“என் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் வர்ற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன்மா. நான் வர்றேன்.”
“சாப்பிட்டு போகலாம்மா!”
“இல்லைம்மா! இங்கே வரும்போது நீங்க எப்படி நடந்துப்பீங்களோன்னு பயந்துக்கிட்டே வந்தேன். என்ன நடந்தாலும் எங்க தப்புக்காக தாங்கிக்கனும்னு நினைச்சுக்கிட்டுதான் வந்தேன். நீங்க என்கிட்ட நடந்துக்கிட்ட விதத்திலேயே என் மனசும் வயிறும் நிறைஞ்சுடுச்சும்மா. நான் இப்ப சந்தோசத்தோடயே போறேன்.”
வாசல் வரை வந்து வழியனுப்பினாள். சுரேகா விடைபெறும் வரையில் கூட புகழேந்தியை திரும்பி பார்க்கவேயில்லை.
உள்ளே நுழைந்த அன்பரசி பணத்தை எடுத்து புகழேந்தியின் கைகளில் கொடுத்துவிட்டு எதுவும் நடவாத மாதிரி தன் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டாள்.
தன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ள். அவன் அவளைக் காதலுடன் பார்த்தான்.
‘ஐயோ! என்னைக் கொல்லாதே! உனது காதலுக்கான தகுதி எனக்கு கிடையாது.’
“ப்ளீஸ் சுரேந்தர்! எனக்கு திருமணத்தில் எல்லாம் விருப்பமில்லை. என் பெற்றோர் ஏதோ ஆசையில் உங்ககிட்ட வந்து பேசிட்டாங்க. நீங்க என்னை மறந்துடுங்க.”
அவன் முகம் சுண்டிப்போனது.