03. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ
மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் மலரல
உந்தன் ரசிகை நானும் உனக்கே புரியவில்லை
எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை.......
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை........
நானுமோர் பெண்ணென பிறந்த பலனை
இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்னும்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டு இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக் கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அதுதான் சரித்திரமோ....
அருகிலிருக்கும் கோவிலில் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு வீட்டிலேயே சின்ன கெட்டுகெதர் மாதிரியான ஏற்பாடு செய்திருந்தனர்..புடவை வேஷ்டி இன்னபிற பொருட்களெல்லாம் வாங்க,விருந்தினர்களை அழைக்கவென நேரம் ஓடிக்கொண்டிருக்க..கார்த்திக் பிஸியாயிருந்தால் ஷரவன் ஷரவந்தியோடு சென்று முடித்து வருவான்..அன்று வெள்ளிகிழமை சேகரின் வீட்டிற்கு ஆடிட்டிங் வேலையாக செல்ல வேண்டியிருப்பதால் அப்படியே அவரை அழைத்து வந்து விடலாமென ஷரவந்தியையும் அழைத்து கொண்டு கிளம்பினான்..
அண்ணா எதுக்கும் நீயே மொதல்ல உள்ள போ எனக்கு பயமாயிருக்கு என சிரித்தவாறே அவள் பின்னோக்கி நகர செல்லமாய் அவள் காதை திருகினான்..அவகிட்ட எதையாவது போட்டு குடுத்துறாத அப்பறம் அதுக்கும் ரிவெண்ச் எடுக்குறேன்னு எதாவது பண்ணி வச்சுடுவா..என்று பேசியவாறே உள்ளே நுழைந்தனர்..
சிவாவும் சேகரும் ஏதோ அபிஷியலாய் பேசி கொண்டிருக்க இவர்களை பார்த்ததும் புன்னகையோடு வரவேற்றனர்..ஏனோ சிவாவின் முகத்தில் ஷரவந்தியை பார்த்தபோது எக்ஸ்ட்ரா பளிச் தோன்றி மறைந்ததாய் தோன்றியது கார்த்திக்கிற்கு..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
வா கார்த்திக்..ஷரவந்தி தான இது..எப்படிம்மா இருக்க..
நல்லாயிருக்கேன் அங்கிள்..
வேலைல ஜாய்ன் பைண்ணிட்டியா??
ம்ம் போய்ட்டு இருக்கேன் அங்கிள்..
இது சிவா என் அண்ணண் பையன்..வக்கீலா இருக்கான் என அவரே இருவருக்குமான அறிமுக படலத்தை முடித்தார்..ஷரவந்தி அவனை பார்த்து சிநேகமாய் சிரிக்க சிவாவோ இந்த உலகத்திலேயே இல்லை..
சரி என்ன சாப்டுறீங்க??
சார் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..அப்பா அம்மாக்கு சஷ்டிபூர்த்தி பண்ணலாம்நு முடிவு பண்ணிருக்கோம்..அதான் இன்வைட் பண்ணலாமேநு வந்தோம்..அப்பா அம்மாக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல..சோ க்ரண்ட்டா பண்ணல.. ரொம்ப க்ளோஸ் சர்க்ள்ள மட்டும் இன்வைட் பண்ணலாம்நு..தனியா வந்தா நல்லாயிருக்காதுநு தான் இவளையும் கூட்டிட்டு வந்தேன் கண்டிப்பா பேமிலியோட வந்துருங்க சார்..சிவா நீங்களும் தான் அப்பா அம்மாவோட கண்டிப்பா வரணும்.
நல்லவிஷயம் தான கார்த்திக்..எத்தனை பேருக்கு இப்படி புள்ளைங்க கேக்காமலே தேவையானத பண்ணுவாங்க..நாங்க கண்டிப்பா வரோம்ப்பா..அதற்குள் துளசி ஜுஸோடு அங்கு வர அவரை குங்குமம் கொடுத்து அழைத்தாள் ஷரவந்தி..