“நேத்தும் உன்னாலதா அவள மிஸ் பண்ணிட்டே… இன்னைக்குமா?” சலிப்பும் வேதனையும் கலந்திருந்த நண்பனின் குரல் கௌதமை என்னவோ செய்தது.
சட்டென சாவியை கிரணிடம் கொடுத்தான்.
“தேங்க்ஸ் மச்சா!”
“சாரி கிரண்! எனக்கு தெரிஞ்சு உனக்கு எந்த துரோகமும் பண்ணலடா” வருந்தினான் கௌதம்.
நண்பன் வருத்தப்படுவதை விரும்பாதவன், “நீ ஃபீல் பண்றதுக்கு ஒன்னுமேயில்லை. நேத்தைக்கு கருடா மாலில் உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்போதா இவள பார்த்தே. எப்படி சொல்லுறதுன்னு தெரியல. இவள பார்த்த உடனேயே ஒரு புது சந்தோஷம் மனசுக்குள்ள. எனக்கே தெரியாம அவளை கொஞ்ச நேர ஃபாலோ பண்ணிட்டிருந்தே. நீ வரர்துக்கு கொஞ்ச முன்னாடி அவ யாரையோ தேடினா. நான் அவளை ஃபாலோ பண்ணினது தெரிஞ்சுடுச்சோன்னு பயந்தே… அவளை முதல் முறை நெகடிவ் நோட்ல மீட் செய்ய விரும்பாம அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்னாடி மறைஞ்சுக்கிட்டே… அந்த நேரத்துலதா நீ வந்தே நான் அவளை மிஸ் பண்ணிட்டே”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...
படிக்க தவறாதீர்கள்..
“சாரிடா கிரண்!”
“எதுக்குடா சாரி சொல்லிட்டிருக்க! இன்னைக்கு அவளை நான் பார்க்க காரணமே நீதானேடா. படத்துக்கு போகலாம்னு இப்போ வரலைன்னாதா அவளை மிஸ் பண்ணியிருப்பே” புன்னகையோடு சொன்னான் கிரண்.
“நான் வர கொஞ்ச லேட்டாயிடுச்சு நேத்து. அதுக்குள்ள நீ ஒரு காதல் கோட்டையே கட்டியிருக்க” நண்பனுக்காக மகிழ்ந்தான் கௌதம்.
“க்ரீன் சிக்னல் விழுந்திருச்சு பாரு! டோண்ட் மிஸ் ஹெர் திஸ் டைம்” உறுதியாக கிரணின் தோள் பற்றினான் கௌதம்.
அந்த பற்றுதலில் ஆயிரம் மடங்கு நம்பிக்கையுற்றவன் தன் மனம் கவர்ந்தவளை பின்தொடர்ந்தான்.
சரயூ காலேஜை அடைந்தவுடன் அவளை தொடர்ந்து வந்த நண்பர்களிருவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
“நம்ம காலேஜுல படிக்குறாளா?! ரொம்பவே உன் பக்கத்தில் வந்துட்டா… கவலைய விடு மச்சா இந்த பொண்ணு உனக்குதா, கிரண்!
சரயூ சேரவிருக்கும் சிப்பி சஞ்சய் அல்லது கிரண்?
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}