(Reading time: 22 - 44 minutes)

கி….என ஒரு பார்வை பார்த்தார் அவளே சென்று படுத்துக்கொண்டாள்..சிறிது நேரத்தில் ராம் வந்து எட்டிபார்க்க ராஜியின் மடியிலேயே உறங்கி கொண்டிருந்தாள் மகி..எப்போது தூங்கினாளோ அவளுக்கே தெரியாது..புன்னகையோடு அங்கிருந்த சேரில் அமர்ந்த ராம்,என்னம்மா எவ்ளோ நேரம் இப்படியே உக்காந்துருப்பீங்க இருங்க நா அவள பெட்ல படுக்க வைக்குறேன்..

பரவால்ல ராம்..இந்தமாறி நேரத்துல தூக்கத்துல பதறிட கூடாது அதனால தான் அப்படியே விட்டுட்டேன் எனக்கு ஒண்ணும் கஷ்டமாயில்ல..

என்னம்மா இப்படி உலகம் தெரியாத மாமியாரா இருக்க இப்படிலா இடம் குடுக்காதம்மா அப்பறம் உன் பேரன் பேத்தியோட இவ மல்லுக்கு நிப்பா உன் மடில தூங்குறதுக்கு என்று கூறி சிரித்தான்..

போடா படவா என்ன கலகம் மூட்டி விடுறியா..அவளுக்கு போக தான்டா மத்தவங்களுக்கே..என்று கூறும் போதே குரல் கம்மியது..

ம்மாமாமா

கண்ணை துடைத்து கொண்டவர்,வயசுல தான்டா இவ சின்னவ..எவ்ளோ பக்குவம் இல்ல நடந்ததெல்லாம் நீ சொன்னப்போ எனக்கு உயிரே போய்டுச்சு..நா உங்கப்பாவ ஹாஸ்பிட்டல்ல பாத்ததுக்கே அவ்ளோ ஆர்பாட்டம் பண்ணேன் ஆனா மகி தைரியமா அந்த கேஸை முடிக்க வச்சு இப்போ உன்ன டிப்பார்ட்மெண்ட்ல சேர்றதுக்கும் ஒத்துக்கிட்டாளேடா..

அவளுக்கு தெரியும்மா எனக்கு இந்த வேலை எவ்ளோ பிடிக்கும்நு என்று கூறும் போது ஒருவித பெருமிதமிருந்தது அவன் குரலில்..

ரவு லேப்டாப்பில் மும்மரமாக ஏதோ பார்த்து கொண்டிருந்தவனின் அருகில் வந்து உரசி கொண்டு நின்றாள் மகி..

என்ன குட்டிமா என்ன கேக்கனும் என்ட??

எப்படிப்பா??

ம்ம் என் பொண்டாட்டி அவ்ளோ நல்லவளாச்சே ஏதாவது காரியம் ஆகணும்னா தானே இப்படி நல்லவளா இருப்பா சொல்லு என்ன??

இல்ல டாக்டர் எனி டைம் டெலிவரி இருக்கும்நு சொல்லிருக்காங்கல..

ஆமா..

எல்லாரும் ஹாஸ்பிட்டல் வருவீங்கல..

என்னடீ கேள்வி இது..

நீங்களும் கூட இருப்பீங்க….

இல்ல நா போய் ஜாலியா ஊர்சுத்திட்டு இருப்பேன்..என்ன வேணும் உனக்கு??

அது..எனக்கு பெயின் வந்ததிலேயிருந்து நம்ம குட்டி வெளியே வர வர நீங்க என் பக்கத்துலேயே இருப்பீங்களா??

ஏய் நா ஏன் உயிரோட இருக்கேன்னு பாத்துட்டியா..அம்மா தாயே எனக்குலா நீ சும்மா அழுதாலே தாங்க முடியாது இதுல டெலிவரிக்கு ம்ம்ம் அவ்ளோ தான் அப்பறம் என்னையும் அந்த ஹாஸ்பிட்டல்லயே அட்மிட் பண்ண வேண்டியதுதான்..

ராம் ப்ளீஸ்….

இதுக்குதான்டீ அன்னைக்கே அவ்ளோ சொன்னேன்..இவ்ளோ பயப்படுறவ வாய மூடிட்டு இருந்துருக்கனும் இப்போ வந்து இருக்குறவன டென்ஷன் படுத்திட்டு..

மகியின் முகம் வாடிவிட்டது..கண்ணீர் வரவா வேண்டாமா என நிற்றக..தன் தவறை உணர்ந்தவன் அவளை கட்டிலில் அமர்த்தினான்..சாரிடா..உன்னவிட செம பயத்துல இருக்கேன் நான் அதான் அப்படி பேசிட்டேன்..

பரவால்லப்பா..அவள் வாய் கூறினாலும் முகம் இன்னும் தெளிவடையவில்லை..

சரி இப்போ என்ன நா உன் பக்கத்துலயேதான் இருப்பேன் போதுமா..நம்ம ஜுனியர் அப்பாவ ரொம்ப சோதிக்காம சீக்கிரமா வந்துடுவான்..இப்போவாவது சிரியேன் ப்ளீஸ்..

தேங்க் யு ராம் என அவனிடத்தில் சாய்ந்து கொண்டாள்..

மறுநாள் பரணியின் ரிசப்ஷன் இருந்ததால் எல்லாரும் பரபரப்பாய் அலைந்து கொண்டிருந்தனர்..

குட்டிமா இந்தா ஜீஸ் குடி..

அய்யோ அந்த மாதுளை ஜுஸ் தான போர்..இனி என் வாழ்க்கைல மாதுளை பக்கமே போமாட்டேன்..சரி அத விடுங்க இன்னைக்கு ரிசப்ஷனுக்கு இந்த ரெண்டுல எந்த ட்ரெஸ் போட்டுகட்டும்??

என்னது???நாம ரிசப்ஷன் போறோம்நு யாரு சொன்னா??உன்ன எங்கேயும் அலைய வைக்குறதாயில்ல..நாளாக நாளாக பயமாயிருக்கு..இவ என்னடானா பிக்னிக் கிளம்புற மாறி கேக்குறா பாரு..

ராம் இதெல்லாம் அநியாயம் நா நல்லாதானே இருக்கேன்..நா கண்டிப்பா வருவேன்..நைட் கூட நா அங்கேயே ஸ்டே பண்ணிக்குறேன் சாக்ட்சிட்ட சொன்னா அரேண்ஜ் பண்ணுவா நாளைக்கு மேரேஜ் முடிஞ்ச அடுத்த செகண்ட் நாம வந்துரலாம்..அப்படீயே எதுவும்னா கூட அங்கிருந்து ஹாஸ்பிட்டல் பக்கம்தான்..ப்ளீஸ் ராம்..கர்ப்பமாயிருக்குற பொண்ணு ஆச பட்டு கேக்குறேன் நோ சொல்லாதீங்க..

ஆமாண்டீ ஆனா ஊனா இதை ஒண்ண சொல்லிடு இதுக்காகவே எங்களுக்கு புள்ள பெத்துக்குற ஆப்ஷன கடவுள் குடுத்துருக்கலாம்..இப்படி சொல்லி சொல்லியே வேணும்ங்கிறதெல்லாம் சாதிச்சுக்கலாம்..ஆனாலும் இந்த ஒரு விஷயத்துல நோ தான்..முடியவே முடியாது மகி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.