“உனக்கு என்னைப் பிடிக்கலியா சுரேகா! நான் உன் அழகுக்கு ஏற்றவன் இல்லைன்னு தெரியும். நான் உன் மேல் ஆசைப்படுவதே அதிகம்னு தெரியுது. இருந்தும் என்ன செய்ய? என்னால் உன்னை மறக்க முடியலியே?”
அவன் தன்னையே தாழ்த்திக்கொள்வது அவளுக்கு தாங்கவில்லை.
சுரேந்தர் கண்ணியமானவன். அவளைப் பார்க்கும் கண்களில் காதல் மட்டுமே தெரிந்தது. கயமை துளியளவு கூட இல்லை. தான் அவளுக்குத் தகுதியில்லாதவன் என்று அவன் வருந்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவனிடம் உண்மையை சொல்லாமல் அவன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளப்போவது இல்லை. ஆனால் வெளியில் சொல்லிக்கொள்ளுமளவுக்கு அவளது பெற்றோரின் செயல் இல்லையே!
அவள் தலை குனிந்தவாறே வருத்தமுடன் தன் பெற்றோரின் கீழ்த்தரமான செயலை சொல்லி முடித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
்கின்றனர்.
திடீரென்று அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் தான் துணையிருக்க வேண்டும் என்று அங்கேயே தங்கிவிட்டான்.
அன்று தான் இல்லாமல் அன்பரசி எவ்வளது தவித்துப்போயிருப்பாள் என்று அவனுக்கு தோன்றியது. ஏதோ அவளுக்கு கார் ஓட்டத் தெரிந்ததால் கணவனைக் காப்பாற்றிவிட்டாள். இல்லையென்றால்?