அவனுக்கு தன் மகள் இருந்த பாசம் புரிந்து அவனது தலையை வருடிக் கொடுத்தவர் ஒரு தலையாட்டலுடனே அவனிடம் விடைபெற்றிருந்தார். அவன் தன் தாய்க்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறான் என்று புரிந்த சிந்தனாவும் கண்ணீருடன் அவனிடம் விடைபெற்றாள்.
“என்ன சிந்தும்மா? சின்னப்பிள்ளை மாதிரி அழுதுக்கிட்டு. நீங்க தைரியமா போங்க. நாங்க பார்த்துக்கிறோம்.”
நடப்பது எல்லாமே சிற்பிக்கும் சுதனுக்கும் ஆச்சர்யமாகவே இருந்தது. சுதனை அழைத்து வந்து அவன் தங்களது சகோதரன் என்று சிந்தனா அறிமுகப்படுத்திய அன்றே அவனது ஆச்சர்யம் ஆரம்பித்துவிட்டது.
“அது எப்படிக்கா இத்தனை நாட்கள் இல்லாம புதுசா சொந்தம்னு வந்து முளைக்கிறாங்க?”
“திடீர்னு முளைக்கலை சிற்பி! நீ சுருதி நம்ம வீட்டுக
...
This story is now available on Chillzee KiMo.
...
நலக்குறைவு பற்றி கேள்விப்பட்ட விஜயசேகரன் ஓடோடி வந்தார்.
“அம்மாடி சாந்தி! நீ எதுக்கும் கவலைப்படாதே! என் பேரன்தான் உன் வீட்டு மாப்பிள்ளை. அதில் எந்த மாற்றமுமில்லை.” என்று உறுதிகொடுத்தார்.
அதனால் நிம்மதியாகவே அவளது உயிர் பிரிந்தது. அதன் பிறகு அன்பரசியை படிக்க சொன்னார் வணங்காமுடி.