கார் நகர்ந்துக்கொண்டிருக்க... அலையடித்து கொண்டிருந்தது அபர்ணாவின் மனம்.
'அவன்தான் சொன்னான் என்றால்...... அவன் எண்ணங்களை என் மீது திணிக்க பார்க்கிறான் என்றால்... எனக்கு எங்கே போனதாம் அறிவு??? நான் இந்த உடைகளை அணிந்துக்கொண்டு இங்கே வந்திருக்க கூடாது... என் மனதை அவனுக்கு புரிய வைத்திருக்க வேண்டும்...' அவள் மனம் அவளையே குறை சொல்லி குட்டியது.
சில நிமிடங்கள் கழித்து எண்ண அலைகளில் இருந்து விடுபட்டு மெல்ல பரத்தின் பக்கம் திரும்பினாள் அபர்ணா. ஏதோ யோசனையில் மூழ்கிப்போனவனாக காரை செலுத்திக்கொண்டிருந்தவனை கலைத்தது அவள் குரல்
'தேங்க்ஸ் பரத்...'
'எதுக்குமா??? என்றான் யோசனைகளில் இருந்து சட்டென வெளிவந்து. 'உன்னை கார்லே கொண்டு விடறதுக்கா??? நீ வேறே... என் கார்லே நீ ஏறினதுக்கு நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்...' இதழ்களில் மென்னகை ஓட சொன்னவனிடம் சில நொடி மௌனம். பின்னர் தொடர்ந்தான்...
'உனக்கு தெரியுமான்னு தெரியலை அபர்ணா...... சில வருஷம் முன்னாடி உனக்கு அடி பட்டதும் நான் உன்னை ஹாஸ்பிடல் கொண்டு போனப்போ என் கையிலே காசு கிடையாது. சரியா சொல்லணும்னா.. பிச்சைகாரன்... ஆனா... இன்னைக்கு அதே அபர்ணாவுக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் என் சொந்த கார்லே கூட்டிட்டு போற அளவுக்கு வளந்திருக்கேன்.... இன்னைக்குதான் நான் ஜெயிச்சிட்டேன்னு எனக்கு தோணுது... இது எல்லாம் உன்னாலேதான் உனக்காகதான் அபர்ணா..' அவன் குரல் நிறைய சந்தோஷம்.
இமை தட்ட மறந்து பார்த்தாள் அவனை. பிரமிப்பாகதான் இருந்தது அவளுக்கு. இமாலய வளர்ச்சி ஆயிற்றே இது!!! அவன் முன்பு ஒரு நாள் சொன்னது போல் ஜெயித்து விட்டு வந்து நிற்கிறானே என் முன்னே??? எல்லாவற்றுக்கும் காரணம் அவன் என் மீது கொண்ட காதலா? காதல் இப்படி எல்லாம் ஜெயிக்க வைக்குமா???
'என்ன அபர்ணா... அப்படி பார்க்கிறே...' அவள் முகம் பார்த்து புன்னகைத்தான் அவன்.
இன்னமும் அதே ஜீன்ஸ் டி ஷர்டிலேயே தானே இருக்கிறாள் அவள்??? ஆனால் சற்று முன் ஹோடேலில் அமர்ந்திருந்த போது இருந்த அசௌகரியத்தை அவன் அருகிலேயே அமர்ந்திருந்தும் உணரவில்லை அவள். முகத்தை மட்டுமே பார்த்து பேசும் அவனது பார்வையில் இருந்த கண்ணியத்தை நன்றாகவே உணர்ந்திருந்தது பெண் மனம்.
'இதெல்லாம் போதாது. இன்னும் நிறைய நிறைய ஜெயிக்கணும் நீங்க...' குளிர் புன்னகையுடனும் நிறைந்து போன மனதுடனும் சொல்லியே விட்டாள் அவள். .
'அப்படியா???.' அழகாய் சிரித்தபடியே அவள் முகம் பார்த்தான் அவன். ஒரு பெருமூச்சுடன் அவள் கண்களை அவன் பார்வை அவள் கண்களை துழாவ... அவன் சொல்லாமல் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் அவளை தைக்க தவறவில்லை.
'அதெல்லாம் நீ என் அருகில் இருந்தால்தான் நடக்கும் என்கிறானோ???'
சட்டென ஒரு முக மாற்றம் அவளிடம். அருண் மீது அடி மனதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், பரத்தின் காதலின் ஆழம் புரிந்தே இருந்தாலும் நிச்சியமாய் இவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணமெல்லாம் இல்லை அவளிடம். அவளுக்கு வாழ்கை என்றால் அது அருணுடன்தான். சட்டென திரும்பிக்கொண்டாள் பெண்
அவன் பேசாமல் காரை செலுத்திக்கொண்டிருக்க... சில வினாடிகள் அப்படியே நகர... அவனை பார்த்து கேட்டாள் அவள்....
'ஏன்??? உலகத்திலே நான் மட்டும்தான் பொண்ணா??? இல்லை நான் என்ன பெரிய க்ளியோபட்ராவா??? நானெல்லாம் ரொம்ப அவரேஜ். நீங்க நினைச்சா உங்களுக்கு தேவதை மாதிரி பொண்ணுங்க கிடைப்பாங்க.. அதிலே ஒரு பொண்ணை........' அவள் முடிக்கவில்லை
'அபர்ணா ப்ளீஸ்...' கொஞ்சம் உயர்ந்தே ஒலித்தது அவன் குரல். அவன் கண்களில் தீவிரம்.
'என் தேவதை நீ தான்... புரியுதா? இனிமே இப்படி எல்லாம் பேசாதே...... எனக்கு பிடிக்காது...' என்றான் சற்றே அழுத்தமாக.
'நீங்க ஏன் மறுபடி மறுபடி.??? எனக்கு அருணைதான் பிடிச்சிருக்குன்னு நான் தெளிவா சொல்லிட்டேனே... அதுக்கு அப்புறமும் நீங்க... அருண் என் மேலே உயிரையே வெச்சிருக்கார்... எனக்கு ஒண்ணுன்னா அவர் துடிச்சு போயிடுவார் தெரியுமா???'
சற்று முன் அருணை அவனிடம் விட்டுக்கொடுத்து விட்டோமோ என்று ஒரு தவிப்பும் மேலிட..... பரத்தை எப்படியாவது தள்ளி நிறுத்தி விடவேண்டுமென்ற எண்ணத்தில் .... அவள் படபடவென பேசி முடிப்பதற்குள் ஒலித்தது அவள் கைப்பேசி.
'அருண்தான்...' என்றபடியே அழைப்பை ஏற்றாள் அவள்.
'ஹேய்... எங்கே இருக்கே நீ???'
'இல்லை... நான் கிளம்பிட்டேன் அருண். எனக்கு கொஞ்சம் அன்கம்ஃபர்டபிளா இருந்தது அங்கே. அதனாலே நான்..கிளம்பிட்டேன் ' பரத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சொன்னாள் அவள்.
அருணுக்கு தன்மீது நிறையவே காதல் என்பதை பரத்திடம் நிரூபித்து விடும் அவசரம் அபர்ணாவுக்கு. அருணிடமிருந்து அழைப்பு வந்தவுடன் பரத்தை ஜெயித்து விட்ட பாவம் அவள் முகத்தில். ஆனால்...
எனக்கு உள்ள அதே நினைவுதான் ஓடிட்டு இருந்தது,
இன்னும் கமென்ட் போடலையேன்னு..
ரொம்ப அருமையான Epi...
அபர்ணா பொண்ணே.. பரத் க்கு எதும் ஆகிருமோன்னு இப்படி பதறுர தான.. அப்புறம் ஏன்டா அவன் காதல் ல மட்டும் ஏத்துக்க மாட்டேன்ற..
அருண் உனக்கானவன் இல்ல.. அம்மாகிட்ட அருண் பாசமா இருக்கிறதெல்லாம் சரி தான்.. ஆனா உன்கிட்ட..? காலமெல்லாம் கண்ணீரிலே கரைஞ்சு போயிரக்கூடாதே..
பரத் உன்னை.. உன்னுடைய காதல்ல..
உன்னுடைய வளர்ச்சிய இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் வத்சு மேம் ரொம்ப அழகா சொல்றாங்க..
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
Avan kadhal evvalavu azhamanathunnu avanoda vazhkai valarchi romba nallave kattirukku.. Bharat manasu valikkumpothellam enakka kashtama irukku... Neenga Bharathoda manasu padumpattai romba azhamavum elimaiyavum sollureenga
Aparna um adhe pol than, arun ai easy ah vittu kodukka mudiyala,
Ana oru dress vishayathula kuda arun ippadi nadandhukkumpodhu aparna adhai yosikkanum
Arun idathula ava bharath ai vachu parka vendam, ana arun avalukku tevaiya nu ava yosikkanum
Indha epi la bharath a pathi sollave vendam, eppavum aparna kaga avan yosipadhu
Vishwa, bharath relationship innum konjam suspense oda pogudhu
Bharath valarppu pillaiya, vishwa parents ku
Tangalukku nu oru pillai vandhadhum bharath ai othukkittabgala
Kurippa vishwa Amma apuram vishwa mama (aparna Appa) adhanala than vishwa bharath pathi avarkitta sollalaiya
Eagerly waiting next epi vathsala :)
Nice update
தன் மகளை சீராட்டி பாராட்டும் தந்தைகள்
துணைவியாய் வரும் பெண்ணை மட்டும்
துச்சமாய் நினைப்பது ஏனோ
தன் கைப்பாவையாகவே ஆட்டுவிக்க விரும்பும்
தன்மையும் முறை தானோ
நீ என் அம்மாவை போல...
அது திரைப்படங்களின் வசனமாக இருந்தாலும் வாழ்க்கையின் நிதர்சனமாக இருந்தாலும் இந்த ஒரு வரியை தன் காதலி அல்லது மனைவிக்கு ஆண் முகவரியாக அளித்திடும் போது பெண்ணானவள் தன் இதயத்தை சமர்ப்பித்து விடுகிறாள் அவன் காலடியில்...
அன்பு காதல் என்ற பிணைக் கயிற்றால் தன்னை தானே விலங்கிட்டு கொண்டு விடுகிறாள்...ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. அவளது சுயமரியாதைக்கு பங்கம் வருமேயானால் அவள் அணை உடைத்தெழுந்து சீறினாலும் தன்னையே அழித்துக் கொள்ள துணிந்தாலும் அது பிரளயத்தின் ஆரம்பம்.. ஆகி விடும் அனர்த்தம்.
அன்று ஈசன் சதியின் கருகிய உடலையே சுமந்து கொண்டு தன் நிலை மறந்து தன் கடமை துறந்து பித்தனாய் அலைந்து கொண்டிருந்த வேளை நாராயணன் துணித்து தன் சுதர்சனத்தால் சதியின் உடலை துண்டாகி ஈசனின் துயர்சிறையை தகர்த்து உலகத்துக்கே நன்மை அளித்தார்.
இன்றும் கிட்டத்தட்ட அர்த்தமற்ற ஒரு காதலை இறுக்கமாய் பிடித்துக் கொண்டிருக்கும் அபர்ணா... இன்னும் அது உயிரற்ற ஒன்று என்று அவள் உணரவில்லை. பரத்தின் காதலும் நேசமும் இன்று அவளுக்கு முட்களாய் குத்தினாலும் வேதனையை அளித்தாலும் அது அவள் நன்மைக்காகவே செயல்படும் சுதர்சனம் என்றே ஒரு நாள் அறிவாளோ...
அஸ்வினி...அபர்ணாவின் இரட்டையோ ...ஆழ்மன பிம்பமோ... அபர்ணாவிற்கு அவள் எடுத்துச் சொல்வது தானே தனக்கு அறிவுரை சொல்லிக் கொள்ளவது போல...
வானின் நிலவிற்கு உலகை ஆட்டுவிக்க விருப்பம் வந்ததோ... காலில் சலங்கை மகுடியாய் சப்திக்க விஸ்வத்தை தன் கண் பாவத்தில் கட்டிப் போட்டு விடவே நர்த்தனம் புரிய வந்தாலோ நிலாப்பொண்ணு.
Bharat ... padikka padikka... avanai avlo pidikkudhu.. enna oru character .. yikes ..
total episode um very touching
"Naan appadi seydhal avalukku valikkume .. "
"Ungalukku appadi onnuna thanga mudiyadhu Bharat.. Naan azhuven " ...
"Vittu kodukka nama kai mudhalle irangalam thappillai..aanal eppo parthalum... nama mattume vitu kodukka mudiyadhu... "
idhu ellam romba pidicha varigal ...
Aparnavin manam maruma..
Vishwavin Nila ponnu intro.. kodukka poreenga..
waiting to read more Vathsala..
Aparna yen Arun'i kalyanam seithuka porenu yosikurathu oru positive sign'nu thonuthu. Edutha decision'la strong'aga irupathaga kanpithu kondalum, antha decision sariyanu avangaluke oru kelvi spark agi iruka mathiri thonuthu.
Intha pori avangalai intha kalyanathil irunthu veliye kondu vara uthavumanu parpom
Ipo break'la ipadi time kidaikum pothu padithu porumaiya comment share seiyum pothu, life'la evvalavu miss seithutomnu thonichu
Me too happy to read and share my comments :)
Take care ji :)
aparna aruna pathi eppo nalla purnchipa ..
aswiniku oralvu therinchi irukku pola ...
barath aparna car scene nalla irunthathu ...
waiting for next ud...
Aparna & Bharat pesikollumidam...miga azagana scene ...kanavilum piraruku teengu ennaata aval kunam...atai kandu urugum Bharat...oddave oddaamal adakumurai seyyum Arun.....Poduva Akka taan tangaiku advice solvsnga ...Inge tangai advice seyyum nilai ...telivaga sintikum pesum Ashwini...
Last scene Vishwa ..Hinduja cont...seyyaama vidudeengale...
:)