(Reading time: 22 - 44 minutes)

புடவையின் முன் கொசுவத்தை கையில் பிடித்தபடி நிறைமாத கர்பிணியாய் தாய்மைக்கே உரிய அழகோடு தன் முன் மண்டியிட்டு புடவை சரிசெய்து கொண்டிருந்த கணவனை ஆசையாய் நோக்கினாள்..IPS தேர்வில் தேர்வாகி போலீஸ் உடை அணிந்து கம்பீரமாக இருக்க போகிறவன் தன் மனைவியின் முன் மண்டியிட்டிருக்கிறான்..பெண்மைக்கே உரிய கர்வம் இருந்தது மகியின் முகத்தில்..

ஷப்பாபாபா அக்யுஸ்ட்ட பிடிக்குறது கூட கஷ்டமில்ல நீ சொல்றமாறி இந்த புடவைய கட்டிவிடுறது தான்டீ கொடுமையே..ஜுனியர் ப்ளீஸ் சீக்கிரம் வெளிய வாடா உங்கம்மா என்ன ட்ரில்லு வாங்குறா..என போலியாய் அலுத்து கொண்டு தன்னவளை பார்க்க அவளோ அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து கொண்டிருந்தாள்..

ஹேய் வேணாம் குட்டிமா நேரம் காலம் தெரியாம இப்படி பாத்து வைக்காத அப்பறம் இன்னைக்கு பங்ஷன் நடந்தாமாறி தான்..என்றவாறே காயவிட பட்டிருந்த அவள் முடியை கைகளால் அளந்தான்..அவள் இதழ் நோக்கி குனிந்தவனை ஜுனியர் ஒரு உதை கொடுத்து நிறுத்தினார்..;);)

குட்டிமா உன் ஜீனியர் உதைக்குறான் சொல்லி வை என் பொண்டாட்டி நா அப்படி தான் இருப்பேன்..

ஹா ஹா பின்ன இன்னைக்கோ நாளைக்கோநு வெளிய வர ஒரு ஆள் ரெடியா இருக்காரு நீங்க இப்படி ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா தட்டி கேக்க மாட்டானா??

எல்லாம் என் நேரம் தனியாவே உன்ன சமாளிக்க முடியாது இதுல இன்னோன்னு வேற ராம் ரொம்ப பாவம்டா நீ.,சரி மகி நீ ரெடியாகு நா வந்துட்றேன்..

ந்து நிமிடத்தில் கையில் மாலையோடு வந்தவன் தாய்மையின் பூரிப்போடு கண்ணாடியில் தன்னை ரசித்தபடி நின்றவளை பின்னிருந்து இதமாய் அணைத்து கொண்டான்..என் குட்டிங்க ரெண்டுமே அழகாதான் இருக்கீங்க வாங்க போலாம் பங்ஷன் உங்களுக்குதான்..என மெதுவாய் அழைத்து கொண்டு போனான்..

உபயகுசல சிரஜீவன பிரசுதஹரித மஞ்சுளபர

சித்தாரே சஞ்சாரே

அதர ருச்சித மதுரிதபக சுதனகனக பிரசமநிரத

பாங்கல்யே மாங்கல்யே மமதம சமி சமதசசத

முகமனசுத சுபநலஇவ சுசுத சகித காமம்

ஹிரகரகித பாவம் ஆனந்த போகம்

ஆஜீவ காலம் பாசானு பந்தம்

காலானு காலம் தெய்வானு சூலம்

காம்யாச்ச சிஜ்ஜின்

காமயே

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்

அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து

உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே

……. ……

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி

என் கண்கள் ஓரம் நீர்த்துளி

….. …….. …….. …….

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

சேரில் அவளை உக்கார வைத்துவிட்டு நகர நல்லபடியாக நிகழ்ச்சி ஆரம்பமானது..ஒவ்வொருவராய்  வளையல் அடுக்க சந்தன குங்குமத்தோடு லஷ்மி வடிவாய் இருந்தாள் மகி..ராஜியும் விஜியும் அவளை பார்த்து பார்த்து உவகை கொண்டனர்..இப்போது ராம் கையில் வளையலோடு வந்தான்..நேற்றுதான் திருமணத்திற்கு மெஹந்தி போட்டு விட்டது போலிருந்தது அவனுக்கு..காதலோடு அதை தன்னவளுக்கு அணிவித்தான்..

ராஜியும் விஜியும் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கினார்கள் என்றால் மகியோ அவர்களிடம் ரொம்பவே செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள்,..மதிய நேரம் அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல வந்தவன் அவள் வாயாடுவதை பார்த்து அது நடக்காது என்ற முடிவுக்கு வந்தான்..

மகி ரூம்ல போய் படுத்துட்டேவாவது பேசுடா எவ்ளோ நேரம் உக்காந்துட்டேயிருப்ப..-ராம்..

இல்ல ராம் அம்மா எனக்கு பிடிச்ச பால் கொழுக்கட்டை செய்ய போய்ருக்காங்க ஏனோ சாப்பிடனும் போல இருக்கு..அதான் அதுவரை அத்தம்மாவோட பேசிட்டு இருக்கேன்..

மகிம்மா அவன் சொல்றது கரெக்ட் தான் வா ரூம்ல படுத்துட்டே பேசு அம்மா எடுத்துட்டு வரட்டும்..

அங்கு ஏனோ ராஜியை உக்கார வைத்துவிட்டு தான் படுப்பதற்கு கஷ்டமாயிருந்தது..அவளின் தயக்கத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ..வா மகி என் மடில தல வச்சு படுத்துக்கோ..

ஐயோ பரவால்ல அத்தம்மா..எனக்கு இப்போ படுக்கனும்னுலா இல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.