ஆண்மகன் அவன்!!! வாழ்கையின் பல வலிகள், வார்த்தைகள், வேதனைகள், மேடு பள்ளங்கள் எல்லாவற்றையும் கடந்து வந்தவன்.!!! ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து அவன் கண்களில் கண்ணீர் என்ற ஒன்று மட்டும் வந்தது இல்லை.
'உங்களுக்கு அப்படி ஏதாவது ஒண்ணுன்னா என்னாலே தாங்க முடியாது நான் ரொம்ப அழுவேன் பரத்...' அவள் சொல்லி முடிக்க கட்டிக்கொண்டது அவன் கண்ணிலும் கண்ணீர்!!! அவளிடமிருந்து தொற்றிக்கொண்டது கண்ணீர்.
கண்களில் நீர் தேங்கி நிற்க பார்த்திருந்தான்!!! அவளையே பார்த்திருந்தான் அவன்!!! 'இதை விட வேறென்ன வேண்டுமெனக்கு வாழ்க்கையில்.???
'நீங்க அப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டீங்க இல்ல... ப்ளீஸ் சொல்லுங்க பரத்... எனக்கு பயமா இருக்கு...' கெஞ்சினாள் அவள். சுதாரித்துக்கொண்டு அழகாய் சிரித்தான் அவன்.
'அபர்ணா..' என்றான் இதமாக. 'நீ என்னை பார்த்து சும்மா ஸ்மைல் பண்ணாலே போதும் அதை நினைச்சுக்கிட்டே ரெண்டு வருஷம் வாழ்ந்திடுவேன். நீ இவ்வளவு தூரம் சொன்ன பிறகு நான் அப்படி எல்லாம் செய்வேனா.??? கண்டிப்பா மாட்டேன்.
ரெண்டாவது....... வாழ்க்கையிலே நிறைய கஷ்டங்களை தாண்டி வந்திருக்கேன்மா. ஆனா எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கையை முடிச்சுக்கணும்ன்னு மட்டும் நான் நினைச்சதே இல்லை. நான் அவ்வளவு கோழை இல்லமா... ஸோ... டோன்ட் வொர்ரி..'
'நிஜமாதானே???' கண்ணீரை துடைத்தபடி கேட்டாள் பெண்.
'நிஜமா'
'ப்ராமிஸ் பண்ணுங்க...' அவள் கை நீட்ட அவள் கை மீது கை வைத்தான் பரத்.
'ப்ராமிஸ்...'
'தேங்க்ஸ் பரத்' அவனை பார்த்து திருப்தியான புன்னகையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள். அவள் சென்ற திசையை பார்த்திருந்தான் அவன். 'அவளது அன்பு மழையில் நீந்திக்குளித்த உணர்வு.' நடந்த நிகழ்வுகளில் இருந்து விடு படவே சில நிமிடங்கள் பிடித்தன அவனுக்கு. கட்டிலில் சாய்ந்து கண் மூடிக்கொண்டான் அவன்.
'மனம் முழுவதும் அன்பை மட்டுமே நிரப்பி வைத்திருக்கும் இவளை ஆராதிக்க தெரியவில்லையே அந்த முட்டாள் அருணுக்கு???' பொருமியது அவன் மனம்!!!
அன்று மாலை... ஏழு மணி... சென்னை... விஷ்வா வேலை பார்க்கும் மருத்தவமனையின் ஆண்டு விழா...
அதற்காக போடப்பட்டிருந்த மேடையின் கீழே வந்த அமர்ந்தான் அவன். ஏதோ நடன நிகழ்ச்சியாம். இந்த நடனம், நாட்டியம், இதை பற்றி எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியாது விஷ்வாவுக்கு. போகிற போக்கில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தமர்ந்தான் அவன்.
திரை விலக, அவன் நிமிர அவன் விழிகள் பதிந்தன அங்கே மேடையின் மீது நாட்டிய உடையில் நின்றிருந்த இந்துஜாவின் மீது!!!
தொடரும்......
{kunena_discuss:982}