(Reading time: 12 - 24 minutes)

"ப்போ வலி இருக்கா தாத்தா?"-அக்கறையோடு வினவினான் சிவா.

"இல்லப்பா!"-புன்னகையோடு பதில் தந்தார் ஆதித்யா.

அவர் அருகில் அமர்ந்திருந்த கீதாவின் முகத்தில் கவலை ரேகைகள்!!

"உங்களுக்கு என்ன பிரச்சனை தாத்தா?"-சிவாவின் அந்தக் கேள்வி அவளை வெகுவாக குழப்பியது.

"உங்க பி.பி.அதிகமாகி அதனால தான் உங்களுக்கு அட்டாக் வந்திருக்கு!ட்ரீட்மண்ட் தந்த கொஞ்ச நேரத்துல மறுபடியும் எல்லாம் நார்மலாயிடுச்சு!இது பயப்படுற மாதிரியான அட்டாக் இல்லை!ஸோ...உங்களுக்கு நிச்சயமா ஏதோ ஒரு ஸ்ரெஸ் இருக்கு!"-அவன் உறுதியாக கூற,கீதாவின் விழிகள் ஒரு கிலியோடு சரணை துளைத்தன.

சரணிடமிருந்து மீண்டும் புன்னகை!!

"எனக்கென்னப்பா?ஒரே கவலை தான்!என் கீதா கல்யாணத்தை நான் பார்க்கணும்!அவ சந்தோஷமா வாழுறதை நான் பார்க்கணும்!எங்க வீட்டோட முதல் வாரிசு இல்லையா!அதான்...வேற ஒண்ணுமில்லை!"-பட்டென அவர் கூற,இருவரின் முகத்திலும் சிறிது அதிர்ச்சி!!கீதாவின் விழிகளில் மட்டும் சில கண்ணீர்த்துளிகளும் உடன் சேர்ந்தன!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"நான் தானா?அனைத்திற்கும் காரணகர்த்தா நான் தானா??எனக்காக தான் துடிக்கிறரா?"-அவள் மனம் பலத்தோடு சேர்த்து தன் வைராக்கியத்தையும் முழுவதுமாக இழந்தது.அவள் அமைதியாக அங்கிருந்து வெளியேற,சிவாவின் மனதில் அந்நிகழ்வு ஆழமாய் தைக்கப்பட்டது.

"என்னங்க?ஒரு மாதிரி இருக்கிங்க?"-வாட்டத்துடன் எதிர்பட்ட புதல்வியை கண்ட ராகுலின் மனம் துணுக்குற்றது.

"அப்பா!"

"சொல்லுங்க!"

"நான் நிச்சயத்தையும்,கல்யாணத்தையும் கொஞ்ச நாள் தள்ளிப்போட சொல்லி இருந்தேன்ல!"

"ஆமாங்க!நான் கூட நிச்சயத்தை மூணு மாசம் தள்ளிப் போட்டிருக்கேனே!"

"அதுக்கு அவசியமில்லைப்பா!எனக்கு சிவாவை பிடித்திருக்கு!அவரை கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம்!இனி காத்திருக்க தேவையில்லைப்பா!"-அவள் கூறியது தான் தாமதம்,ராகுலின் முகத்தில் கொள்ளை ஆனந்தம்!!

"என்னங்க சொல்றீங்க?நிஜமாவா?ஐயோ...!நீங்க சொல்லிட்டீங்கல்ல,அடுத்த வாரமே உங்க நிச்சயத்தை ஊர் அறிய பண்றேன்! அடுத்த மாசமே கல்யாணத்தை திருவிழாவா கொண்டாடுறேன் பாருங்க!"-குதூகலத்தில் அகமகிழ்ந்தவர்,

"சதி!"-என்று தன் அர்த்தாங்கினியிடம் தன் மனதினை பகிர சென்றார்.

இதழ் மட்டும் கூறி,இதயம் மறுக்க வாழ்வனைத்தும் எல்லையை அடைந்த ஓர் எண்ணம் கீதாவின் எண்ணங்களை வியாபிக்க,எதுக்குறித்தும் சிந்திக்காமல் தன் அறைக்கு சென்றாள் அவள்.கண்ணீரில் தன்னை முழுதுமாக கரைப்பதற்காய்!!!

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.