அடுத்ததாக மகி சென்ற இடம் பரணியிடமும் ராஜசேகரிடமும்..பெண்களிடம் கேட்டால் கண்டிப்பாக மறுப்பு வருமென்று தெரியும் எனவே இங்கு வந்து நின்றாள்..அப்பா அப்பா ப்ளீஸ்ப்பா இதுக்கு மட்டும் பெர்மிஷன் வாங்கி குடுங்க..அணண்ணா நீயாவது சொல்லுண்ணா..
டேய் ராம் மகி இல்லாம என் கல்யாணம் எப்படிடா? ?அவ வவரட்டும் நாம எல்லாரும் அவகூடதான இருக்கோம் அப்பறம் என்ன??
மச்சி நீ வேற ஏன்டா விட்டா நா இவள இப்போவே ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்துக்கலாம்ங்கிற ஐடியால இருக்கேன்..திடீர்நு பெயின் வந்துட்டா அந்த பதட்டத்துலயே நா மயங்கி விழுந்துருவேனோநு பயமாயிருக்கு..
அவனின் நிலைமை உணர்ந்தவன்,மகிம்மா ராம் சொல்றதும் கரெக்ட் தான இந்த நேரத்துல அவ்ளோ கூட்டத்துல..
டேய் அண்ணா..உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு..எப்படியிருந்தாலும் நீ உன் ப்ரெண்ட்க்கு தான சப்போர்ட் பண்ணுவ பேசாத போ இரு இரு சாக்ட்சிட்ட சொல்லி உன்ன ஒரு வழிக்கு கொண்டு வரேன்..அப்பாபா ப்ளீஸ் ப்ளீஸ்..என கெஞ்ச ஆரம்பிக்க..
அதற்குள் அனைவரும் வந்துவிட விஜி மகியை அதட்டினார்..அவள் பாவமாய் ராஜசேகரை பார்க்க,சரி விடு விஜி ஏதோ ஆசை படுறா..டெலிவரிக்கு தான் இன்னும் பத்து நாள் ஆகும்நு சொல்லிருக்காங்கல..நம்ம வீட்டு கல்யாணம்தான பரவால்ல..ரொம்ப டயர்டா பீல் பண்ணா ராம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரட்டும்..அவரை எதிர்த்து பேச தோன்றாமல் ஒத்து கொண்டார் விஜி..
ராஜசேகரின் பின்னிருந்து மகி ராமை பார்த்து வவ்வவ்வேவே என அழகு காட்ட ராமோ தலையில் அடித்து கொண்டான்..இவளே ஒரு எல்.கே.ஜி இதுல இவளுக்கு ஒரு குழந்தை ராம்..உன் எதிர்காலம் பிரகாசமாயிருக்க போதுடா..அது மட்டும் கன்பார்ம்..
கல்யாண கலாட்டாவோடு நம்ம குட்டி நியூ ஜாய்னியையும் நெக்ஸ்ட் எபிஸோட்ல மீட் பண்ணுவோம் ப்ரெண்ட்ஸ்....
தொடரும்
{kunena_discuss:952}