிந்தால்தான் இனியாவது அவங்க வாழ்வு சங்கடம் இல்லாம இருக்கனும்னு ஆசைப்படறேன்.”
அவன் பேசாமல் அமைதியாக நின்றான்.
“அவங்களை எந்த நேரத்திலும் வருந்த விடாதே. உனக்கு என்ன தேவைன்னாலும் என்கிட்ட தயங்காம கேளு. இது என்னோட முகவரி.”
“இல்லை வேண்டாம் சார்.” மறுத்தான்.
“என்ன வேண்டாம்?”
“என் அக்காவோட வாழ்க்கையில் விளையாண்ட உங்க குடும்பத்து உறவு எனக்கு வேண்டாம்.” உறுதியாகக் கூறினான்.
அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பத்திதான் பேச வந்தேன்.”
“என்னைப் பற்றி என்ன?”
“நீ யாரோடோ சுத்துறதா கேள்விப்பட்டேன்.”
அவள் ஆச்சர்யமுடன் சிந்தனாவைப் பார்த்தாள்.
“நான் யாரோடு சுற்றினால் உனக்கு என்ன? அதைப் பற்றி பேச நீ யார்?”
“உனது தோழி!”
“அப்படியா? அப்படி என்று யார் சொன்னது?”