அவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ஜெசிகா, "இப்போ என்ன செய்யப்போற வசந்த்? அவளை உன் வீட்டுலயே தங்கவைக்க போறியா?"
"தற்சமயத்துக்கு அதை தான் முடிவு செஞ்சிருக்கோம். இதை வெளிய யார் கிட்டயும் சொல்லாத"
"ஜான் தான் இதுல சம்மந்தப்பட்டிருக்கான். அவனை போலீஸ்ல மாட்டிவிடலாம்னு கொஞ்சம் சந்தோசப்பட்டுட்டேன். இதுல நீயும் இருக்கிறதால ஒண்ணும் பண்ண முடியாம போச்சு வசந்த்"
"அடிப்பாவி .நல்ல எண்ணம்டி உனக்கு" என்றான் ஜான் கோபமாக,
"நாளைக்கு நான் உன் வீட்டுக்கு வரேன் வசந்த். நாம அங்க பேசிக்கலாம்" என்று கூறி எழுந்து செல்ல முற்பட்ட ஜெசிகா, "இந்த துப்பாக்கியை நீங்களே வச்சிக்கோங்க" என்றபடி மேசையில் வைத்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்..
துப்பாக்கியை சடாரென எடுத்த ஜான். ஜெசிக்காவின் தலையில் அழுத்தமாக வைத்து, அவள் கையைப் பிடித்து இழுத்தான். "நானும் பாத்துட்டே இருக்கேன், ரொம்ப டார்ச்சர் பண்ற. உன்ன இங்கயே போட்டு தள்ளிடுவேன்"
"எங்க, சுடு பாக்கலாம். அடச்சீ! எடு கையை!" என்று கூறி அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ஜெசிகா அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ஜான், "ராட்சசி கொஞ்சமாச்சும் பயப்படுறாளா பாரு" என்று முணுமுணுத்தான்
அந்நேரம் அங்கு வந்த அல்போன்ஸ் ஜானிடமிருந்த துப்பாக்கியைப் பார்த்து அலறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
"டேய்! அதை ஒளிச்சு வச்சு தொலைடா" என்று கோபமாக சொன்னான் வசந்த்.
தலையில் அடித்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான் ஜான்.
தொடரும்...
{kunena_discuss:983}