(Reading time: 11 - 21 minutes)

ப்பா ஊருக்கு போயிட்டு வர்ற வரைக்கும் அம்மாவ அழவிடாம பார்த்துக்கோங்க சரியா?... அப்பா அப்பப்ப வந்து பார்க்குறேன் உங்களை…”

திலீப் சொல்லிவிட்டு பிள்ளைகளின் முகம் பார்த்ததும்,

“அப்போ இப்போ மறுபடியும் நீங்க ஊருக்குப் போறீங்களாப்பா?...”

“நாங்களும் வரோம்ப்பா… எங்களையும் கூட்டிட்டு போங்கப்பா… ப்ளீஸ்…”

“ஆமாப்பா… எங்களையும் கூட்டிட்டு போங்க…”

பூஜாவும் பிரேமியும் அடம்பிடிக்க ஆரம்பிக்க, திலீப்பிற்கு என்ன சொல்லி சமாதானம் செய்ய என்று தெரியவில்லை…

அந்த நேரத்தில், “அப்பா எங்கயும் போகமாட்டார்… நீங்க வாங்க…” என கெஞ்சி கொஞ்சி வாசந்தி அவர்களை உள்ளே அழைத்து செல்ல,

சரயூவின் தந்தையிடமும், சண்முகத்திடமும் திலீப் மன்னிப்பு கேட்டு விட்டு நகர்ந்த போது,

“நான் அவரோ ஊருக்கு கிளம்புறேன்ப்பா….” என்றாள் சரயூ…

அவளின் பதில் கேட்டு அங்கு வந்த வாசந்திக்கு மூச்சே அப்போது தான் வந்தது போல் இருக்க, வாசந்தியின் கணவருக்கோ மகளின் முடிவு சற்றே அதிர்ச்சியளித்தது…

சண்முகத்திற்கோ, மகன் மனம் மாறியது ஒரு புறம் அதிர்ச்சியென்றால், மருமகள் தங்களுடன் வீட்டுக்கு வரப்போகிறாள் என சம்மதம் தெரிவித்தது அவரை ஆன்ந்த அதிர்ச்சியில் மூழ்கடித்திருந்த்து…

அர்னவோ சரயூவின் முகத்தினையே கூர்மையாக பார்த்திருந்தான்…

திலீப்பிற்கோ சரயூதானா பேசியது என்ற திகைப்பும், தன்னை மன்னித்துவிட்டாளா என்ற கேள்விக்குறியுடன் கூடிய சந்தோஷமும் வந்திருந்தது…

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.