(Reading time: 12 - 24 minutes)

10. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ன்று காலை சரணின் நினைவுகள் லேசாக மங்க தொடங்கின.இதயத்தில் ஒருவித வலி பரவுவதை அவரால் உணர முடிந்தது.அந்த வலி நாடி நரம்பெல்லாம் பரவி மிகுந்த வேதனையை அவருக்கு நல்கியது.சிறு அசைவையும் நிகழ்த்த முடியவில்லை.சுவாசிக்கும் காற்று நாசியுள் நுழைய மறுக்க மூச்சுக்காற்று பாரமாய் ஆனது அவருக்கு!!அருகிலும் எவருமில்லை...தன் மெத்தையின் சீலையை இறுக அழுத்தியப்படி வலியால் துடித்தார்.

"தாத்தா!"-ஏதோ ஒன்றை கூறுவதற்காக அவரது அறைக்கதவை திறந்தாள் கீதா.

"தாத்தா?"-பாட்டனாரின் நிலைக்கண்டு பதறியவள்,பதற்றத்தில் கத்திவிட்டாள்.

ஓடிசென்று அவர் அருகே அமர்ந்தாள்.

"என்னாச்சு தாத்தா?என்ன பண்ணுது?அப்பா!இங்கே வாங்களேன்!"-கத்தினாள்.சத்தம் கேட்டு ஓடி வந்தார் ராகுல்.

"அப்பா?"-தந்தையின் நிலைக்கண்டு திகைத்துப் போனான்.

"என்னாச்சுப்பா??"-சரணால் பதிலேதும் கூற இயலவில்லை.

சில நொடிகளில் இல்லமே பரபரப்பானது!!

அனைவரும் சரணை சூழ்ந்திருக்க,பதறியப்படி ஓடி வந்தான் சிவா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

"தாத்தா?என்ன பண்ணுது??"-அவன் விரைவாக செயல்பட்டான்.சரணின் நெஞ்சினை தேய்த்தான்.அவரது விழிகளை பரிசோதித்தான்.பாட்டனாரை மடியில் தாங்கி அமர்ந்திருந்த கீதா அவன் செய்கையில் குழம்பி போனாள்.

"ஆரா!என் கப்போர்ட்ல ஒரு பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும் எடுத்துட்டு வா!"-அவனது பேச்சில் நினைவை அடைந்தவள்,அவன் வேண்டுதலுக்கு பணிந்து விரைந்தாள்.

"ஒண்ணுமில்லை!பயப்படாதீங்க!நான் வந்துட்டேன்ல!இனி உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்!"-தைரியமளித்தான் சிவா.சில நொடிகளில் முதலுதவி பெட்டியோடு வந்தாள் ஆராத்யா.அதை வாங்கி அதிலிருந்த இதயத்துடிப்பை அளவிடும் கருவியை செவிகளில் மாட்டி,ஆதித்யாவின் இதயத்துடிப்பை பரிசோதித்தான் சிவா.

அப்பெட்டியிலிருந்த ஒரு மாத்திரையை எடுத்து சரணின் வாயில் திணித்தான்.

அது சில நிமிடங்களில் ஆதித்யாவின் இதயவலியை குறைத்து மறைய வைத்தது.

பெருமூச்சை வாங்கினான் சிவா.

"என்னப்பா ஆச்சு?"

"ஒண்ணுமில்லை அங்கிள்!மைல்ட் அட்டாக் தான்!பயப்பட வேண்டியது இல்லை.கொஞ்ச நேரம் அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்!"-நடந்தவற்றை எல்லாம் இமை விரியப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா.

சிவாவின் பார்வை என்னவென்ற கேள்வியை அவள் மேல் வீசியது.

"நீ..நீங்க டாக்டரா??"-அவன் சாதாரணமாய் ஆம் என்று கண்ணடித்தான்.

"உன்னை மாதிரின்னு நினைச்சியா?சிவா தம்பி ஆஸ்ரேலியாவுல லீடிங் கார்டியோ!"-அவளது விழிகள் மேலும் விரிந்தன.

"ஓ..மை..காட்!"-அவள் கூறிய விதத்தில் சட்டென சிரித்துவிட்டான் சிவா.எதேர்சையாக அவனது விழிகள் எதிரிலிருந்த கீதாவின் விழிகளை சந்தித்தன.அவ்வளவு நேரமும் ஆச்சரியம் கலந்த பார்வையால் அவனை துளைத்துக் கொண்டிருந்தவள்,சட்டென தனது பார்வையை எங்கோ திசை திருப்பினாள்.மனதில் ஏதோ புது உணர்வு பிறக்க,சிறு புன்னகையை அனைவர் முன்னிலையும் விடுத்து,அவ்விடத்தை தியாகித்தான் சிவா.

"மாமா!மாமா!"-வேகமாக ஓடி வந்து அவனை தடுத்தாள்ஆராத்யா.

"ம்??"

"நீங்க நிஜமாவே டாக்டரா?"

"ஏன் கேட்கிற?"

"என்னால நம்ப முடியலை...டாக்டருக்கு உண்டான எந்த அறிகுறியும் தெரியலை!"

"வேணும்னா ஒரு இன்ஜக்ஷன் போடுறேன்!அப்போ கன்பார்ம் ஆயிடும்!"

"ப்ச்..."

"என்ன?"

"ஆஸ்ரேலியாவுல லீடிங் கார்டியோ!"

"ஆமா..!"

"அப்போ ஆஸ்ரேலியாவுல தங்கிடுவீங்களா??அப்படின்னா,என் அக்காவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேன் போங்க!"

"நீ இங்கே இருந்து என்ன பண்ண போற?அங்கே வந்துடு!"

"ஆ..அது முடியாதே!"

"ஆமா..!வருண் பாவம்ல!"

"ம்...!ம்??அது எப்படி உங்களுக்கு..?"

"குழந்தைக் கூட கண்டுப்பிடித்திடும்!என்னை என்ன அந்த அளவுக்கு தயிர்சாதம்னு நினைச்சியா?"-அவள் முகத்தில் நாணம் படர்ந்தது.

"சரி சரி!ரொம்ப வெட்கப்படாதே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.