(Reading time: 18 - 36 minutes)

28. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ன்னை தஞ்சம் புகுந்தவளை அணைக்க துடித்த கரங்களை கட்டுப்படுத்திக்கொண்டவனுக்கு அவளை விட்டு எப்படி விலக என்று தெரியவில்லை…

சற்று நேரம் அவன் அப்படியே இருக்க, அவளிடத்தில் எந்த அசைவும் இல்லை…

அவளது சிரம், அவனது நெஞ்சில் சாய்ந்திருக்க, அவள் கரங்கள் அவன் முதுகை வளைத்திருக்க, அவளிடமிருந்து சீரான சுவாசமும் வந்து கொண்டிருக்க, அசைவு மட்டும் இல்லை….

அதை அவன் உணர்ந்தானோ என்னவோ, மெல்ல அவளை விட்டு அவன் விலக, அவள் கரங்கள் தானாகவே நழுவியது அவனிடமிருந்து…

தன் மேல் சாய்ந்திருந்த அவளது சிரம் இன்னமும் தன் நெஞ்சில் இருக்க, மெல்ல அவள் நழுவினாள்….

கீழே விழாது அவளை சட்டென்று பிடித்துக்கொண்டவன், அவள் முகத்தினைப் பார்க்க, ஆழ்ந்த துயிலில் இருப்பது போன்ற நிலையில் இருந்தாள் அவள்….

“சதி…..”

அவன் மெல்ல அழைக்க, “ம்ம்ம்ம்…….” என்றாள் அவள்…

மெல்ல அவன் இதழில் இருந்து புன்னகை உதிக்க, அவளை பூப்போல் மென்மையாக கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, போர்வையையும் போற்றிவிட்டு அருகில் நின்று சற்று நேரம் அவள் முகத்தினையேப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

பின் அங்கிருந்து விருட்டென்று வெளியேறி, தன் அறைக்கு அவன் வந்து சேர, அவன் மனதினுள் சற்று நிம்மதி வந்திருந்தது…

அந்த நிம்மதியோடு அவன் கடிகாரத்தைப் பார்க்க, மணி 5 ஆக இருந்தது…

4.30 மணிக்கு கண்ட அதிகாலை கனவு பலித்திடுமோ என்ற அச்சம் மனதினுள் எழ ஆரம்பித்த வேளையே, சதியும், அவளை சூழ்ந்து நிற்கும் நெருப்பும் கண் முன்னே காட்சியாய் விரிய, தனக்குள் ஒரு போர்க்களத்தையே உணர்ந்தான் ஜெய்….

பொழுது புலர்ந்தும் புலராத அந்த விடியற்காலை வேளையில்,

“ம்ம்ம்ம்….” என்ற சிணுங்கலுடன் புரண்டு படுத்த சதிக்கு மெல்ல விழிப்பு ஏற்பட, பட்டென்று எழுந்து அமர்ந்தாள் அவள்…

கட்டிலை விட்டு கீழே இறங்கி அவள் அங்கும் இங்கும் தேட, அவள் தேடுதலை ஒரு கேள்விக்குறியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் தைஜூ…

“என்னடி இப்படி முழிக்கிற?... உன்னை எவ்வளவு நேரமா எழுப்புறது?... சீக்கிரம் எழுந்திரு…”

தைஜூ சதியை அவசரப்படுத்த, சதியோ புருவம் உயர்த்தினாள்…

“இன்னும் என்ன சதி?... எழுந்திரு… நேரமாச்சு….”

தைஜூ பேச்சிற்கு பதில் பேசாது, எழுந்து கொண்டவள், விறுவிறுவென்று நடந்து  சென்று கதவினைத் திறந்து எட்டிப்பார்க்க,

தைஜூ அவள் செய்கையைக் கண்டு அவளைப் பின் தொடர்ந்தாள்…

“யாரடி தேடுற?...”

அவள் கேள்விக்கு மௌனத்தினையே பதிலாக கொடுத்தாள் சதி…

“கேட்குறேன்ல சொல்லு….”

“ஒன்னுமில்ல தைஜூ…”

“பொய் சொல்லாத சதி… உண்மையை சொல்லு…”

“இல்ல அவர் இங்க வந்திருந்தார்… என் முன்னாடி இங்க தான் நின்னுட்டிருந்தார்… திடீர்னு எப்படி அவர் காணாம போவார்?... அதும் நான் இங்க இருக்கும்போதே….”

சதி பரிதவிப்புடன் அவனைத் தேட, அவளின் கைப்பிடித்து கட்டிலில் அமர வைத்தாள் தைஜூ…

“கனவு எதுவும் கண்டீயா சதி?...”

“கனவா?... இல்ல தைஜூ… நிஜமாவே அவர் இங்க வந்தார் தைஜூ… நான் பார்த்தேன்…”

“அப்படி அது நிஜமா இருந்திருந்தா, உன் முன்னாடி இருந்த ஜெய் அண்ணா எப்படி மாயமா மறைஞ்சு போக முடியும்?...”

“ஹ்ம்ம்… அதுதான் எனக்குமே குழப்பமா இருக்கு…”

“சீக்கிரமே உன் குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்… இனியும் உன்னை இப்படியே விட்டா, நீ சரிபடமாட்ட… உனக்கு என் அண்ணா மேல லவ் ரொம்ப முத்திட்டு… இஷான் கிட்ட சொல்லி அடுத்த கட்ட வேலையை ஆரம்பிக்க சொல்லுறது தான் சரின்னு நினைக்குறேன்…”

தைஜூ கொஞ்சம் உறுதியாகவும், கொஞ்சம் கேலியுடனும் கூற, சதி அவளையே பார்த்தாள்…

“சரி… என்னைப் பார்த்தது போதும்…. வா சதி… மணி 6 ஆச்சு….”

சதியை எழுப்பி அழைத்துச் செல்ல முயற்சித்தாள் தைஜூ….

“முகூர்த்தம், 7 மணிக்கு மேல தான தைஜூ?...…”

“ஆமாடா… இப்போவே கிளம்பினா தான சரியா இருக்கும்… அதான் சொல்லுறேன்… வா…”

“ஹ்ம்ம்… சரி…”

“நீ போய் முதல்ல குளிச்சிட்டு ரெடியாகு… நான் இப்போ வந்துடுறேன்…”

சதியிடம் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் தைஜூ….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.